முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.061.திருவேகம்பம்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.061.திருவேகம்பம்
7.061.திருவேகம்பம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இது திருவிளம்பூதூரென்று வழங்குகிறது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர்.
தேவியார் - காமாட்சியம்மை.
624 |
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை சீலந் தான்பெரி தும்முடை யானைச் ஏல வார்குழ லாள்உமை நங்கை கால காலனைக் கம்பன்எம் மானைக் |
7.061.1 |
நஞ்சினைத் தான் விரும்பி உண்டு, அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும், யாவர்க்கும், முதல்வனும், தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும், தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும், மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை, தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும், காலகாலனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!
625 |
உற்ற வர்க்குத வும்பெரு மானை பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப் அற்ற மில்புக ழாள் உமை நங்கை கற்றை வார்சடைக் கம்பன்எம் மானைக் |
7.061.2 |
தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கு நலம் செய்கின்ற பெருமானும், ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும், தேவர்கட்குத் தலைவனும், தன்னை விடாது பற்றினவர்க்கு, பெரிய பற்றுக்கோடாய் நிற்பவனும், தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று, அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய, அழிவில்லாத புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை விரும்பி வழிபடப் பெற்ற, கற்றையான நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.
626 |
திரியும் முப்புரந் தீப்பிழம் பாகச் கரியின் ஈருரி போர்த்துகந் தானைக் வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை பெரிய கம்பனை எங்கள்பி ரானைக் |
7.061.3 |
வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து, அக்காலை, சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும், யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும், மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும், வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய, 'உமை' என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.
627 |
குண்ட லந்திகழ் காதுடை யானைக் வண்டலம் பும்மலர்க் கொன்றையி னானை கெண்டை யந்தடங் கண்உமை நங்கை கண்ட நஞ்சுடைக் கம்பன்எம் மானைக் |
7.061.4 |
குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும், கூற்றுவனை உதைத்துக் கொன்ற கொடுமையான தொழிலை உடையவனும், வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும், கொலைத் தொழிலையுடைய பாம்பு பிறையைச் சேர்ந்து வாழும் சடையை உடையவனும் ஆகிய, கெண்டைமீன் போலும் பெரிய கண்களையுடைய, 'உமை' என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற, கண்டத்தில் நஞ்சினையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.
628 |
வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை எல்லை யில்புக ழாள்உமை நங்கை நல்ல கம்பனை எங்கள்பி ரானைக் |
7.061.5 |
யாவரையும் வெல்லும் தன்மையுடைய, வெள்ளிய மழு ஒன்றை உடையவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சதுரப்பாடுடையவனும், அடியார்களுக்குத் துன்பங்களைப் போக்கி அருள்செய்ய வல்லவனும், அரிய வேதங்களையும் அவற்றின் அங்கங்களையும் செய்ய வல்லவனும் ஆகிய, அளவற்ற புகழை யுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை, எந்நாளும், துதித்து வழிபடப்பெற்ற, நன்மையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!
629 |
திங்கள் தங்கிய சடையுடை யானைத் சங்க வெண்குழைக் காதுடை யானைச் மங்கை நங்கை மலைமகள் கண்டு கங்கை யாளனைக் கம்பன்எம் மானைக் |
7.061.6 |
பிறை தங்கியுள்ள சடையையுடையவனும், தேவர்க்குத் தேவனும், வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற, 'வெள்ளிய குழையை யணிந்த காதினையுடையவனும், சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய, என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி, துதித்து வழிபடப்பெற்ற, கங்கையை யணிந்த, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.
630 |
விண்ண வர்தொழு தேத்தநின் றானை நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை கண்ணு மூன்றுடைக் கம்பன்எம் மானைக் |
7.061.7 |
தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும்,வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும், தன்னை அடைந்தவர்கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும், நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய, எண்ணில்லாத பழையவான புகழை யுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை, எந்நாளும் துதித்து வழிபடப்பெற்ற, கண்களும் மூன்று உடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.
631 |
சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள் பந்தித் தவினைப் பற்றறுப் பானைப் அந்த மில்புக ழாள்உமை நங்கை கந்த வார்சடைக் கம்பன்எம் மானைக் |
7.061.8 |
நாள்தோறும் தன்னையே சிந்தித்து, துயிலெழுங் காலத்துத் தன்னையே நினைத்து எழுவார்களது உள்ளத்தில் விளங்குகின்ற மங்கலப் பொருளானவனும், உயிர்களைப் பிணித்துள்ள வினைத் தொடக்கை அறுப்பவனும், பால் முதலிய ஆனஞ்சும் ஆடுதலை விரும்பியவனும் ஆகிய, முடிவில்லாத புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை விரும்பி வழிபடப்பெற்ற, கொன்றை முதலிய பூக்களின் மணத்தையுடைய, நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக்காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!
632 |
வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம் நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி பரந்த தொல்புக ழாள்உமை நங்கை கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக் |
7.061.9 |
தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால், வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும், தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய, பரவிய, பழைய புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை முன்னிலையாகவும், படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற, எட்டுக் கைகளையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!
633 |
எள்கல் இன்றி இமையவர் கோனை உள்ளத் துள்கி உகந்துமை நங்கை வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி கள்ளக் கம்பனை எங்கள்பி ரானைக் |
7.061.10 |
தேவர் பெருமானாகிய சிவபெருமானை, அவனது ஒரு கூறாகிய உமாதேவிதானே, தான் வழிபடவேண்டுவது இல்லை என்று இகழ்தல் செய்யாது வழிபட விரும்பி, ஏனைவழிபாடு செய்வாருள் ஒருத்திபோலவே நின்று, முன்னர் உள்ளத்துள்ளே நினைந்து செய்யும் வழிபாட்டினை முடித்து, பின்பு, புறத்தே வழிபடச் சென்று, அவ்வழிபாட்டில் தலைப்பட்டு நின்ற முறைமையைக் கண்டு, தான் அவ்விடத்துக் கம்பையாற்றின்கண் பெருவெள்ளத்தைத் தோற்றுவித்து வெருட்ட, வஞ்சிக்கொடி போல்பவளாகிய அவள் அஞ்சி ஓடித் தன்னைத் தழுவிக்கொள்ள, அதன்பின் அவள்முன் வெளிப்பட்டு நின்ற கள்வனாகிய, திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!
634 |
பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப் கற்ற வர்பர வப்படு வானைக் கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக் நற்ற மிழிவை ஈரைந்தும் வல்லார் |
7.061.11 |
குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூரனாகிய நம்பியாரூரன், ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும், மெய்ந்நூல்களைக் கற்றவர்கள், 'இவன் எம் பெரிய பெருமான்' என்று எப்போதும் மறவாது துதிக்கப்படுபவனும், யாவர்க்கும் தலைவனும், கூத்தாடுதலை உடையவனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன், கண்பெற்றவாறு வியப்பு என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய இவை பத்தினையும் பாட வல்லவர். நன்னெறியாற்பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 59 | 60 | 61 | 62 | 63 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவேகம்பம் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வழிபடப், கண்அடி, திருவேகம்பத்தில், யேன்பெற்ற, காணுதற்கு, பெற்றவாறு, வியப்பு, அடியேன், மானைக், என்னும், கம்பன்எம், துதித்து, உடையவனும், பெருமானைக், விரும்பி, எம்பெருமானைக், வல்லவனும், வழிபடப்பெற்ற, ழாள்உமை, என்றும், நின்று, எந்நாளும், எங்கள்பி, வெள்ளிய, ரானைக், தலைவனும், கம்பனை, புகழையுடையவளாகிய, யுடையவளாகிய, திருமுறை, எங்கள், திருச்சிற்றம்பலம், கடலில், வெல்லும், யானைச், மலைமகள், யணிந்த, வழிபடச், சென்று, முதலிய, தன்னையே, தொல்புக, நாள்தோறும், கொன்றை, காதினையுடையவனும், னார்க்கென்றும், வானைக், நினைப்பவரது, றன்னைப், சடையையுடைய, மில்புக, திருவேகம்பம், தேவர்கள், முதல்வனும், யானைக், விளங்குகின்ற, காதுடை, யாவர்க்கும், வானத்தில், கண்களையுடைய, வார்சடைக்