முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.060.திருவிடைமருதூர்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.060.திருவிடைமருதூர்
7.060.திருவிடைமருதூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசுவரர்.
தேவியார் - நலமுலைநாயகியம்மை.
614 |
கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற் பழுது நானுழன் றுள்தடு மாறிப் அழுது நீயிருந் தென்செய்தி மனனே இழுதை யேனுக்கொர் உய்வகை யருளாய் |
7.060.1 |
என் அப்பனே, திருவிடைமருதூரில் எழுந்தருளி யிருக்கின்ற எம் குலதேவனே, கழுதையானது குங்குமப் பொதியைச் சுமந்து மெய்வருந்தினால், அதனால் சிறப்பொன்றும் இல்லாமை கருதி, அனைவரும் நகைப்பர்; அது போல, அடியேன் உன் தொண்டினை மேற்கொண்டு அதன் மெய்ப்பயனைப் பெறாமல் மனந்தடுமாறி, வெள்ளத்தில் உண்டாகின்ற சுழியிடை அகப்பட்டவன் போல, இவ்வுலக வாழ்க்கையில் அலமருவேனாயினேன்; 'மனமே, நீ நம் இறைவனுக்கு மெய்த்தொண்டு செய்யாது கவலைப்பட்டிருந்து என்ன பெறப் போகின்றாய்' என்று நெஞ்சிற்கு அறிவுறுக்கவும், 'அங்கணனே, அரனே' என்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத அறிவில்லேனாகிய எனக்கு, நீ, மனம் இரங்கி, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய்.
615 |
நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே அரைத்த மஞ்சள தாவதை யறிந்தேன் உரைப்பன் நானுன சேவடி சேர இரைப்ப னேனுக்கொர் உய்வகை யருளாய் |
7.060.2 |
திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, நரையும் மூப்பும் பிணியும் இப்பொழுதே வரும்; அவற்றால் இவ்வுடம்பு, அரைக்கப்பட்ட மஞ்சள் போல அழகிழந் தொழிவதாம்; இவற்றை அறிந்தேனாயினும், நன்மை இல்லாத செயல்களையே பற்றாகத் துணிந்துசெய்து இளைத்தேன். அதனால், கூற்றுவனுக்கு அஞ்சுதல் உடையனாயினேன்; ஆகவே, இதுபோழ்து நான் உன் திருவடிகளை அடைய உன்னை வேண்டுவேனாயினேன்; அறிவது அறிந்து வாழும் வாழ்க்கையைச் சிறிதும் அறியாத, ஆரவாரச் சொற்களையுடையேனாகிய எனக்கு. நீ, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய்.
616 |
புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற் என்னெ னக்கினி இற்றைக்கு நாளை முன்ன மேஉன சேவடி சேரா இன்னம் என்றனக் குய்வகை யருளாய் |
7.060.3 |
என் தந்தையே, திருவிடைமருதூரில் எழுந்தருளி யிருக்கின்ற எம் குலதேவனே, புல்லின் நுனியில் உள்ள பனித்துளி, வெவ்வியவாகிய கிரணங்களையுடைய பகலவனை எதிர்ப்பட்டாற் போல்வதாகிய இம்மானுட வாழ்க்கை ஒரு பொருளாதல் இல்லை; ஏனெனில், 'இன்றைக்கு இன்பம் உளதாகும்; நாளைக்கு இன்பம் உளதாகும்' என்று நாள்தோறும் நினைந்து ஏமாறினேன்; இனிமேற்றான், எனக்கு என்ன உண்டாக இருக்கின்றது! ஆதலால், முன்பே உன்னுடைய செவ்விய திருவடியைச் சேர விரும்பாது, கொண்டது விடாத மூர்க்கனான நிலையிலே காலமெல்லாம் போய்விட்டன; இப்பொழுதே எனக்கு நீ, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய்.
617 |
முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய சிந்தித் தேமனம் வைக்கவு மாட்டேன் அந்தி வெண்பிறை சூடும்எம் மானே எந்தை நீஎனக் குய்வகை யருளாய் |
7.060.4 |
மாலைக்காலத்தில் தோன்றுகின்ற பிறையைச் சூடியவனே, திருவாரூரில் இருக்கும் தேவர் தலைவனே, என் தந்தையே திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, முற்பிறப்பிற் செய்த வினைகள் இப்பிறப்பில் வந்து துன்புறுத்துதலினால், அவற்றின் வயப்பட்டு மூர்க்கனாகி நிற்றலிலே காலமெல்லாம் போயின; நன்மை தீமைகளைச் சிந்தித்து, உலகப்பற்றை அகற்றி உன்னை மனத்தில் இருத்தவும் மாட்டாதேனாயினேன்; உலகியலிலும், இரப்பவர்கட்கு அவர் விரும்பியதொன்றை ஒரு சிறிது ஈதலும் செய்திலேன்; எனக்கு, நீ. உய்யும் நெறியை வழங்கியருளாய்.
618 |
அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள் கழித்துக் காற்பெய்து போயின பின்னைக் விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னை இழித்தெ னென்றனக் குய்வகை யருளாய் |
7.060.5 |
திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, நன்மைகளையெல்லாம் அழிப்பவராகிய ஓர் ஐவர் என்னை ஆளுதலுடையர்; அவ் வைவரும் என்னை ஆளுதலை நன்றாகச் செய்து, 'இனி இவனாற் பயனில்லை' என்று கழித்து, என்னைத் தங்கள் காற்கீழ்ப் போகட்டுப் போய்விட்ட பின்பு. முடிவில் உனக்கே நான் சுமையாயினேன்; அதன்பின்பே நான் விழிப்படைந்து, உண்மையை உணர்ந்தேன்; மானுடவாழ்க்கைதான் இத்தன்மையதேயென்றால், இனி இதனை யான் விரும்பேன்; இதனை மிக்க இழிவுடையதாக உணர்ந்துவிட்டேன்; எனக்கு, நீ, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய்.
619 |
குற்றந் தன்னொடு குணம்பல பெருக்கிக் கற்றி லேன்கலை கள்பல ஞானங் பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன் எற்று ளேன்எனக் குய்வகை யருளாய் |
7.060.6 |
திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, யான், அழகிய, நுண்ணிய இடையினையுடைய மகளிரோடு கூடி மயங்கி நின்று, தீவினையும் நல்வினையுமாகிய இருவினைகளை மிகுதியாகச் செய்தும், மெய்ந்நூல்கள் பலவற்றிற் புகுந்து ஞானத்தை யுணராதும் மிகவுங் கொடுமையான செயல்களைச் செய்தேன்; அதனால், பற்றத் தக்கதொரு பற்றுக்கோடு இலனாயினேன்; இவ்வாறு பலவாகிய பாவங்களைச் செய்து பாவியாகிய யான், எதன் பொருட்டு உயிர்வாழ்கின்றேன்! எனக்கு, நீ, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய்.
620 |
கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக் விடுக்க கிற்றிலேன் வேட்கையுஞ் சினமும் நடுக்க முற்றதோர் மூப்புவந் தெய்த இடுக்க ணுற்றனன் உய்வகை யருளாய் |
7.060.7 |
திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, ஈகை வழியாகப் புகழைத் தரத்தக்க பொருளை, உலோபமும், பகைமையும் காரணமாகப் பிறருக்குயான் கொடுக்க மாட்டேன்; ஆசையும், கோபமும் ஆகிய இவைகளை ஒழிக்கமாட்டேன்; ஐம்புலன்கள்மேற் செல்கின்ற ஆசைகளை விடநினைத்தால், யான் அவற்றின் வயத்தேனல்லது, அவை என் வயத்தன அல்ல; அதனால், உடல் நடுங்குதல் பொருந்தியதாகிய, 'மூப்பு' என்பதொன்று வந்து அடைய, அப்போது இயமனது ஏவலர் என்னைக் கொண்டு சென்று நரகத்தில் இடுதலை நினைத்து அஞ்சித் துன்புறுவேனாயினேன்; எனக்கு, நீ, உய்யும் நெறியொன்றை வழங்கி யருளாய்.
621 |
ஐவ கைஅரை யர்அவர் ஆகி அவ்வ கைஅவர் வேண்டுவ தானால் செய்வ கையறி யேன்சிவ லோகா எவ்வ கைஎனக் குய்வகை யருளாய் |
7.060.8 |
சிவலோகத்திற்குத் தலைவனே, நெருப்புப் போலும் நிறம் உடையவனே, சிவபெருமானே, தீயோடு நின்று ஆடுபவனே, திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, ஐவர் வேறுபட்ட தன்மையையுடைய அரசராய் என்னை ஆட்சி கொண்டு ஒருகாலும் விட்டு நீங்காதிருக்கின்றனர். அவ்வாறு ஆவர், தாம் தாம் வேறு வேறுவகையில் என்னை ஆள விரும்பினால், யான் அவர் வழியே அவர் வேண்டுமாற்றிலெல்லாம் சென்று நடந்து, செய்வது இன்னது என்று அறிகின்றிலேன்; எனக்கு உய்யும் நெறியாவது எந்நெறி? அதனை வழங்கியருளாய்.
622 |
ஏழை மானுட வின்பினை நோக்கி வாழை தான்பழுக் குந்நமக் கென்று கூழை மாந்தர்தஞ் செல்கதிப் பக்கம் ஏழை யேனுக்கோர் உய்வகை யருளாய் |
7.060.9 |
திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, அறிவில்லாத, மானுட இன்பத்தைக் கருதி, முன்னர்ப்பழத்தைத் தந்த வாழை, இனியும் நமக்கு அவ்வாறே தரும் என்று கருதுவாரைப் போல, இளமையுடையராய் இன்பம் தந்த மகளிர் என்றும் இவ்வாறே இருந்து இன்பம் தருவர் என்று கருதும் மயக்கமாகிய வலையுள் அகப்பட்டு, அதனானே, வஞ்சனையையுடைய வலிய வினையென்னும் வலையிலும் அகப்பட்டு, அறிவு முதிராத பொது மக்கள் செல்லும் வழியிடத்து நின்று, அறிவின் இயல்பையும், அதற்குப் புலனாய் நிற்கும் பொருளின் இயல்பையும் சிறிதும் அறியாத எளியேனுக்கு, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய்.
623 |
அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி இரைக்குங் காவிரித் தென்கரை தன்மேல் உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை நரைப்பு மூப்பொடு நடலையு மின்றி |
7.060.10 |
அரைக்கப்படுகின்ற சந்தனக் கட்டையையும், அகிற் கட்டையையும் இருமருங்கும் தள்ளிக்கொண்டு, மலை நெல்லைத் தாளோடு மேல்இட்டுக்கொண்டு, நிறைந்து ஒலிக்கின்ற காவிரியாற்றின் தென்கரைமேல் உள்ள திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனாகிய பெருமானைப் பாடிய, நம்பி யாரூரனாகிய எனது உணர்வு மிக்க இப்பாடல்களை, மனத்தால் விரும்பிப் பாட வல்லவர்கள், நரைத்தலும், மூத்தலும், இறத்தலும் இன்றி அவ்விறைவனது செவ்விய திருவடிகளை அடைவர்; இது திண்ணம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 58 | 59 | 60 | 61 | 62 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவிடைமருதூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - யருளாய், திருவிடைமருதூரில், ருதுறை, குலதேவனே, எனக்கு, வழங்கியருளாய், எழுந்தருளியிருக்கின்ற, உய்யும், யெந்தைபி, நெறியொன்றை, குய்வகை, இன்பம், உய்வகை, அதனால், நின்று, எந்தைபி, செய்தேன், தலைவனே, மாட்டேன், உளதாகும், அவற்றின், செவ்விய, காலமெல்லாம், கட்டையையும், தந்தையே, கொண்டு, சென்று, கொடுக்க, கிற்றிலேன், அகப்பட்டு, செய்து, சிறிதும், யிருக்கின்ற, நரைப்பு, மூப்பொடு, எழுந்தருளி, எந்தாய், திருமுறை, திருச்சிற்றம்பலம், இப்பொழுதே, திருவடிகளை, மூர்க்க, னாகிக், வாழ்க்கை, போலும், திருவிடைமருதூர், அறியாத, கழிந்தன