முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.085.திருச்சிராப்பள்ளி
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.085.திருச்சிராப்பள்ளி
5.085.திருச்சிராப்பள்ளி
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தாயுமானேசுவரர்.
தேவியார் - மட்டுவார்குழலம்மை.
1910 | மட்டு வார்குழ லாளொடு மால்விடை இட்ட மாவுகந் தேறு மிறைவனார் கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயும் சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே. |
5.085.1 |
சிராப்பள்ளிச் செல்வர், தேன் ஒழுகும் நீண்ட குழலை உடைய உமாதேவியோடு பெரிய விடையினை விருப்பத்தினோடு உகந்து ஏறும் இறைவர்; பாசக்கட்டு நீத்தவர்க்கு இன்னருளே புரியும் மேலோர்.
1911 | அரிய யன்தலை வெட்டிவட் டாடினார் அரிய யன்தொழு தேத்து மரும்பொருள் பெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார் அரிய யன்தொழ அங்கிருப் பார்களே. |
5.085.2 |
திருமால், அயன் ஆகியோர் தலைகளை வெட்டி வட்டுப்போல் ஆடியவரும், அவ்விருவரும் தொழுது வணங்கும்அரும்பொருளும், பெரியவரும் ஆகிய அப்பெருமானுக்குரிய சிராப்பள்ளியைச் சிந்தையுள் பேணும் அன்பர், திருமாலும் பிரமனும் தொழச் சிவலோகத்திருப்பார்கள்.
1912 | அரிச்சி ராப்பக லைவரா லாட்டுண்டு சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள் திருச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை நரிச்சி ராது நடக்கும் நடக்குமே. |
5.085.3 |
நெஞ்சே! ஐம்புலக்கள்வரால் இராப்பகலாக அரிக்கப்பெற்று ஆட்டப்பெற்று வருந்தியிராமல் இருக்க ஓர் உபாயம் சொல்லக் கேட்பாயாக! திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை பொருந்தி இருக்காமல் உன்னைவிட்டு நடக்கும்; நடக்கும்!
1913 | தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய் பேய னேனையும் ஆண்ட பெருந்தகை தேய நாதன் சிராப்பள்ளி மேவிய நாய னாரென நம்வினை நாசமே. |
5.085.10 |
தாயுமாகி எனக்குத் தலைகண்ணுமாகிப் பேயனேனாகிய என்னையும் ஆட்கொண்டருளிய பெருந்தகையும் தேயங்கட்கெல்லாம் நாதனும் ஆகிய பெருமானைச் சிராப்பள்ளி மேவிய நாயனார் என்று கூறி வாழ்த்த நம்வினை நாசம் அடையும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 83 | 84 | 85 | 86 | 87 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சிராப்பள்ளி - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நடக்கும், திருச்சிராப்பள்ளி, நம்வினை, சிராப்பள்ளி, சிராப்பள்ளிச், திருமுறை, திருச்சிற்றம்பலம், தீவினை