முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.094.திருவெங்குரு
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.094.திருவெங்குரு
3.094.திருவெங்குரு
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
திருவெங்குரு என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
3810 | விண்ணவர்
தொழுதெழு வெங்குரு மேவிய சுண்ணவெண் பொடியணி வீரே சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல் எண்ணவல் லாரிட ரிலரே |
3.094.1 |
தேவர்கள் தொழுது போற்றுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும், சுண்ணம் போன்ற வெண்மையான திருநீற்றினை அணிந்துள்ள சிவபெருமானே! சுண்ணம் போன்ற வெண்மையான திருநீற்றினை அணியும் பெருமானாகிய உம் தொழத்தக்க திருவடிகளைத் தியானிக்க வல்லவர் துன்பம் அற்றவர்கள் ஆவர்.
3811 | வேதியர்
தொழுதெழு வெங்குரு மேவிய ஆதிய வருமறை யீரே ஆதிய வருமறை யீருமை யலர்கொடு ஓதிய ருணர்வுடை யோரே |
3.094.2 |
நால்வேதங்களையும் ஐயந்திரிபறக் கற்ற அந்தணர்கள் வழிபடுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும், முதன்மையான வேதத்தின் பொருளானவரே! முதன்மையான வேதத்தின் பொருளானவரான உம்மை மலர்கள் கொண்டு பூசித்துத், தோத்திரம் செய்பவர்கள் சிவஞானம் உடையவர்கள் ஆவர்.
3812 | விளங்குதண்
பொழிலணி வெங்குருமேவிய இளம்பிறை யணிசடை யீரே இளம்பிறை யணிசடை யீரும திணையடி உளங்கொள வுறுபிணி யிலரே |
3.094.3 |
பெருமையுடன் விளங்குகின்ற குளிர்ந்த சோலைகளையுடைய அழகிய திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், இளம்பிறைச்சந்திரனை அணிந்த சடையினையுடைய சிவபெருமானே! இளம்பிறைச் சந்திரனைச் சடையில் அணிந்துள்ள உம்முடைய இரண்டு திருவடிகளையும் மனத்தால் நினைத்துத் தியானிப்பவர்கள் உற்றபிணிகள் இல்லாதவராவர்.
3813 | விண்டலர்
பொழிலணி வெங்குரு மேவிய வண்டமர் வளர்சடை யீரே வண்டமர் வளர்சடை யீருமை வாழ்த்துமத் தொண்டர்க டுயர்பிணி யிலரே |
3.094.4 |
முறுக்குடைந்து விரிகின்ற மலர்களையுடைய சோலைகளால் அழகுடன் திகழும் திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும், வண்டுகள் விரும்பும் நீண்ட சடையுடைய சிவபெருமானே! வண்டுகள் விரும்பும் சடையினையுடைய பெருமானாகிய உம்மை வாழ்த்தும் சிறப்புடைய தொண்டர்கள் துயரும், பிணியும் அற்றவர்கள் ஆவர்.
3814 | மிக்கவர்
தொழுதெழு வெங்குரு மேவிய அக்கினொ டரவசைத் தீரே அக்கினொ டரவசைத் தீரும தடியிணை தக்கவ ருறுவது தவமே |
3.094.5 |
அன்பின் மிக்கார் தொழுது எழுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அக்குப்பாசியோடு பாம்பையும் அணிந்துள்ள சிவபெருமானே! அக்குப்பாசியோடு பாம்பையும் அணிந்துள்ள பெருமானாகிய உம் இணையடிகளைத் துதிக்கும் தகுதிபெற்ற அடியவர்கள் பெறுவது சிறந்த தவத்தின் பயனாகும்.
3815 | வெந்தவெண்
பொடியணி வெங்குரு மேவிய அந்தமில் பெருமையி னீரே அந்தமில் பெருமையி னீருமை யலர்கொடு சிந்தைசெய் வோர்வினை சிதைவே |
3.094.6 |
சுடப்பட்ட வெண்ணிறத் திருவெண்ணீற்றினை அணிந்து, திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற அழிவில்லாத புகழுடைய சிவபெருமானே! அழிதல் இல்லாத புகழுடைய உம்மை மலர்கள் கொண்டு வழிபட்டுத் தியானிப்பவர்களின் வினைகள் சிதைந்து போகும்.
3816 | விழமல்கு
பொழிலணி வெங்குரு மேவிய அழன்மல்கு மங்கையி னீரே அழன்மல்கு மங்கையி னீருமை யலர்கொடு தொழவல்லல் கெடுவது துணிவே |
3.094.7 |
திருவிழாக்கள் நிறைந்ததும், சோலைகள் அழகு செய்வதுமான திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் நெருப்பேந்திய அழகிய திருக்கரத்தையுடைய சிவ பெருமானே! நெருப்பேந்திய அழகிய திருக்கரமுடைய உம்மை மலர்கள் கொண்டு வழிபடுபவர்களின் துன்பங்கள் கெடுவது நிச்சயம்.
3817 | வித்தக
மறையவர் வெங்குரு மேவிய மத்தநன் மலர்புனை வீரே மத்தநன் மலர்புனை வீரும தடிதொழுஞ் சித்தம துடையவர் திருவே |
3.094.8 |
சாமர்த்தியமுடைய, நான்மறைகளைக் கற்றுவல்ல அந்தணர்கள் நிறைந்த திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, ஊமத்த நன்மலரினைச் சூடியுள்ள, சிவபெருமானே! ஊமத்தம் மலர் சூடிய உம் திருவடிகளைத் தொழும் சித்தமுடையவர்கள் எல்லாச் செல்வங்களும் பெற்றவர் ஆவார்.
3818 | மேலவர்
தொழுதெழு வெங்குரு மேவிய ஆலநன் மணிமிடற் றீரே ஆலநன் மணிமிடற் றீரும தடிதொழுஞ் சீலம துடையவர் திருவே |
3.094.9 |
மேலான பக்தர்கள் தொழுதெழுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, விடம் தங்கிய அழகிய கண்டத்தை உடைய சிவபெருமானே! விடம் தங்கிய அழகிய கண்டத்தையுடையவராகிய உம்திருவடிகளைத் தொழுகின்ற நல்லொழுக்கம் உடையவர்களே பேரின்பம் பெறுவர்.
3819 | விரைமல்கு பொழிலணி வெங்குரு மேவிய அரைமல்கு புலியத ளீரே அரைமல்கு புலியத ளீரும தடியிணை உரைமல்கு புகழவ ருயர்வே |
3.094.10 |
நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அரையில் கட்டிய புலித்தோல் ஆடையையுடைய சிவபெருமானே! அரையில் கட்டிய புலித்தோலாடையையுடைய பெருமானாகிய உம் இணையடிகளை நிரம்பிய சொற்களால் புகழ்பவர்களே உயர்வு அடைவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 92 | 93 | 94 | 95 | 96 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவெங்குரு - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவெங்குரு, என்னும், விரும்பி, வெங்குரு, சிவபெருமானே, திருத்தலத்தில், வீற்றிருந்தருளும், வீற்றிருந்தருளுகின்ற, அணிந்துள்ள, பெருமானாகிய, தொழுதெழு, பொழிலணி, பொடியணி, கொண்டு, மலர்கள், யலர்கொடு, னீருமை, புகழுடைய, அழன்மல்கு, மங்கையி, பெருமையி, அரையில், கட்டிய, அக்குப்பாசியோடு, பாம்பையும், அந்தமில், புலியத, அரைமல்கு, மலர்புனை, தடிதொழுஞ், துடையவர், மணிமிடற், மத்தநன், தடியிணை, தங்கிய, கெடுவது, சோலைகள், நெருப்பேந்திய, திருவே, வளர்சடை, திருச்சிற்றம்பலம், திருவடிகளைத், அற்றவர்கள், வருமறை, திருநீற்றினை, வெண்மையான, தொழுது, சுண்ணவெண், திருத்தலத்தை, சுண்ணம், யீருமை, அந்தணர்கள், வண்டமர், வண்டுகள், விரும்பும், அக்கினொ, சடையினையுடைய, திருமுறை, முதன்மையான, வேதத்தின், இளம்பிறை, யணிசடை, டரவசைத்