முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.106.திருவலஞ்சுழி
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.106.திருவலஞ்சுழி

3.106.திருவலஞ்சுழி
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காப்பகத்தீசுவரர்.
தேவியார் - மங்களநாயகியம்மை.
3934 | பள்ளம
தாய படர்சடைமேற் வெள்ளம தார விரும்பிநின்ற வள்ளல் வலஞ்சுழி வாணனென்று உள்ள முருக வுணருமின்க |
3.106.1 |
பள்ளம் போன்ற உட்குழிவுடைய படர்ந்த சடைமீது அலைகளையுடைய கங்கை நீர்ப் பெருக்கை விரும்பித் தாங்கி நின்ற வேறுபட்ட தன்மையுடையவர் சிவபெருமான்.அவர் இடபவாகனத்தில் ஏறும் வள்ளல். திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர். அப்பெருமானை நினைந்து போற்றி உள்ளம் உருக உணருமின்கள். உறுநோய் உங்களை அணுகாது.
3935 | காரணி
வெள்ளை மதியஞ்சூடிக் தாரணி கொன்றையுந் தண்ணெருக்குந் வாரணி கொங்கைநல் லாள்தனோடும் ஊரணி பெய்பலி கொண்டுகந்த |
3.106.2 |
சிவபெருமான், கருமேகத்திற்கு அழகு செய்கின்ற வெண்ணிறச் சந்திரனைச் சூடி, இயற்கை மணம் கமழும் சிவந்த சடைமேல் அழகிய கொன்றைமாலையையும், குளிர்ச்சி பொருந்திய எருக்கம் பூ மாலையையும் நிரம்ப அணிந்துள்ளவர். கச்சணிந்த அழகிய கொங்கைகளை உடைய உமாதேவியோடு திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர். ஊர்கள்தோறும் சென்று அவர் பிச்சையேற்று மகிழ்ந்த பெருமையைச் சிற்றறிவுடைய யாம் எங்ஙனம் அறிவோம்? அறிய இயலவில்லை.
3936 | பொன்னிய
லுந்திரு மேனிதன்மேற் மின்னிய லுஞ்சடை தாழவேழ மன்னிய மாமறை யோர்கள்போற்றும் உன்னிய சிந்தையி னீங்ககில்லார்க் |
3.106.3 |
சிவபெருமான் பொன்போன்ற அழகிய திருமேனி மீது முப்புரிநூல் அழகுற விளங்குமாறு அணிந்துள்ளவர். மின்னலைப் போல ஒளிவீசும் சடைதாழ, யானையின் தோலை உரித்துப் போர்த்தவர். ஆடும் பாம்பை அணிந்தவர். நிலைபெற்ற, பெருமையுடைய வேதங்களில் வல்ல அந்தணர்கள் போற்றும் திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை இடையறாது சிந்தித்து வழிபடும் அடியவர்கட்கு எல்லா நலன்களும் உண்டாகும். நோய் நீங்கும்.
3937 | விடையொரு
பாலொரு பால்விரும்பு சடையொரு பாலொடு பாலிடங்கொள் நடையொரு பாலொரு பால்சிலம்பு அடையொரு பாலடை யாதசெய்யுஞ் |
3.106.4 |
சிவபெருமானுக்கு இடபவாகனம் ஒரு பக்கம், விரும்பிச் சேர்ந்து மெல்லியல்புடைய கங்காதேவி ஒரு பக்கம். விரிந்து பரந்த சடை ஒரு பக்கம். தாழ்ந்த கூந்தலையுடைய உமாதேவி ஒரு பக்கம். ஏறுபோல் பீடுநடை பயிலும் திருவடி ஒருபக்கம். சிலம்பு அணிந்த திருவடி ஒருபக்கம். திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை நாளும் வழிபடுக. முற்கூறியவை வேறெங்கும் சென்றடையாது சிவனையே அடையும் சிறப்பைச் சிற்றறிவுடைய நாம் அறியோம்.
3938 | கையம
ரும்மழு நாகம்வீணை மெய்யம ரும்பொடிப் பூசிவீசுங் பையம ரும்மர வாடவாடும் மையம ரும்பொழில் சூழும்வேலி |
3.106.5 |
இறைவன் கையில் மழு, பாம்பு, வீணை, கலைமான்கன்று என்பனவற்றை ஏந்தியுள்ளவர். திருமேனியில் திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவர். ஒளியை வீசி அசைகின்ற குழையும் தோடும் காதில் அணிந்துள்ளவர். படமாடும் பாம்பை அணிந்து நடனமாடுபவர். படர்ந்த சடையையுடைய அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், நாற்புறமும் வேலிபோன்று, இருளடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழி என்னும் மாநகரமாகும்.
3939 | தண்டொடு
சூலந் தழையவேந்தித் கண்டிடு பெய்பலி பேணிநாணார் வண்டிடு மொய்பொழில் சூழ்ந்தமாட தொண்டொடு கூடித் துதைந்துநின்ற |
3.106.6 |
சிவபெருமான் தண்டு, சூலம் இவற்றை ஒளிமிக ஏந்தியுள்ளவர். உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர். இடப்படுகின்ற பிச்சையை விரும்பி ஏற்பதில் வெட்கப்படாதவர். யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர். வண்டுகள் மொய்க்கின்ற சோலைகள் சூழ்ந்த மாடங்களையுடைய திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர். அப்பெருமான் திருத்தொண்டர்களோடு கூடி நெருங்கி நின்று அருள்வதை உணர்ந்து, நாமும் அவருடைய தொடர்பைத் தொடர்வோமாக!
3940 | கல்லிய
லும்மலை யங்கைநீங்க சொல்லிய லும்மதின் மூன்றுஞ்செற்ற மல்லிய லுந்திர டோளெம்மாதி புல்கிய வேந்தனைப் புல்கியேத்தி |
3.106.7 |
சிவபெருமான் கல்லின் தன்மை பொருந்திய மேருமலையை அதன் கடினத்தன்மை நீங்க வளைத்து, செருக்குற்ற திரிபுர அசுரர்களின், பழிச்சொல்லுக்கு இடமாகிய மும்மதில்களையும் அழித்தவர். ஒளிவடிவானவர். அடியவர்களின் இடர் நீங்க, மற்போர் பயின்ற திரண்ட தோளையுடைய எம் முதல்வராய்த் திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். மன்னுயிர்களை ஆளும் அரசரான அச்சிவபெருமானைச் சார்ந்து போற்றி வழிபடுபவர்கள் புண்ணியர்கள் ஆவர்.
3941 | வெஞ்சின
வாளரக்கன் வரையை அஞ்சுமொ ராறிரு நான்குமொன்று நஞ்சிருள் கண்டத்து நாதரென்று மஞ்சுல வும்பொழில் வண்டுகெண்டும் |
3.106.8 |
கடுஞ்சினமுடைய கொடிய அசுரனான இராவணன் தன் வலிமையால் கயிலை மலையைப் பெயர்க்க, அவன் இருபது தோள்களையும் அடர்த்தவர் சிவபெருமான். அவர் நஞ்சுண்டு இருண்ட அழகிய கண்டத்தையுடைய தலைவர். அவர் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள சோலைகளிலுள்ள மலர்களை வண்டுகள் காலால் கிண்டும் திரு வலஞ்சுழி என்னும் திருத்தலமாகும்.
3942 | ஏடிய
னான்முகன் சீர்நெடுமா கூடிய கூரெரி யாய்நிமிர்ந்த வாடிய வெண்டலை கையிலேந்தி பாடிய நான்மறை யாளர்செய்யுஞ் |
3.106.9 |
இதழ்களையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் காணமுடியாத வண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான். அவர் உலகோர் போற்றி வணங்குமாறு, வற்றிய பிரமகபாலத்தைக் கையிலேந்தி திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். எம் தலைவரான அவரை நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்லவர்கள் பாடிப் போற்றும் தன்மையில் அவர் புரியும் திருவிளையாடல்கள் பலபல வாகும்.
3943 | குண்டரும்
புத்தருங் கூறையின்றிக் தொண்டருந் தன்றொழில் பேணநின்ற வண்டம ரும்பொழின் மல்குபொன்னி பண்டொரு வேள்வி முனிந்துசெற்ற |
3.106.10 |
தீவினைக்கஞ்சாத சமணர்கள், ஆடையின்றிக் கூட்டமாயிருப்பவர்கள். அவர்களும் புத்தர்களும் இறைவனை உணராது கூறும் மொழிகளைத் தள்ளிவிடுங்கள். தொண்டர்கள் சரியைத் தொழிலில் விரும்பி வழிபட்டு நிற்க. கழலணிந்த திருவடிகளையுடைய சிவபெருமான் அழல் ஏந்தி ஆடுபவன். வண்டுகள் விரும்புகின்ற சோலைகளையுடையதும், காவிரியாறு வலஞ்சுழித்துப் பாய்கின்றதுமான திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் முன்னொரு காலத்தில் அவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைக் கோபித்து அழித்த தன்மையைப் பகர்வோமாக.
3944 | வாழியெம்
மானெனக் கெந்தைமேய காழியுண் ஞானசம் பந்தன்சொன்ன ஆழியிவ் வையகத் தேத்தவல்லா ஊழி யொருபெரு மின்பமோக்கும் |
3.106.11 |
எம் தலைவனும், தந்தையுமான, சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவலஞ்சுழி என்னும் மாநகரை வாழ்த்தி, சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய சிறந்த பயனைத் தரும் கருத்துக்கள் அடங்கிய தமிழ்மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஏத்த வல்லவர்களும், அவர்களுடைய சுற்றத்தார்களும் கடல் சூழ்ந்த இவ்வையகத்திலேயே பேரின்பம் துய்ப்பர். ஊழிக்காலத்திலும் நனிவிளங்கும் உயர்ந்த புகழடைவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 104 | 105 | 106 | 107 | 108 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவலஞ்சுழி - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவலஞ்சுழி, வலஞ்சுழி, என்னும், சிவபெருமான், திருத்தலத்தில், பக்கம், விரும்பி, சூழ்ந்த, வீற்றிருந்தருளும், மாநகரே, போற்றி, வண்டுகள், வீற்றிருந்தருளுகின்ற, அணிந்துள்ளவர், ஒருபக்கம், திருவடி, தொடர்பைத், வீற்றிருந்தருளுகின்றார், கையிலேந்தி, வளைத்து, சோலைகள், அப்பெருமான், ஏந்தியுள்ளவர், போற்றும், வீற்றிருந்தருளுபவர், பெய்பலி, படர்ந்த, வள்ளல், திருமுறை, திருச்சிற்றம்பலம், யறியோமே, பொருந்திய, சிவபெருமானை, பாலொரு, பாம்பை, உரித்துப், சிற்றறிவுடைய, யானையின், நாளும்