முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.107.திருநாரையூர்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.107.திருநாரையூர்
3.107.திருநாரையூர்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சௌந்தரேசர்.
தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.
3945 | கடலிடை
வெங்கடு நஞ்சமுண்ட உடலிடை யிற்பொடிப் பூசவல்லா அடலிடை யிற்சிலை தாங்கியெய்த நடலைவி னைத்தொகை தீர்த்துகந்தானிட |
3.107.1 |
கடலில் தோன்றிய வெப்பம் மிகுந்த கடுமையான நஞ்சையுண்ட கடவுள் இடபவாகனத்தில் ஏறி, திருமேனியில் திரு வெண்ணீற்றினைப் பூசி, உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக் கொண்டவர். முப்புர அசுரர்களுடன் போரிடும் சமயத்தில் மேரு மலையாகிய வில்லைத் தாங்கிக் கணைஎய்த பெருமான், தம்முடைய அடியார்கள் மேல் வரும் துன்பம்தரும் வினைத் தொகுதிகளைத் தொலைத்து மகிழ்பவர். இத்தகைய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருநாரையூர் என்னும் திருத்தலமாகும்.
3946 | விண்ணின்மின்
னேர்மதி துத்திநாகம் பெண்ணின்முன் னேமிக வைத்துகந்த நண்ணிய தன்னடி யார்களோடுந் றெண்ணுமி னும்வினை போகும்வண்ண |
3.107.2 |
ஆகாயத்தில் விளங்கும், மின்னல் போன்ற ஒளியுடைய சந்திரனையும், படப்புள்ளிகளையுடைய பாம்பினையும், விரிந்த கொன்றைமலரையும், கங்காதேவிக்கு முன்னே சடையிலணிந்த மிகவும் மகிழ்ந்த பெருமான், நெருப்பேந்தி ஆடுபவர். திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அச்சிவ பெருமானை மனம், வாக்கு, காயத்தால் வழிபடுகின்ற அடியார்கள் கூட்டத்தோடு நீங்களும் சேர்ந்து தியானம் செய்யுங்கள். உங்கள் வினைகள் தொலைந்துபோகும் வண்ணம் வணங்குங்கள். எல்லா நலன்களும் நிறையக் குறைவிலா இன்பம் உண்டாகும்.
3947 | தோடொரு
காதொரு காதுசேர்ந்த பீடொரு கால்பிரி யாதுநின்ற நாடொரு காலமுஞ் சேரநின்றதிரு பாடுமி னீர்பழி போகும்வண்ணம் |
3.107.3 |
சிவபெருமான் இடக் காதில் தோடும், வலக் காதில் குழையும் அணிந்துள்ளவர். மார்பில் பூணூல் அணிந்துள்ளவர். ஒரு காலத்திலும் பெருமை நீங்காமல் நிலைத்து நிற்பவர். பிறைச் சந்திரனை அணிந்துள்ளவர்.வேதங்களை ஓதுபவர். ஒவ்வொரு காலத்திலும் நாட்டிலுள்ள அடியார்கள் வணங்குதற்கு வந்து சேரும்படி வீற்றிருந் தருளுகின்ற திருநாரையூர்ப் பெருமானைப் பாடுவீர்களாக. உங்கள் பழிகள் நீங்கும் வண்ணம் இடைவிடாது வணங்குங்கள். உங்கட்கு உயர்வு உண்டாகும்.
3948 | 3
வெண்ணில
வஞ்சடை சேரவைத்து பெண்ணி லமர்ந்தொரு கூறதாய அண்ணன் மன்னியுறை கோயிலாகு நண்ணல மர்ந்துற வாக்குமின்கள் |
3.107.4 |
வெண்ணிறப் பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்து, விளங்குகின்ற பிரமகபாலத்தைக் கையிலேந்தி, உமா தேவியைத் தன்னுடம்பில் ஒரு கூறாகக் கொண்ட பெருமானும், அருள் நிறைந்து தலைவனுமாகிய சிவபெருமான் நிலையாக வீற்றிருந்தருளும் கோயிலுள்ள அழகிய திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் சேர்ந்து இறைவனிடம் அன்பு செலுத்துங்கள். உங்கள் துன்பங்கள் நீங்கும்.
3949 | வானமர்
தீவளி நீர்நிலனாய் ஊனம ரின்னுயிர் தீங்குகுற்ற நானம ரும்பொரு ளாகிநின்றான் கோனவ னைக்குறு கக்குறுகா |
3.107.5 |
ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், நிலம், ஆகிய ஐம்பூதங்களின் தொடர்பாய் விளங்குகின்ற, பழிக்கு இடமாகிய தசையாகிய இவ்வுடம்பில் தங்குகின்ற இனிய உயிர் தீமை பயக்கும் குற்றம் புரியும் இயல்பாயுள்ளது. அக்குற்றங்களிலிருந்து உய்தி பெறப் பிறிதொரு வழியின்றி, அடியேன் விரும்பிச் சார்தற்குப் பற்றுக் கோடாக விளங்கும் பெருமான் திருநாரையூரில் வீற்றிருந்தருளுகின்ற என் தந்தையும், தலைவனுமாவான். அப்பெருமானைச் சரணடையக் கொடிய வல்வினைகள் நம்மை வந்து சாரா.
3950 | கொக்கிற
குங்குளிர் சென்னிமத்தங் அக்கர வோடரை யார்த்துகந்த நக்கம ருந்திரு மேனியாளன்றிரு புக்கம ரும்மனத் தோர்கடம்மைப் |
3.107.6 |
சிவபெருமான் தலையில் கொக்கின் இறகையும், குளிர்ந்த பொன்னூமத்தையின் செழித்த மலரையும் சூடியவர். எலும்பைப் பாம்போடு சேர்த்து இடுப்பில் கட்டி மகிழும் அழகர். இளமையாய்த் திகம்பரராய்த் திகழும் திருமேனியுடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தை அடைந்து, அவரை விரும்பி வழிபடும் மனத்தையுடையவர்களிடத்துத் திருவருட்சத்தி பதியும்.
3951 | ஊழியு
மின்பமுங் காலமாகி ஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கை நாழிகை யும்பல ஞாயிறாகிநளிர் வாழியர் மேதகு மைந்தர்செய்யும் |
3.107.7 |
சிவபெருமான் ஊழிக்காலமும், இன்பமும், காலங்களும் ஆகியவர். உயர்ந்த தவம் ஆகியவர். ஏழிசையின் பயனாக விளங்குபவர். வாழ்கின்ற வாழ்க்கையில் உயிர்கள் செய்கின்ற வினையின் பயன்களை உயிர்கட்குச் சேர்ப்பிப்பவர். நாழிகை முதலிய சிறு காலங்களின் அளவுகளாகிப் பலவாகிய நாள்களும் ஆகியவர். இவைகளெல்லாம் குளிர்ச்சி பொருந்திய திரநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானின் அருள் விளையாடல்களின் விளைவுகளேயாகும்.
3952 | கூசமிலா
தரக்கன் வரையைக் நாசம தாகி யிறவடர்த்த பேசவி யப்பொடு பேணநின்ற தேசமு றப்புகழ் செம்மைபெற்ற |
3.107.8 |
கூசுதல் இல்லாது திருக்கயிலாய மலையைக் குலுங்க எடுத்த இராவணனுடைய தோள்கள் நெரியும்படி அடர்த்த திருப்பாத விரலையுடையவர் சிவபெருமான். நெஞ்சில் வஞ்சமில்லாத உண்மையடியார்கள் மிகவும் வியப்போடு பேசும்படியும், இடைவிடாது தியானிக்கும்படியும் நின்ற பெருமையுடையவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், தேசம் முழுவதும் புகழுகின்ற சிறப்புடைய திருநாரையூர் என்னும் திருத்தலமாகும்.
3953 | பூமக
னும்மவ னைப்பயந்த ஆமள வுந்திரிந் தேத்திக்காண்ட பாமரு வுங்குணத் தோர்களீண்டிப் தேமரு வுந்திகழ் சோலைசூழ்ந்த |
3.107.9 |
தாமரைப் பூவில் வீற்றிருந்தருளும் பிரமனும், அவனைப் பெற்ற மேகம் போன்ற நிறத்தையுடைய திருமாலும், தங்களால் இயன்ற அளவு திரிந்து தேடியும், ஏத்தியும் காண்பதற்கு அரியவனாக விளங்கி சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர், நீதி நூல்களில் சொல்லிய நற்குண, நற்செய்கை உடையவர்கள் கூடி, திருத்தொண்டுகள் பலவும் செய்யும், தேன்மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருநாரையூர் என்னும் திருத்தலமாகும்.
3954 | வெற்றரை
யாகிய வேடங்காட்டித் உற்றரை யோர்க ளுரைக்குஞ்சொல்லை குற்றமி லாததோர் கொள்கையெம்மான் பெற்றர வாட்டிவரும் பெருமான்றிரு |
3.107.10 |
ஆடையற்ற கோலத்துடன் திரியும் சமணர்களும், மஞ்சட் காவியாடை போர்த்துத் திரியும் புத்தர்களும் உரைக்கின்ற சொற்களை ஏற்க வேண்டா. குற்றமில்லாத கொள்கை உடைய எம் தலைவரும், இளமையானவரும், அடியவர்கட்கு அருள்புரியும் தொழிலையுடையவரும், அரவம் அணிந்துள்ளவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தைச் சேர்ந்து, வழிபட்டு உய்வீர்களாக.
3955 | பாடிய
லுந்திரை சூழ்புகலித் சேடிய லும்புக ழோங்குசெம்மைத் பாடிய தண்டமிழ் மாலைபத்தும் வாடிய சிந்தையி னார்க்குநீங்கு |
3.107.11 |
அலைஓசையுடைய கடல்சூழ்ந்த சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன், பெருமை பொருந்தியதும் ஓங்கும் புகழ் உடையதும், சிவத்தன்மை உடையதுமான திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் மீது பாடிய பத்துப்பாடல்களாலாகிய இத்தண்டமிழ் மாலையாகிய பதிகத்தைப் பாடித் துதிக்கும் சிந்தையுடைய அடியார்களின் கடல்போன்ற பெருந்துன்பம் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 105 | 106 | 107 | 108 | 109 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநாரையூர் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சிவபெருமான், திருநாரையூர், என்னும், வீற்றிருந்தருளுகின்ற, வீற்றிருந்தருளும், திருநாரை, திருத்தலத்தில், சேர்ந்து, அணிந்துள்ளவர், ஆகியவர், நீங்கும், யூர்தானே, உங்கள், அடியார்கள், பெருமான், திருத்தலமாகும், விளங்குகின்ற, இடைவிடாது, வினையின், பெருமை, நாழிகை, பலவும், குலுங்க, காலத்திலும், திரியும், காதில், திருமுறை, திருச்சிற்றம்பலம், மிகவும், விளங்கும், விரும்பி, கடவுள், பெருமா, உண்டாகும், வணங்குங்கள், வண்ணம், இத்தகைய