முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.104.திருப்பருதிநியமம்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.104.திருப்பருதிநியமம்
3.104.திருப்பருதிநியமம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பருதியப்பர்.
தேவியார் - மங்களநாயகியம்மை.
3912 | விண்கொண்ட
தூமதி சூடிநீடு பெண்கொண்ட மார்பில்வெண் ணீறுபூசிப் கண்கொண்ட சாயலொ டேர்கவர்ந்த பண்கொண்ட வண்டினம் பாடியாடும் |
3.104.1 |
ஆகாயத்தை இடமாகக் கொண்ட வெண்ணிறப் பிறைச் சந்திரனைச் சூடிய நீண்ட விரிந்த சிவந்த சடைதாழ, உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டு தம் திருமார்பில் திரு வெண்ணீற்றினைப் பூசி, பெருமைக்கு ஒவ்வாமல் பிச்சை ஏற்று, கண்ணைக் கவரும் தோற்றப் பொலிவொடு வந்து என் அழகைக் கவர்ந்த கள்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், வண்டுகள் பண்ணிசையோடு பாடியாடும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலம் ஆகும்.
3913 | அரவொலி
வில்லொலி யம்பினொலி நிரவவல்லார் நிமிர்புன் சடைமே இரவில் புகுந்தெ னெழில்கவர்ந்த பரவவல் லார்வினை பாழ்படுக்கும் |
3.104.2 |
வாசுகி என்னும் பாம்பாகிய நாணின் ஓசையும், மேருமலையாகிய வில்லின் ஓசையும், காற்று, திருமால், நெருப்பு ஆகிய அம்பின் ஓசையும் எழ, பகையசுரர்களின் மூன்று புரங்களையும் அழித்துத் தரையோடு தரையாக்கியவர் சிவபெருமான். நிமிர்ந்த மெல்லிய சடைமேல் கலைநிரம்பாத சந்திரனைச் சூடி இரவில் வந்து என் எழிலைக் கவர்ந்த இறைவன் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, தன்னை வணங்கிப் போற்றுவார்களின் வினையை அழிக்கும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.
3914 | வாண்முக
வார்குழல் வாணெடுங்கண் நீண்முக மாகிய பைங்களிற்றின் நாண்முகங் காட்டி நலங்கவர்ந்த பாண்முக வண்டினம் பாடியாடும் |
3.104.3 |
ஒளிபொருந்திய திருமுகத்தையும், நீண்ட கூந்தலையும், வாள்போன்று ஒளியும் கூர்மையும் மிக்க நீண்ட கண்களையும் மூங்கில் போன்ற மென்மை வாய்ந்த தோள்களையும் உடைய உமாதேவி அஞ்சும்படி, நீண்ட துதிக்கையையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் சிவ பெருமான்.அவர் நான் நாணம் கொண்டு விளங்குமாறு செய்தவர். என் பெண்மை நலத்தை இழந்து அவரையே பற்றுமாறு செய்தவர். அத்தலைவர் வீற்றிருந்தருளும் இடம் வண்டுகள் முரன்று பாடியாடும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.
3915 | வெஞ்சுரஞ்
சேர்விளை யாடல்பேணி துஞ்சிருண் மாலையும் நண்பகலுந் அஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங் பஞ்சுரம் பாடிவண்டி யாழ்முரலும் |
3.104.4 |
சிவபெருமான் கொடிய பாலைவனம் போன்ற சுடுகாட்டில் நடனம் செய்பவர். விரிந்த சிவந்த சடை தொங்க அனைவரும் உறங்குகின்ற இரவிலும், மாலையிலும், நண்பகலிலும், பூத கணங்கள் துணைவரப் பிச்சை ஏற்பவர். அழகிய வண்டுகள் ஒலிக்கக் கூந்தல் சரிய என் உள்ளத்தைக் கவர்ந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், வண்டுகள் யாழொலி போன்று பஞ்சுரம் முதலிய பண்ணிசைத்துப் பாடும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.
3916 | நீர்புல்கு
புன்சடை நின்றிலங்க தார்புல்கு மார்பில்வெண் ணீறணிந்து ஏர்புல்கு சாய லெழில்கவர்ந்த பார்புல்கு தொல்புக ழால்விளங்கும் |
3.104.5 |
சிவபெருமான் மென்மையான சடையில் கங்கை நதியைத் தாங்கியதோடு, இளம்பிறைச் சந்திரனையும் சூடியவர். மலர்மாலை அணிந்த திருமார்பில் திருவெண்ணீறும் அணிந்தவர். பிரம கபாலம் ஏந்திப் பிச்சையேற்றுத் திரிபவர். என் தோற்றப் பொலிவையும், அழகையும் கவர்ந்த அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், உலகம் முழுவதும் பரவிய பழம் புகழையுடைய திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.
3917 | வெங்கடுங்
காட்டகத் தாடல்பேணி திங்கள் திருமுடிமேல் விளங்கத் சங்கொடு சாய லெழில்கவர்ந்த பைங்கொடி முல்லை படர்புறவிற் |
3.104.6 |
சிவபெருமான் மிகுந்த வெப்பமுடைய சுடுகாட்டில் திருநடனம் செய்பவர். விரிந்த சிவந்த சடைதொங்கச் சந்திரனைத் திருமுடிமேல் சூடியவர். எல்லாத் திசைகளிலும் சென்று பிச்சையேற்றுத் திரிபவர். நான் அணிந்துள்ள சங்காலாகிய வளைகள் சோர, என் தோற்றப் பொலிவைக் கவர்ந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், பசுமையான முல்லைக்கொடி படர்ந்துள்ள திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.
3918 | பிறைவளர்
செஞ்சடை பின்றயங்கப் மறையொலி பாடிவெண் ணீறுபூசி இறைவளை சோர வெழில்கவர்ந்த பறையொலி சங்கொலி யால்விளங்கும் |
3.104.7 |
சிவபெருமான் பிறைச்சந்திரனை அணிந்த சிவந்தசடை பின்புறம் விளங்கித் தொங்க, பெரிய மழுப்படையைக் கையிலேந்தி, வேதங்களைப் பாடி, திருவெண்ணீற்றினைப் பூசி வீடுகள்தோறும் பிச்சையேற்றுத் திரிவார். அவர், என் முன்கையில் அணிந்துள்ள வளையல்கள் கழன்றுவிழ, என் தோற்றப் பொலிவைக் கவர்ந்த இறைவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், பறை யொலியும், சங்கொலியும் விளங்கத் திருவிழாக்கள் நிகழும் திருப் பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.
3919 | ஆசடை
வானவர் தானவரோ மாசடை யாதவெண்ணீறுபூசி காசடை மேகலை சோரவுள்ளங் பாசடைத் தாமரை வைகுபொய்கைப் |
3.104.8 |
அனைத்துயிர்கட்கும் பற்றுக்கோடாக விளங்கும் சிவபெருமான் தேவர்களும், வித்தியாதரர்களும் உடன் திகழ, அடியவர்கள் அமர்ந்து ஏத்தி வழிபடப்படுபவர். அவர், பாவத்தை அடைவியாது நீக்க வல்ல திருவெண்ணீற்றினைப் பூசி வீடுகள்தோறும் சென்று பிச்சை ஏற்றுத் திரிபவர். அவர் மணிகள் பதிக்கப்பெற்ற மேகலை நழுவி விழுமாறு என்னை மெலியச்செய்து, என் உள்ளம் கவர்ந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், பசுமையான இலைகளையுடைய தாமரைகள் விளங்கும் பொய்கையுடைய திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.
3920 | நாடினர்
காண்கிலர் நான்முகனுந் கூடல ராடல ராகிநாளுங் ஏடலர் சோர வெழில்கவர்ந்த பாடல ராடல ராய்வணங்கும் |
3.104.9 |
தேடிக் காணாதவர்களாகிய பிரமனும், திருமாலும் பணிந்து ஏத்த அவர்களிடத்துக் காணக் கூடாதவராகி எம்மிடத்து விளையாடுதலை உடையவராய் நாடோறும் இளமையும், அழகு முடையவராய்ப் பிச்சையேற்றுத் திரிபவர், சிவபெருமான். அவர் இதழ்களையுடைய தாமரை போன்ற என்முகம் சோர்வடைய என் அழகைக் கவர்ந்த கள்வர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அடியவர்கள் பக்திப் பாடல்களைப் பாடி, ஆடி வணங்கும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.
3921 | கல்வள
ராடையர் கையிலுண்ணுங் சொல்வள மாக நினைக்கவேண்டா நல்வளை சோர நலங்கவர்ந்த பல்வளர் முல்லையங் கொல்லைவேலிப் |
3.104.10 |
காவிக்கல்லால் துவர்நிறம் பெற்ற ஆடையணிந்த புத்தர்களும், கையில் உணவு வாங்கி உண்ணும் கழுக்களான சமணர்களும் கூறும், குற்றமுடைய சொற்களைப் பொருளென நினைக்க வேண்டா. சுட்ட திருவெண்ணீறு அணிந்து, என் நல் வளையல்கள் கழல, என் பெண்மை நலத்தைக் கவர்ந்த தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், பெண்களின் பற்களைப் போல அரும்பு அடர்ந்த முல்லைவனமே வேலியாக உடைய திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். அப்பெருமானை வழிபட்டு உய்வீர்களாக என்பது குறிப்பு.
3922 | பையர
வம்விரி காந்தள்விம்மு தையலொர் பாக மமர்ந்தவனைத் பொய்யிலி மாலை புனைந்தபத்தும் ஐயுற வில்லை பிறப்பறுத்தல் |
3.104.11 |
படத்தையுடைய பாம்பு போல மலர் விரிந்த காந்தட்செடிகள் செழித்துள்ள திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலத்தில் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளும் பொய்யிலியாகிய சிவபெருமானைப் போற்றி, தமிழ்வல்ல ஞானசம்பந்தன் உண்மையன்போடு அருளிய இப்பத்துப் பாட்டுக்களாலாகிய பாமாலையால் புகழ்ந்து வணங்குபவர்களின் பிறப்பு அறும் என்பதில் ஐயமில்லை. அவர்கட்கு இம்மையில் துன்பம் எதுவும் இல்லை.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 102 | 103 | 104 | 105 | 106 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பருதிநியமம் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சிவபெருமான், என்னும், பரிதிந், வீற்றிருந்தருளும், கிடம்போலும், நியமமே, திருப்பரிதிநியமம், திருத்தலமாகும், கவர்ந்த, பலிதேர்வார், பாடியாடும், திரிபவர், பிச்சையேற்றுத், தோற்றப், வண்டுகள், விரிந்த, அப்பெருமான், கொண்டு, விறைவர்க், ஓசையும், விரிபுன், பிச்சை, சிவந்த, திருமுடிமேல், லெழில்கவர்ந்த, சூடியவர், அணிந்த, விளங்கத், விளங்கும், அடியவர்கள், பொலிவைக், திருவெண்ணீற்றினைப், வளையல்கள், வீடுகள்தோறும், வெழில்கவர்ந்த, மனைகள், அணிந்துள்ள, பசுமையான, சென்று, பெண்மை, அழகைக், மார்பில்வெண், திருச்சிற்றம்பலம், திருமுறை, திருமார்பில், பாகமாகக், வண்டினம், பலிதேர்ந்து, சந்திரனைச், இரவில், திருப்பருதிநியமம், கவர்ந்தார்க், பஞ்சுரம், சுடுகாட்டில், சோரவுள்ளங், சடைதாழத், நலங்கவர்ந்த, நாதர்க், செய்தவர், செய்பவர்