முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.092.திருப்புகலூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.092.திருப்புகலூர்
2.092.திருப்புகலூர்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர்.
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
2464 |
பட்டம் பால்நிற மதியம் நட்டம் நள்ளிரு ளாடும் புட்டன் பேடையொ டாடும் வட்டஞ் சூழ்ந்தடி பரவும் |
2.092. 1 |
ஆண் பறவைகள் தன்பிணையோடு கூடி மகிழும் அழகிய புகலூரில் அடியவர்கள் வட்டமாகச் சூழ்ந்து திருவடிகளைப் போற்றிப் பரவும் வர்த்தமானீச்சரத்து இறைவர் திருமேனிமேல் உத்தரீயமும் விரிந்த சடைமேல் வெண்மதி ஒளிதரும் கங்கை ஆகியவற்றையும் கொண்டு நள்ளிருளில் நட்டமாடும் தலைவர் ஆவார்.அவர் கோயில் திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் ஆகும்.
2465 |
முயல்வ ளாவிய திங்கள் இயல்வ ளாவிய துடைய கயல்வ ளாவிய கழனிக் வயல்வ ளாவிய புகலூர் |
2.092. 2 |
கயல்கள் நிறைந்த கழனிகளில் கரிய நிறக் குவளைகள் மலரும் வயல்களை உடைய புகலூர் வர்த்தமானீச்சரத்து இறைவர், முயற்கறை பொருந்திய திங்கள் போன்ற ஒளிபொருந்திய முகத்தினை உடைய மங்கையரில் மேம்பட்ட தெரிவையாகிய உமையம்மையைப் பாகமாக உடைய இனிய அமுதம் போன்றவர். எமக்குத் தந்தையாகவும் தலைவராகவும் விளங்குபவர்.
2466 |
தொண்டர் தண்கய மூழ்கித் கொண்டு கொண்டடி பரவிக் கண்டு கண்டுகண் குளிரக் வண்டு பண்செயும் புகலூர் |
2.092. |
தொண்டர்கள் குளிர்ந்த நீர் நிலைகளில் மூழ்கி மலர் மாலை சாந்து, மணப்புகை கொண்டு திருவடிப்பரவி வழிபடக் கண்டு அவர்தம் குறிப்பறிந்து அவர்கட்கு உதவும் முருகநாயனார் தாமும் அவ்வாறே இறைவனை அலங்கரித்துக் கண்குளிரக் கண்டு மகிழுமாறு வண்டுகள் கள்ளுண்டு பண்செய்யும் ஒலிபோல ஒலிக்கும். வர்த்த மானீச்சரத்துள் சிவபெருமான் உகந்தருளியுள்ளார்.
2467 |
பண்ண வண்ணத்த ராகிப் விண்ண வண்ணத்த ராய பெண்ண வண்ணத்த ராகும் வண்ண வண்ணத்தெம் பெருமான் |
2.092. 4 |
விரிந்த பரப்புடைய புகலூர் வர்த்தமானீச்சரத்து இறைவர், பாடல் ஆடல்களில் பயிலும் பண்ணிசை மயமானவரும், ஆகாய வடிவினராய் விளங்குபவரும், பெண்ணொர் பாகமான வடிவினரும், ஆணொடு இணைந்த அரி அர்த்த வடிவினரு மானவர்.
2468 |
ஈச னேறமர் கடவுள் பூசு மாசில்வெண் ணீற்றர் மூசு வண்டறை கொன்றை வாச மாமல ருடையார் |
2.092.5 |
அழகிய புகலூரில் முருகநாயனார் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர் கொண்டு மூன்று பொழுதிலும் வழிபட அம் மண மலர்களோடு விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர் எல்லோர்க்கும் தலைவர். விடையேறு உடையவர். இனிய அமுதம் போன்றவர். எந்தை, எம்பெருமான் குற்றம் அற்ற வெண்ணீறு பூசியவர்.
2469 | தளிரி
ளங்கொடி வளரத் கிளரி ளம்முழை நுழையக் உளரி ளஞ்சுனை மலரு வளரி ளம்பிறை யுடையார் |
2.092. 6 |
குளிர்ந்த நீர் நிலைகளை அடுத்து வளரும் இளங்கொடிகளின் தளிர்கள் கிழியுமாறு வண்டுகள் சரேலென எழுந்து முழைகள்தோறும் செல்லும் பொழில்கள் சூழ்ந்த புகலூரில் வாழ்பவர் சுனை நீரில் பூத்த மலர்கள் விளங்கும் சடைமுடியில் பிறை சூடியவராகிய வர்த்தமானீச்சரத்து இறைவர்.
2470 | தென்சொல்
விஞ்சமர் வடசொற் துஞ்சு நெஞ்சிரு ணீங்கத் அஞ்ச னம்பிதிர்ந் தனைய வஞ்ச நஞ்சணி கண்டர் |
2.092.7 |
அடியவர் தமிழிலும் வடமொழியிலும் திசை மொழிகளிலும் அழகிய யாழ் நரம்பை மீட்டித் தங்கள் மனத்திருள் நீங்கப்பாடித் தொழும் புகலூரில், அன்று அலைகடலைக் கடந்த போது, மை பிதிர்ந்தாற்போல எழுந்த வஞ்ச நஞ்சினை உண்ட அழகிய கண்டத்தினராய் விளங்குபவர் வர்த்தமானீச்சரத்து இறைவர்.
2471 | சாம வேதமொர் கீத நாம தேயம துடையார் காம தேவனை வேவக் வாம தேவர்தண் புகலூர் |
2.092.8 |
தண்மையான புகலூரில் விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர். இராவணன் சாம வேதம் பாடிப் பரவும் பெயரையும் ஊரையும் உடையவர். நன்குணர்ந்து அடிகள் என்றேத்தும் பெயர்களை உடையவர். காமதேவனை எரித்த கண்ணையுடையவர்.
2472 |
சீர ணங்குற நின்ற நார ணன்கருத் தழிய ஆர ணங்குறு முமையை வார ணத்துரி போர்த்தார் |
2.092. 9 |
வர்த்தமானீச்சரத்து இறைவர், சிறந்த தெய்வத் தன்மை உடையவர்களாய் யார் தலைவர் என்பதில் மாறுபட்டவர்களாய்த் தம்முட் செருச்செய்த திருமால் பிரமர்களின் கருத்தழியுமாறு அவர்களிடையே தோன்றி நகை செய்தவர். உமையம்மையை அஞ்சுவிக்கும்பொருட்டு அவள் எதிரே யானையை உரித்தவர்.
2473 | >
கையி லுண்டுழல் வாருங் செய்யைப் போர்த்துழல் வாரு மெய்யில் வாளைக ளோடு மைகொள் கண்டத்தெம் பெருமான் |
2.092. 10 |
வாளைமீன்களோடு கயல்கள் குதித்து விளையாடும் வயல்களைக் கொண்ட புகலூல் நீல கண்டராய் விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர் புகழே மெய்ம்மமையானவை. கையில் உணவு ஏற்று உண்ணும் சமணரும் துவராடை போர்த்த புத்தரும் கூறும் உரைகளை மெய்யெனக் கருதேல்.
2474 | பொங்கு
தண்புனல் சூழ்ந்து மங்குன் மாமதி தவழும் தங்கு சீர்திகழ் ஞான எங்கு மேத்தவல் லார்கள் |
2.092. 11 |
மிகுதியான தண்ணிய நீராலும், மலர்பூத்த பொழில்களாலும் சூழப்பெற்று விளங்கும் புகலூரில் வானளாவிய வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் விளங்கும் இறைவரைப் புகழ்மிக்க ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பாடல்கள் பத்தையும் எவ்விடத்தும் பாடி ஏத்துவார் இமையவர் உலகம் எய்துவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 90 | 91 | 92 | 93 | 94 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்புகலூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வர்த்தமா, னீச்சரத், இறைவர், வர்த்தமானீச்சரத்து, விளங்கும், புகலூர், புகலூரில், லூரில், பெருமான், பரவும், கொண்டு, வண்டுகள், தலைவர், வண்ணத்த, உடையவர், விளங்குபவர், போன்றவர், குளிர்ந்த, பொழிற்புக, அமுதம், கொன்றை, முருகநாயனார், சடைமுடி, தெந்தையெம், பூம்புக, சூழ்ந்து, கோயில், திருச்சிற்றம்பலம், திருமுறை, போற்றிப், விரிந்த, மலரும், குவளைகள், திருப்புகலூர், திங்கள், கயல்கள்