முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.066.திருஆலவாய்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.066.திருஆலவாய்

2.066.திருஆலவாய்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி.
தேவியார் - மீனாட்சியம்மை.
2178 | மந்திர
மாவது நீறு சுந்தர மாவது நீறு தந்திர மாவது நீறு செந்துவர் வாயுமை பங்கன் |
2.066. 1 |
சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு. மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.
2179 | வேதத்தி
லுள்ளது நீறு போதந் தருவது நீறு ஓதத் தகுவது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த |
2.066. 2 |
குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திரு ஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப் பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவ ஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.
2180 | முத்தி
தருவது நீறு சத்திய மாவது நீறு பத்தி தருவது நீறு சித்தி தருவது நீறு |
2.066.3 |
திரு ஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது. தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.
2181 | காண
வினியது நீறு பேணி யணிபவர்க் கெல்லாம் மாணந் தகைவது நீறு சேணந் தருவது நீறு |
2.066.4 |
திரு ஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது.
2182 | பூச
வினியது நீறு பேச வினியது நீறு ஆசை கெடுப்பது நீறு தேசம் புகழ்வது நீறு |
2.066.5 |
திரு ஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்ப நிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது.
2183 | அருத்தம
தாவது நீறு வருத்தந் தணிப்பது நீறு பொருத்தம தாவது நீறு திருத்தகு மாளிகை சூழ்ந்த |
2.066.6 |
அழகிய மாளிகைகள் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது. துன்பம் போக்குவது. மன வருத்தத்தைத் தணிப்பது. துறக்க இன்பத்தை அளிப்பது. எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பது. புண்ணியரால் பூசப்பெறுவது.
2184 | எயிலது
வட்டது நீறு பயிலப் படுவது நீறு துயிலைத் தடுப்பது நீறு அயிலைப் பொலிதரு சூலத் |
2.066. 7 |
கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது. இம்மை மறுமை இன்பம் தர இருப்பது. பிறரோடு பழகும் பயன் அளிப்பது. செல்வமாக விளங்குவது. உறக்கநிலையைத் தடுப்பது. தூய்மையை அளிப்பது.
2185 | இராவணன்
மேலது நீறு பராவண மாவது நீறு தராவண மாவது நீறு அராவணங் குந்திரு மேனி |
2.066. 8 |
பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது. நல்லவர்களால் எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக இருப்பது. மெய்ப்பொருளை உணர்த்துவது.
2186 | மாலொ
டயனறி யாத மேலுறை தேவர்கள் தங்கண் ஏல வுடம்பிடர் தீர்க்கு ஆலம துண்ட மிடற்றெம் |
2.066. 9 |
நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு, திருமால் பிரமர்களால் அறியப் பெறாத தன்மையை உடையது. வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது. பிறவியாகிய இடரைத் தவிர்த்து நிலையான இன்பம் அளிப்பது.
2187 | குண்டிகைக்
கையர்க ளோடு கண்டிகைப் பிப்பது நீறு எண்டிசைப் பட்ட பொருளா அண்டத் தவர்பணிந் தேத்து |
2.066. 10 |
மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு, குண்டிகை ஏந்திய கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது. தியானிக்க இனியது. எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளுணர்வுடையோரால் ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது.
2188 | ஆற்ற லடல்விடை
யேறு போற்றிப் புகலி நிலாவும் தேற்றித் தென்ன னுடலுற்ற சாற்றிய பாடல்கள் பத்தும் |
2.066.11 |
ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தௌவித்துப் பாண்டியன் உடலில் பற்றிய தீமை விளைத்த பிணி தீருமாறு சாற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் நல்லவராவார்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 64 | 65 | 66 | 67 | 68 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஆலவாய் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - தருவது, திருநீறு, வாயான், திருநீறே, அளிப்பது, திருவால, வினியது, ஆலவாயான், திருஆலவாயான், இருப்பது, சூழ்ந்த, போக்குவது, லுள்ளது, புகழப்படுவது, இனியது, றிருநீறே, கொடுப்பது, புகழ்ந்து, தடுப்பது, சாற்றிய, முள்ளது, ஏந்திய, இன்பம், வாழும், உடையது, தேவர்கள், செல்வமாக, இராவணன், போற்றிப், பெருமை, தகுவது, விளங்கும், வானவர், படுவது, சிவபிரானது, பெறுவது, புகழ்வது, கெல்லாம், மறுப்பது, திருமுறை, திருஆலவாய், திருச்சிற்றம்பலம், தணிப்பது