முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.039.திருவேட்களம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.039.திருவேட்களம்
1.039.திருவேட்களம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசுபதேசுவரர்.
தேவியார் - நல்லநாயகியம்மை.
415 |
அந்தமுமாதியு
மாகியவண்ணல் மந்தமுழவ மியம்ப சந்தமிலங்கு நகுதலைகங்கை வெந்தவெண் ணீறுமெய்பூசும் |
1.039.1 |
உலகங்களைப் படைப்பவரும், இறுதி செய்பவருமாகிய, தலைமைத் தன்மையுடைய சிவபிரான் பிறரால் பொறுத்தற்கரிய தீகையின்கண் விளங்க, மெல்லென ஒலிக்கும் முழவம் இயம்ப, மலைமகளாகிய பார்வதிதேவி காணுமாறு திருநடம் புரிந்து, அழகு விளங்கும் கபாலமாலை, கங்கை, தண் பிறை ஆகியன தலையின்கண் விளங்க, வெந்த வெண்ணீறு மெய்யில் பூசியவராய்த் திருவேட்கள நன்னகரில் எழுந்தருளியுள்ளார்.
416 |
சடைதனைத்தாழ்தலு மேறமுடித்துச் புடைதனிற் பாரிடஞ்சூழப் உடைதனினால்விரற் கோவணவாடை விடைதனை யூர்திநயந்தார் |
1.039.2 |
திருவேட்கள நன்னகர் இறைவன், தாழ்ந்து தொங்கும் சடைமுடியை எடுத்துக் கட்டிச் சங்கால் இயன்ற வெள்ளிய தோடு காதிற் சரிந்து விளங்கவும், அருகில் பூதங்கள் சூழ்ந்து வரவும், போதருகின்றவர். அவர்தம் உடையோ நால்விரல் அகலமுடைய கோவண ஆடையாகும். அவர் உண்பதோ ஊரார் இடும் பிச்சையாகும். அவர் விரும்பி ஏறும் ஊர்தியோ வெண்ணிறமுடைய விடையாகும்.
417 |
பூதமும்பல்கண மும்புடைசூழப் சீதமும்வெம்மையு மாகிச் ஓதமுங்கானலுஞ் சூழ்தருவேலை வேதமும்வேள்வியு மோவா |
1.039.3 |
கடல்நீர்ப் பெருக்கும் சோலையும் சூழ்ந்ததும், அந்தணர்கள் மனங்கலந்து பாடும் இசையால் எழுந்த வேத ஒலியும், அவர்கள் இயற்றும் வேள்விகளும் இடையறாது நிகழும் இயல்பினதும், ஆகிய திருவேட்கள நன்னகர் இறைவர், பூதங்களும் சிவகணங்களும் அருகில் சூழ்ந்து விளங்க, விண்ணும் மண்ணும் தம்பால் பொருந்தத் தண்மையும் வெம்மையும் ஆகிப் புகழோடு விளங்கும் எம் செல்வராவார்.
418 |
அரைபுல்குமைந்தலை யாடலரவ வரைபுல்குமார்பி லொராமை திரைபுல்குதெண்கடல் தண்கழியோதங் விரைபுல்குபைம்பொழில் சூழ்ந்த |
1.039.4 |
இடையிற் பொருந்திய ஐந்து தலைகளை யுடையதாய், ஆடும் பாம்பை வெண்மையான கோவணத்தோடும் பொருந்தக்கட்டி, மலை போன்று அகன்ற மார்பின்கண் ஒப்பற்ற ஆமை ஓட்டை விரும்பி அணிந்தவராய் விளங்கும் சிவபெருமானார் அலைகளையுடைய தௌந்த கடல்நீர் பெருகிவரும் உப்பங்கழிகளை உடையதும், வண்டுகள் இசைபாடும் தேன்பொருந்திய கடற்கரைச் சோலைகளை உடையதும், மணம் கமழும் பைம்பொழில் சூழ்ந்ததுமாகிய திருவேட்கள நன்னகரில் எழுந்தருளி உள்ளார்.
419 |
பண்ணுறுவண்டறை கொன்றையலங்கல் பெண்ணுறுமார்பினர் பேணார் கண்ணுறுநெற்றி கலந்தவெண்டிங்கட் வெண்ணிறமால்விடை யண்ணல் |
1.039.5 |
திருவேட்கள நன்னகர் இறைவர், இசை பாடும் வண்டுகள் சூழ்ந்த கொன்றை மாலையை அணிந்தவராய், பால் போன்ற வெண்ணீறு பூசியவராய், முப்புரி நூலும் உமையம்மையும் பொருந்திய மார்பினராய்ப் பகைவர்களாகிய அசுரர்களின் மும்மதில்களையும் எய்து அழித்த தலைவராய், நெற்றிக் கண்ணராய், பிறைமதிக் கண்ணியராய் விண்ணவர் கைதொழுது ஏத்தும் வெண்மையான பெரிய விடை மீது ஊர்ந்து வருபவராய் விளங்கும் தலைவராவார்.
420 |
கறிவளர்குன்ற மெடுத்தவன்காதற் பொறிவள ராரழலுண்ணப் மறிவளரங்கையர் மங்கையொர்பங்கர் வெறிவளர்கொன்றையந் தாரார் |
1.039.6 |
திருவேட்கள நன்னகர் இறைவர், மிளகுக்கொடிகள் வளர்ந்து செறிந்த கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த திருமாலின் அன்பு மகனும், அழகு மிக்கவனும், ஐங்கணை உடையவனுமாகிய மன்மதனின் உடல், பொறி பறக்கும் அரிய அழல் உண்ணும்படி சினந்த பழையோரும், மான் ஏந்திய கரத்தினரும், மங்கை பங்கரும், கருநிறமுடைய யானையின் தோலை உரித்து ஆடையாகப் போர்த்தவரும், மணங்கமழும் கொன்றை மாலையை அணிந்தவருமாவார்.
421 |
மண்பொடிக்கொண்டெரித் தோர்சுடலை நுண்பொடிச்சேர நின்றாடி கண்பொடிவெண்டலை யோடுகையேந்திக் வெண்பொடிச் சேர்திருமார்பர் |
1.039.7 |
திருவேட்கள நன்னகர் இறைவர் மண்ணும் பொடியாகுமாறு உலகை அழித்து, ஒப்பற்ற அச்சுடலையில் சிறப்புத் தன்மையை உடைய இமவான் மகளாகிய பார்வதி தேவி கண்டு மகிழ, சுடலையின் நுண்பொடிகள் தம் உடலிற் படிய, நின்று ஆடி, அத்திருக்கூத்து வாயிலாக நுட்பமான பஞ்ச கிருத்தியங்கள் செய்தலை உகந்தவரும், கண் பொடிந்து போன வெள்ளிய தலையோட்டினைக் கையில் ஏந்தியவரும், காலனைக் காலால் கடிந்துகந்தவரும் வெள்ளிய திருநீறு சேர்ந்த அழகிய மார்பினரும் ஆவார்.
422 |
ஆழ்தருமால்கட னஞ்சினையுண்டார் சூழ்தருபாம்பரை யார்த்துச் தாழ்தருபுன்சடை யொன்றினைவாங்கித் வீழ்தருகங்கை கரந்தார் |
1.039.8 |
திருவேட்கள நன்னகர் இறைவர், ஆழமான பெரிய கடலிடத்துத் தோன்றிய அமுதத்தைத் தேவர்க்கு அளித்தருளி நஞ்சினைத் தாம் உண்டவரும், சுற்றிக்கொள்ளும் இயல்பினதாய பாம்பினை இடையிற் கட்டி, சூலம், ஒளி பொருந்திய மழு ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவரும், உலகையே அழிக்கும் ஆற்றலோடு பெருகி வந்த கங்கை நீரைத் தம் பிறை அயலில் விளங்கத் தலையிலிருந்து தொங்கும் மெல்லிய சடை ஒன்றினை எடுத்து அதன்கண் சுவறுமாறு செய்தவரும் ஆவார்.
423 |
திருவொளிகாணிய பேதுறுகின்ற கருவரையேந்திய மாலுங் அருவரையொல்க வெடுத்தவரக்க வெருவுறவூன்றிய பெம்மான் |
1.039.9 |
திருவேட்கள நன்னகர் இறைவர், அழகிய பேரொளிப் பிழம்பைக் காணும்பொருட்டு மயங்கிய நான்முகனும், எண்திசைகளையும் அளந்தவனாய்ப் பெரிதான கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திய திருமாலும், அடிமுடி காண இயலாது கைதொழுது நிற்க, கயிலைமலை தளருமாறு அதனை எடுத்த இராவணனின் வெற்றியும் அழகு மிக்க தோள்களும் ஆழத் தழுந்தவும் அவன் அஞ்சி நடுங்கவும் தம் கால் விரலை ஊன்றிய பெருமான் ஆவார்.
424 |
அத்தமண்டோய்துவ ரார்அமண்குண்டர் பொய்த்தவம் பேசுவதல்லாற் முத்தனவெண்முறு வல்லுமையஞ்ச வித்தகர்வேத முதல்வர் |
1.039.10 |
செந்நிறமான காவி மண் தோய்ந்த ஆடைகளை அணிந்த பௌத்தர்கள், சமண் குண்டர்கள் ஆகியோர் பொருளற்றவார்த்தைகளை உரைத்துப் பொய்த்தவம் பேசுவதோடு சைவத்தைப் புறனுரைத்துத் திரிவர். அவர்தம் உரை எதனையும் கொள்ளாதீர்.முத்துப் போன்ற வெண் முறுவல் உடைய உமையம்மை அஞ்சுமாறு வலிய யானையின் தோலை உரித்துப் போர்த்த வித்தகரும் வேத முதல் வருமாகிய வேட்கள நன்னகர் இறைவரை வணங்குமின்.
425 |
விண்ணியன்மாடம் விளங்கொளிவீதி நண்ணியசீர்வளர் காழி பெண்ணினல்லாளொரு பாகமமர்ந்து பண்ணியல்பாடல் வல்லார்கள் |
1.039.11 |
விண்ணுற வோங்கிய மாட வீடுகளையும், வெண்மையான கொடிகள் எங்கும் விரிந்து விளங்கும் ஒளி தவழும் வீதிகளையும் உடையதும், பொருந்திய சீர்வளர்வதும் ஆகிய சீகாழிப்பதியுள் தோன்றிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் பெண்ணில் நல்லவளான நல்ல நாயகியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று எழுந்தருளியுள்ள திருவேட்களத்து இறைவர்மீது பாடியருளிய பண்பொருந்திய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் பழி பாவம் இலராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 37 | 38 | 39 | 40 | 41 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவேட்களம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வேட்கள, நன்னகராரே, திருவேட்கள, நன்னகர், இறைவர், விளங்கும், பொருந்திய, வெள்ளிய, விரும்பி, வெண்மையான, விளங்க, உடையதும், மலையைக், கோவர்த்தன, கைதொழுது, மாலையை, கொன்றை, யானையின், பொய்த்தவம், நற்றமிழ், ஞானசம்பந்தன், தோன்றிய, ஏந்தியவரும், எடுத்த, ஏந்திய, பெருமான், குடையாக, இடையிற், தொங்கும், அருகில், நன்னகரில், வெண்ணீறு, திருமுறை, திருச்சிற்றம்பலம், சூழ்ந்து, அவர்தம், ஒப்பற்ற, அணிந்தவராய், திருவேட்களம், சூழ்ந்த, பாடும், மண்ணும், வண்டுகள்