முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.041.திருப்பாம்புரம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.041.திருப்பாம்புரம்
1.041.திருப்பாம்புரம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாம்புரேசர் (எ) பாம்புரநாதர் .
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை (எ) வண்டார்பூங்குழலி .
437 |
சீரணிதிகழ்திரு மார்பில்வெண்ணூலர் வாரணிவனமுலை மங்கையோர்பங்கர் காரணிமணிதிகழ் மிடறுடையண்ணல் பாரணிதிகழ்தரு நான்மறையாளர் |
1.041.1 |
விண்ணவர் போற்றும் திருப்பாம்புர நன்னகர் இறைவர் சிறந்த அணிகலன்கள் விளங்கும் அழகிய மார்பில் முப்புரி நூல் அணிந்தவர். திரிபுரங்களை எரித்த வீரச் செல்வர். கச்சணிந்த அழகிய தனங்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாகப் பொருந்திய நீலமணிபோலும் திகழ்கின்ற கண்டத்தையுடைய தலைவர். உலகில் அழகிய புகழோடு விளங்கும் மறைகளை அருளியவர். நெற்றிக்கண்ணர்.
438 |
கொக்கிறகோடு கூவிளமத்தங் அக்கினொடாமை பூண்டழகாக மிக்கநல்வேத வேள்வியுளெங்கும் பக்கம்பல்பூதம் பாடிடவருவார் |
1.041.2 |
திருப்பாம்புர நன்னகர் இறைவர், கொக்கிறகு என்னும் மலர், வில்வம், ஊமத்தம்பூ, கொன்றை மலர், எருக்க மலர் ஆகியவற்றை அணிந்த சடைமுடியினர். சங்கு மணிகளோடு ஆமை ஓட்டைப் பூண்டு அழகாக அனலின்கண் ஆடும் எம் தலைவர். மிக்க நல்ல வேதவேள்விகளில் விண்ணோர்கள் மணம் கமழும் மலர்கள் தூவிப் போற்ற அருகில் பூதங்கள் பல பாடவும் வருபவர்.
439 |
துன்னலினாடை யுடுத்ததன்மேலோர் பின்னுவார்சடைகள் தாழவிட்டாடிப் மன்னுமாமலர்கள் தூவிடநாளும் பன்னுநான்மறைகள் பாடிடவருவார் |
1.041.3 |
திருப்பாம்புர நன்னகர் இறைவர் தைத்த கோவண ஆடையை அணிந்து அதன் மேல் காற்றை உட்கொள்ளும் நல்ல பாம்பு ஒன்றைச் சுற்றிக் கொண்டு பின்னிய நீண்ட சடைகளைத் தாழ விட்டுக் கொண்டு, பித்தராய் ஆடித் திரியும் எமது பெருமான், அவர் மணம் நிறைந்த சிறந்த மலர்களைத் தூவி நாளும் நாம் வழிபட மலையரசன் மகளாகிய பார்வதியும், தாமுமாய்ப் புகழ்ந்து போற்றும் நான் மறைகளை அடியவர் பாடிக்கொண்டு வர, நம்முன் காட்சி தருபவர்.
440 |
துஞ்சுநாள்துறந்து தோற்றமுமில்லாச் நஞ்சுசேர்கண்ட முடையவென்னாதர் மஞ்சுதோய்சோலை மாமயிலாட பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர்பயிலும் |
1.041.4 |
மேகங்கள் தோயும் சோலைகளில் சிறந்த மயில்கள் ஆடவும், மாடமாளிகைகளில் ஏறி, செம்பஞ்சு தோய்த்த சிவந்த மெல்லிய அடிகளை உடைய பெண்கள் பாடவும், ஆகச் சிறந்து விளங்கும் திருப்பாம்புர நன்னகர் இறைவர், இறக்கும் நாள் இல்லாதவராய், தோற்றமும் இல்லாதவராய், ஒளி பெற்று விளங்கும் சோதி வடிவினராய்த் திகழும் எம் பெருமான், விடம் பொருந்திய கண்டத்தை உடைய எம் தலைவர், நள்ளிருளில் நடனம் புரியும் கடவுளாவார்.
441 |
நதியதனயலே நகுதலைமாலை கதியதுவாகக் காளிமுன்காணக் விதியதுவழுவா வேதியர்வேள்வி பதியதுவாகப் பாவையுந்தாமும் |
1.041.5 |
விதிமுறை வழுவா வேதியர்கள், வேள்விகள் பல செய்தலால், எழும் வேத ஒலி நீங்காதபதி அது என உமையம்மையும் தாமுமாய்த் திருப்பாம்புர நன்னகரில் விளங்கும் இறைவர், சடைமுடி மீது கங்கையின் அயலே சிரிக்கும் தலைமாலை, பிறை மதி ஆகியவற்றை அணிந்து நடனத்திற்குரிய சதி அதுவே என்னும்படி காளிமுன்னே இருந்து காண இடுகாட்டுள் நடனம் செய்த தலைவர் ஆவார்.
442 |
ஓதிநன்குணர்வார்க் குணர்வுடையொருவ மாதினையிடமா வைத்தவெம்வள்ளல் ஆதிநீயருளென் றமரர்கள்பணிய பாதிவெண்பிறைசடை வைத்தவெம்பரமர் |
1.041.6 |
திருப்பாம்புர நன்னகர் இறைவர், கல்வி கற்றுத் தௌந்த அறிவுடையோரால் அறியப்படும் ஒருவராவார். ஒளியாக விளங்கும் சோதி உருவினராவார். உமையம்மையை இடப்பாகமாகக் கொண்ட எம் வள்ளலாவார். இளமான் மறியைக் கையில் ஏந்திய மைந்தராவார். திருப்பாற்கடலைக் கடைந்த பொழுது எழுந்த ஆலகால விடத்திற்கு அஞ்சிய தேவர்கள் ஆதியாக விளங்கும் தலைவனே, நீ எம்மைக் காத்தருள் என வேண்ட, நஞ்சினை உண்டும், கடலினின்றெழுந்த பிறைமதியைச் சடையிலே வைத்தும் அருள்புரிந்த எம்மேலான தலைவராவார்.
443 |
மாலினுக்கன்று சக்கரமீந்து ஆலின்கீழறமோர் நால்வருக்கருளி காலனைக்காய்ந்து தங்கழலடியாற் பாலனுக்கருள்கள் செய்தவெம்மடிகள் |
1.041.7 |
திருப்பாம்புர நன்னகர் இறைவர் முன்பு திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவர். தாமரை மலர் மேல் உறையும் பிரமனது ஐந்தலைகளில் ஒன்றைக் கொய்தவர். சனகாதி நால்வருக்குக் கல்லாலின் கீழிருந்து அறம் அருளியவர். தீயில் நடனமாடுபவர். தமது கழலணிந்த திருவடியால் காலனைக் காய்ந்தவர். காமனைப் பொடிபட நோக்கியவர். உபமன்யு முனிவருக்குப் பாற்கடல் அளித்து அருள்கள் செய்த தலைவர் ஆவார்.
444 |
விடைத்தவல்லரக்கன் வெற்பினையெடுக்க அடர்த்தவன்றனக்கன் றருள்செய்தவடிக மடக்கொடியவர்கள் வருபுனலாட படப்பையிற்கொணர்ந்து பருமணிசிதறும் |
1.041.8 |
இளங்கொடி போன்ற பெண்கள் நீராட வந்து இழியும் அரிசிலாறு தோட்டங்களில் சிதறிக் கிடக்கும் பெரிய மணிகளை அடித்து வந்து கரைமேல் சேர்க்கும் திருப்பாம்புர நன்னகர் இறைவர், செருக்குற்ற வலிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுத்த போது மெல்லிய திருவடி விரல் ஒன்றை ஊன்றி அவனை அடர்த்துப் பின் அவன் பிழையுணர்ந்து வருந்திப் போற்ற அருள் பல செய்த தலைவர் ஆவார்.
445 |
கடிபடுகமலத் தயனொடுமாலுங் செடிபடுவினைக டீர்த்தருள்செய்யுந் முடியுடையமரர் முனிகணத்தவர்கள் படியதுவாகப் பாவையுந்தாமும் |
1.041.9 |
முடி சூடிய அமரர்களும் முனிகணத்தவர்களும் முறையாகத் தம் திருவடிகளைப் பணிந்து ஏத்துதற்கு உரிய தகுதி வாய்ந்த இடமாகக் கொண்டு உமையம்மையும் தாமுமாய்த் திருப்பாம்புர நன்னகரில் விளங்கும் இறைவர் மணம் பொருந்திய தாமரை மலர் மேல் விளங்கும் பிரமனும் திருமாலும் அன்போடு அடிமுடி தேடத் தீவண்ணராய்க் கிளைத்த வினைகள் பலவற்றையும் தீர்த்து அருள் செய்பவராய் விளங்கும் எம் செல்வர் ஆவார்.
446 |
குண்டர்சாக்கியருங் குணமிலாதாருங் கண்டவாறுரைத்துக் கானிமிர்த்துண்ணுங் வண்டுசேர்குழலி மலைமகணடுங்க பண்டுநாஞ்செய்த பாவங்கள்தீர்ப்பார் |
1.041.10 |
திருப்பாம்புர நன்னகர் இறைவர் குண்டர்களாகிய சமணர்களாலும் புத்தர்களாலும் மிகச் சிறிய ஆடையை அணிந்து, கண்டபடி பேசிக்கொண்டு நின்றுண்ணும் சமணத் துறவியராலும் உள்ளவாறு அறியப் பெறாதவர். வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய மலைமகளாகிய பார்வதி தேவி நடுங்க யானையை உரித்துப் போர்த்தவர். முற்பிறவிகளில் நாம் செய்த பாவங்களைத் தீர்ப்பவர்.
447 |
பார்மலிந்தோங்கிப் பருமதில்சூழ்ந்த கார்மலிந்தழகார் கழனிசூழ்மாடக் நார்மலிந்தோங்கு நான்மறைஞான சீர்மலிந்தழகார் செல்வமதோங்கிச் |
1.041.11 |
உலகில் புகழ் நிறைந்து ஓங்கியதும்பெரிய மதில்களால் சூழப் பெற்றதுமான திருப்பாம்புர நன்னகர் இறைவனை, மழை வளத்தால் சிறந்து அழகியதாய் விளங்கும் வயல்கள் சூழப் பெற்றதும், மாட வீடுகளை உடையதுமான, கழுமலம் என்னும் பழம் பதியில் கவுணியர் கோத்திரத்தில், அன்பிற் சிறந்தவனாய்ப் புகழால் ஓங்கி விளங்கும் நான்மறைவல்ல ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஒதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய்ச் செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 39 | 40 | 41 | 42 | 43 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பாம்புரம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - விளங்கும், திருப்பாம்புர, நன்னகராரே, பாம்புர, இறைவர், நன்னகர், தலைவர், செல்வர், பெருமான், பொருந்திய, சிறந்த, அணிந்து, சிறந்து, கொண்டு, மெல்லிய, பெண்கள், கரைமேல், பாவையுந்தாமும், தாமுமாய்த், நன்னகரில், பாடவும், உமையம்மையும், இல்லாதவராய், மறைகளை, மைந்தர், போற்றும், மான்மறியேந்திய, திருச்சிற்றம்பலம், திருமுறை, உமையம்மையை, உலகில், பாடிடவருவார், என்னும், மடிகள், அருளியவர், திருப்பாம்புரம், ஆகியவற்றை