முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.012.திருமுதுகுன்றம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.012.திருமுதுகுன்றம்

1.012.திருமுதுகுன்றம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது, இதுவே விருத்தாசலம்.
சுவாமிபெயர் - பழமலைநாதர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
119 |
மத்தாவரை நிறுவிக்கடல் தொத்தார்தரு மணிநீண்முடிச் கொத்தார்மலர் குளிர்சந்தகி முத்தாறுவந் தடிவீழ்தரு |
1.012.1 |
மந்தர மலையை மத்தாக நட்டுக் கடலைக் கடைந்தபோது, கொடிது எனக் கூறப்பெறும் ஆலகால விடம் தோன்ற, அதனை உண்டவனும், பூங்கொத்துக்கள் சூடிய அழகிய நீண்ட சடை முடியினனும், எரி சுடர் வண்ணனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய இடம்; மலர்க் கொத்துக்கள் குளிர்ந்த சந்தனம் அகில் ஒளிதரும் குங்கும மரம் ஆகியவற்றை அலைக்கரங்களால் ஏந்திக் கொண்டு வந்து மணிமுத்தாறு அடிவீழ்ந்து வணங்கும் திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.
120 |
தழையார்வட வியவீதனில் இழையாரிடை மடவாளொடும் மழைவானிடை முழவவ்வெழில் முழைவாளரி குமிறும்முயர் |
1.012.2 |
தழைகளுடன் கூடிய ஆலமர நீழலில் யோகியாய் வீற்றிருந்து தவம் செய்யும் சிவபிரான், போகியாய் நூலிழை போன்ற இடையினை உடைய உமையம்மையோடு மகிழ்ந்துறையும் இடம், மேகங்கள் வானின்கண் இடித்தலைக் கேட்டு யானையின் பிளிறல் எனக்கருதி அழகிதாய் வளைந்த ஒளி பொருந்தி விளங்கும் நகங்களையும் எரிபோலும் கண்களையும் உடையனவாய்க் குகைகளில் வாழும் சிங்கங்கள் கர்ச்சிக்கும் உயர்ந்த திருமுதுகுன்றமாகும். அதனை வழிபடச் செல்வோம்.
121 |
விளையாததொர் பரிசில்வரு தளையாயின தவிரவ்வருள் களையார்தரு கதிராயிரம் முளைமாமதி தவழும்முயர் |
1.012.3 |
உயிர்களுடன் அநாதியாகவே வருகின்ற வேதனைகளைத் தரும் பாசங்களாகிய ஒள்ளிய தளைகள் நீங்குமாறு அருள்புரிதற்கு எழுந்தருளிய சிவபிரானது இடம், ஒளி பொருந்திய கிரணங்கள் ஆயிரத்தைக் கொண்ட கதிரவனும் முளைத்தெழுந்து வளரும் சந்திரனும் தவழும் வானளாவிய மலையாகிய திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.
122 |
சுரர்மாதவர் தொகுகின்னர நரரானபன் முனிவர்தொழ அரசார்வர வணிபொற்கல முரசார்வரு மணமொய்ம்புடை |
1.012.4 |
தேவர்களும், சிறந்த தவத்தை மேற் கொண்டவர்களும், கின்னரி மீட்டி இசை பாடும் தேவ இனத்தவரான கின்னரரும், மக்களுலகில் வாழும் மாமுனிவர்களும் தொழுமாறு சிவபிரான் எழுந்தருளிய இடம், அழகிய அரசிளங்குமாரர்கள் வர அவர்களைப் பொன் அணிகலன்கள் கொண்ட வரவேற்கும் மணமுரசு பன்னாளும் ஒலித்தலை உடைய திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.
123 |
அறையார்கழ லந்தன்றனை கறையார்நெடு வேலின்மிசை முறையாயின பலசொல்லியொண் முறையான்மிகு முனிவர்தொழு |
1.012.5 |
ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த அந்தகாசுரனைக், கூரிய மூவிலை வடிவாய் அமைந்த குருதிக் கறைபடிந்த அழகிய நீண்ட வேலின் முனையில் குத்தி ஏந்திய சிவபெருமானது இடம் யாதெனில், முனிவர்கள் பலரும் வேதங்கள் பலவும் சொல்லி நறுமலர் சந்தனம்முதலான பொருள்களைக் கொண்டு முறைப்படி சார்த்தி வழிபடுகின்ற திருமுதுகுன்றமாகும். அதனை நாம் அடைவோம்.
124 |
ஏவார்சிலை யெயினன்னுரு கோவாதவின் னருள்செய்தவெம் சாவாதவர் பிறவாதவர் மூவாதபன் முனிவர்தொழு |
1.012.6 |
அம்புகள் பூட்டிய வில்லை ஏந்திய வேட உருவந்தாங்கி வந்து போரிட்டு அழகிய அருச்சுனனுக்கு அருள்செய்த எம் சிவபெருமானுக்கு உகந்த இடம், சாவாமை பெற்றவர்களும், மீண்டும் பிறப்பு எய்தாதவர்களும், மிகுதியான தவத்தைப் புரிந்தவர்களும், மூப்பு எய்தாத முனிவர் பலரும் வந்து வணங்கும் திருமுதுகுன்றமாகும். நாமும் அதனைச் சென்றடைவோம்.
125 |
தழல்சேர்தரு திருமேனியர் மழமால்விடை மிகவேறிய விழவோடொலி மிகுமங்கையர் முழவோடிசை நடமுன்செயு |
1.012.7 |
தழலை ஒத்த சிவந்த திருமேனியரும், பிறைமதி அணிந்த சடைமுடியினரும், இளமையான திருமாலாகிய இடபத்தில் மிகவும் உகந்தேறி வருபவரும், வேதங்களை அருளியவருமாகிய சிவபிரான் எழுந்தருளிய கோயில், விழாக்களின் ஓசையோடு அழகு மிகு நங்கையர் தக்க நடனசாலைகளில் முழவோசையோடு பாடி நடனம் ஆடும் திருமுதுகுன்றம் ஆகும். அதனை நாமும் சென்றடைவோம்.
126 |
செதுவாய்மைகள் கருதிவ்வரை கதுவாய்கள்பத் தலறீயிடக் மதுவாயசெங் காந்தண்மலர் முதுவேய்கண்முத் துதிரும்பொழின் |
1.012.8 |
பொல்லா மொழிகளைக் கருதிக் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய இராவணனின் வடுவுள்ள வாய்கள் பத்தும் அலறும்படி கால்விரலால் ஊன்றி அடர்த்த சிவ பிரானது கோயில் விளங்குவதும், தேன் நிறைந்த இடம் உடைய செங்காந்தள் மலர்களாகிய கைகள் நிறையும்படி முதிய மூங்கில்கள் குறைவின்றி முத்துக்களை உதிர்க்கும் பொழில்களால் சூழப்பட்டதுமாகிய திருமுதுகுன்றை நாம் அடைவோம்.
127 |
இயலாடிய பிரமன்னரி செயலாடிய தீயாருரு புயலாடுவண் பொழில்சூழ்புனற் முயலோடவெண் கயல்பாய்தரு |
1.012.9 |
தற்பெருமை பேசிய பிரமன் திருமால் ஆகிய இருவராலும் அறிதற்கரிய திருவிளையாடல் செய்து எரியுருவில் எழுந்த செல்வனாகிய சிவபிரான் எழுந்தருளியதும், மேகங்கள் தோயும் வளமையான பொழில்கள், நீர்வளம் மிக்க நிலப்பரப்புகள், நீர் நிலைகட்கு அருகில் வரும் முயல்கள் ஓடுமாறு வெள்ளிய கயல் மீன்கள் துள்ளிப் பாயும் குளங்கள் இவற்றின் வளமுடையதும் ஆகிய திருமுதுகுன்றத்தை நாம் அடைவோம்.
128 |
அருகரொடு புத்தரவ மருகன்வரு மிடபக்கொடி கருகுகுழன் மடவார்கடி முருகன்னது பெருமைபகர் |
1.012.10 |
சமணர்களாலும் புத்தர்களாலும் அறியப் பெறாத அரனும், இமவான் மருகனும், தோன்றும் இடபக் கொடி உடையோனும், ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், மலர் சூடிய கரிய கூந்தலை உடைய இளம் பெண்கள் தெய்வத்தன்மை வாய்ந்த குறிஞ்சிப் பண்ணைப் பாடி முருகப் பெருமானின் பெருமைகளைப் பகரும் திருமுதுகுன்றமாகும். அதனை நாம் அடைவோம்.
129 |
முகில்சேர்தரு முதுகுன்றுடை புகலிந்நகர் மறைஞானசம் நிகரில்லன தமிழ்மாலைக பகரும்மடி யவர்கட்கிடர் |
1.012.11 |
மேகங்கள் வந்து தங்கும் திருமுதுகுன்றத்தில் விளங்கும் பெருமானைப் பழமையான மிக்க புகழையுடைய புகலி நகரில் தோன்றிய மறைவல்ல ஞானசம்பந்தன் உரைத்த ஒப்பற்ற தமிழ்மாலைகளாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பகர்ந்து வழிபடும் அடியவர்களைத் துன்பங்களும் அவற்றைத் தரும் பாவங்களும் அடையா.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுதுகுன்றம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - முதுகுன்றடை, திருமுதுகுன்றமாகும், அடைவோம், சிவபிரான், எழுந்தருளிய, கொண்டு, கோயில், திருமுதுகுன்றம், மேகங்கள், நாமும், பலரும், சென்றடைவோம், திருமுறை, பத்தும், ஏந்திய, அணிந்த, விளங்கும், திருச்சிற்றம்பலம், வாழும், வில்லா, முனிவர்தொழு, வணங்கும்