முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.014.திருக்கொடுங்குன்றம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.014.திருக்கொடுங்குன்றம்
1.014.திருக்கொடுங்குன்றம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொடுங்குன்றேசுவரர் (எ) கொடுங்குன்றீசர்.
தேவியார் - அமுதவல்லியம்மை (எ) குயிலமுதநாயகி.
141 |
வானிற்பொலி வெய்தும்மழை கூனற்பிறை சேருங்குளிர் ஆனிற்பொலி யைந்தும்அமர்ந் தேனிற்பொலி மொழியாளொடு |
1.014.1 |
வளைந்த பிறைமதி வானின்கண் விளங்கும் மழை மேகங்களைக் கிழித்து ஓடிச் சென்று சேரும் குளிர்ந்த சாரலை உடைய கொடுங்குன்றம், பசுவிடம் விளங்கும் பால் நெய் தயிர் கோமயம் கோசலம் ஆகிய ஐந்து பொருள்களையும் மகிழ்ந்தாடி உலகம் போற்றத் தேன்போலும் மொழியினைப் பேசும் உமையம்மையோடு சிவபிரான் மேவிய திருத்தலமாகும்.
142 |
மயில்புல்குதண் பெடையோடுட குயிலின்னிசை பாடுங்குளிர் அயில்வேன்மலி நெடுவெஞ்சுடர் எயில்முன்பட எய்தானவன் |
1.014.2 |
ஆண் மயில்கள் தண்ணிய தம் பெடைகளைத் தழுவித் தோகைவிரித்தாடும் விரிந்த சாரலையும், குயில்கள் இன்னிசைபாடும் குளிர்ந்த சோலைகளையும் உடைய கொடுங்குன்றம், கூரிய வேல்போலும் நெடிய வெம்மையான ஒளியோடு கூடிய அனலைக் கையில் ஏந்தி நின்றாடி முப்புரங்களைக் கணை தொடுத்து அழித்த சிவபிரான் எழுந்தருளிய திருத்தலமாகும்.
143 |
மிளிரும்மணி பைம்பொன்னொடு குளிரும்புனல் பாயுங்குளிர் கிளர்கங்கையொ டிளவெண்மதி வளர்கொன்றையும் மதமத்தமும் |
1.014.3 |
அருவிகள், ஒளிவீசும் மணிகள், பசும்பொன், மணமுள்ள மலர்கள் ஆகியவற்றைத் தள்ளிக்கொண்டு வந்து நீரைச் சொரிதலால், குளிர்ந்துள்ள மலைச்சாரலை உடைய கொடுங்குன்றம், பொங்கி எழும் கங்கையோடு, வெள்ளிய பிறைமதி பொருந்திய சடை முடிமேல், மணம் வளரும் கொன்றை மலரையும் மதத்தை ஊட்டும் ஊமத்தை மலரையும் அணிந்துள்ள சிவபிரானது வளமையான நகராகும்.
144 |
பருமாமத கரியோடரி குருமாமணி பொன்னோடிழி பொருமாவெயில் வரைவில்தரு பெருமானவ னுமையாளொடு |
1.014.4 |
பெரிய கரிய மத யானைகளும் சிங்கங்களும் இரைதேடவும், நீர் பருகவும் இறங்கிவரும் பெரிய மலைச்சாரலையும், நிறம் பொருந்திய பெரிய மணிகளைப் பொன்னோடு சொரியும் அருவிகளையும் உடைய கொடுங்குன்றம், தன்னோடு பொரவந்த பெரிய முப்புரக் கோட்டைகளை மலை வில்லில் தொடுத்த கணையால் பொடியாக்கிய சிவபிரான் உமையம்மையோடு எழுந்தருளிய பெருநகராகும்.
145 |
மேகத்திடி குரல்வந்தெழ கூகைக்குல மோடித்திரி நாகத்தொடும் இளவெண்பிறை பாகத்தவ னிமையோர்தொழ |
1.014.5 |
மேகத்திடம் இடிக்குரல் தோன்றக் கேட்டுக் கோட்டான் என்னும் பறவை இனங்கள் அஞ்சி மலையினின்றும் இறங்கி வந்து ஓடித் திரியும் மலைச்சாரலை உடைய கொடுங்குன்றம், நாகத்தோடு இளவெண்பிறையை முடியிற் சூடி அழகிய உமை நங்கையை ஒருபாகமாகக் கொண்டுள்ள சிவபிரான், தேவர்கள் தன்னை வணங்குமாறு எழுந்தருளும் பழமையான நகராகும்.
146 |
கைம்மாமத கரியின்னின கொய்ம்மாமலர்ச் சோலைபுக அம்மானென வுள்கித்தொழு பெம்மானவ னிமையோர்தொழ |
1.014.6 |
துதிக்கையை உடைய கரிய மதயானைகளின் கூட்டம் இடிக்குரல் அதிரக்கேட்டு அஞ்சிக் கொய்யத்தக்க மணமலர்களை உடைய சோலைகளில் புகுந்து ஒளிதற்குச் செறிந்து வரும் கொடுங்குன்றம், இவரே நம் தலைவர் என இடைவிடாது நினைந்து தொழும் அடியவர்கட்கு அருள் செய்யும் சிவபெருமான் விண்ணோர் தன்னைத் தொழ வீற்றிருந்தருளும் பெருநகராகும்.
147 |
மரவத்தொடு மணமாதவி குரவத்தொடு விரவும்பொழில் அரவத்தொடு மிளவெண்பிறை நிரவச்சடை முடிமேலுடன் |
1.014.7 |
கடம்பு, குருக்கத்தி, முல்லை ஆகியவற்றின் நாள் அரும்புகள் குரவமலர்களோடு விண்டு மணம் விரவும் பொழில் சூழ்ந்த தண்ணிய கொடுங்குன்றம், அரவு, வெள்ளிய இளம்பிறை, மணம் விரவும் கொன்றை மலர் ஆகியவற்றை நிரம்பத் தன் முடிமேல் அணிந்துள்ள சிவபிரானது நெடுநகராகும்.
148 |
முட்டாமுது கரியின்னின குட்டாச்சுனை யவைமண்டிநின் ஒட்டாவரக் கன்றன்முடி பிட்டானவ னுமையாளொடு |
1.014.8 |
யானைக் கூட்டங்கள் யாரும் தடுப்பார் இன்றி முதிய மூங்கில்களை உண்டு வெறுத்துப் பிறரால் அகழப்படாது இயற்கையிலேயே ஆழமாக உள்ள சுனைகளில் இறங்கிநின்று நீராடும் கொடுங்குன்றம், தன்னோடு மனம் பொருந்தாது கயிலை மலையை எடுத்த அரக்கனாகிய இராவணனின் முடியணிந்த பத்துத் தலைகளையும் அடர்த்து ஒடித்தவனாகிய சிவபெருமான் உமையம்மையோடு மேவும் பெருநகராகும்.
149 |
அறையும்மரி குரலோசையை குறையும்மன மாகிம்முழை மறையும்மவை யுடையானென இறையும்மறி வொண்ணாதவன் |
1.014.9 |
சிங்கத்தின் கர்ச்சனை ஓசையைக் கேட்டு அஞ்சிக் கொல்லும் தன்மையினவாகிய யானைகள் மன எழுச்சி குன்றி மலையிடையே உள்ள குகைப் பகுதிகளில் மறைந்து வைகும் கொடுங்குன்றம், வேதங்களுக்கு உரியவனாய நான்முகன் திருமால் ஆகிய இருவரும் சிறிதும் அறிய முடியாதவனாய் நின்ற சிவபிரான் மேவிய அழகிய நகராகும்.
150 |
மத்தக்களி றாளிவ்வர குத்திப்பெரு முழைதன்னிடை புத்தரொடு பொல்லாமனச் பத்தர்க்கருள் செய்தானவன் |
1.014.10 |
மதம் பொருந்திய யானைகள் தம்மின் வலிய சிங்கம் வருதலைக் கண்டு அஞ்சி மலையைக் குத்திப் பெருமுழையாக்கி, அதனிடை வைகும் கொடுங்குன்றம், புத்தர்களும் பொல்லா மனமுடைய சமணர்களும் புறங்கூறத் தன் பக்தர்கட்கு அருள் செய்பவனாகிய சிவபிரான் மேவிய பழமையான நகராகும்.
151 |
கூனற்பிறை சடைமேன்மிக கானற்கழு மலமாநகர் ஞானத்துயர் சம்பந்தன ஊனத்தொடு துயர்தீர்ந்துல |
1.014.11 |
வளைந்த பிறை மதியைச் சடைமுடிமீது அழகு மிகுமாறு அணிந்த சிவபிரானது திருக்கொடுங்குன்றைக் கடற்கரைச் சோலைகளால் சூழப்பட்ட கழுமலமாநகரின் தலைவனும் நல்ல கவுணியர் கோத்திரத்தில் தோன்றியவனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்மாலைகளை ஓதி வழிபட வல்லவர் தம்மிடமுள்ள குறைபாடுகள் நீங்கித்துன்பங்கள் அகன்று உலகம் போற்றும் புகழுடையோராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கொடுங்குன்றம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - குன்றம், கொடுங்குன்றம், சிவபிரான், நகராகும், சிவபிரானது, பெருநகராகும், பொருந்திய, கொன்றை, மேவும்பெரு, உமையம்மையோடு, சாரற்கொடுங், தன்னோடு, வைகுங்கொடுங், யானைகள், வைகும், னுமையாளொடு, விரவும், னிமையோர்தொழ, சிவபெருமான், அஞ்சிக், கரியின்னின, பழமையான, இடிக்குரல், செய்யும், முடிமேல், பிறைமதி, விளங்கும், குளிர்ந்த, வளைந்த, கூனற்பிறை, திருமுறை, திருச்சிற்றம்பலம், திருத்தலமாகும், மேயவ்வெழில், திருக்கொடுங்குன்றம், மலரையும், வெள்ளிய, மலைச்சாரலை, தண்ணிய, எழுந்தருளிய, அணிந்துள்ள