ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்
2.2 இரண்டாமோத்துப்பெயர்
2.2.1 முதலாவது - வேற்றுமையியல்
53. |
பெயரேவேற்றுமை பெற்றிடம்பாறிணை காட்டித்தொழிலல காலங்காட்டா மரபுகாரண மாக்கங்குறியென் றவைநாற்றகுதி யாகுமென்ப. | 54. |
காரணமில்லன மரபுபெயரே காரணங்காட்டிக் காரணப்பயன்கொளல் காரணப்பெயரே காரணங்காட்டா ததன்பயன்கொள்வ தாகுபெயரே காரணங்காட்டினுங் காரணப்பயன்கொளா விடுகுறிப்பெயரா மென்பகற்றோரே. | 55. |
வேற்றுமைப்படுத்தலின் வேற்றுமையாமிவை பெயர்ஐஆல்குஇன் அதுகண்விளியெட்டே. | 56. |
எழுவாயுருபா மியல்பிற்பெயரே மீண்டதன்பொருளாம் வினைபெயர்வினாவே. | 57. |
"இரண்டாவதனுரு பையேயதன்பொரு ளாக்கலழித்த லடைதனீத்த லொத்தலுடைமை யாதியாகும்." | 58. |
"மூன்றாவதனுரு பாலானோடொடு கருவிகருத்தா வுடனிகழ்வதன்பொருள்." | 59. |
"நான்காவதற்குரு பாகுங்குவ்வே கொடைபகைநோச்சி தகவதுவாதல் பொருட்டுமுறையாதியி னிதற்கிதெனல்பொருளே." | 60. |
"ஐந்தாவதனுரு பில்லுமின்னு நீங்கலொப்பெல்லை யேதுப்பொருளே." | 61. |
ஆறனொருமைக் கதுவுமாதுவும் பன்மைக்கவ்வு முருபாம்பண்புறுப் பொன்றன்கூட்டம் பலவினீட்டந் திரிபினாக்கஞ்சேர்ந்த தற்கிழமையும் பிறிதின்கிழமையும் பேணுதல்பொருளே. [நன்னூல் 300-ம் சூத்திரத்தைக்காண்க.] | 62. |
"எழனுருபு கண்ணாதியாகும் பொருண்முதலாறு மோரிருகிழமையி னிடனாய்நிற்றலி னிதன்பொருளென்ப." | 63. |
அதனோடைம்முத லாறுமேற்கும். | 64. |
ஐஆன்குச்செய் யுட்கவ்வுமாகு மாகாவஃறிணைக் கானல்லாத. | 65. |
உவ்வீறுவினாச்சுட் டெண்ணிவைவேற்றுமை வழியன்சாரியை மருவவும்பெருமே யற்றுறும்பன்மையாம் வினாச்சுட்டென்ப வவ்விறுமஃறிணைப் பன்மைக்கற்றே. | 66. |
"எல்லாமென்ப திழிதிணையாயி னற்றோடுருபின் மேலும்முறுமே யன்றேனம்மிடை யடைந்தற்றாகு மெல்லாருமெல்லீரு மென்பவற்றும்மை தள்ளிநிரலே தம்நும்சாரப் புல்லுமுருபின் பின்னரும்மே." | 67. |
"ஆமாகோனவ் வணையவும்பெறுமே." | 68. |
"தான் தாம் நாமுதல் குறுகும்யான்யாம் நீ நீர் என் எந் நின் நும் ஆம் பிற குவ்வின் அவ்வரு நான்காறிரட்டா." | 69. |
"எட்டனுருபே யெய்துபெயரீற்றின் றிரிபுகுன்றன் மிகுதலியல்பயற் றிருபுமாம்பொருள் படர்க்கையோரைத் தன்முகமாகத் தானழைப்பதுவே." | 70. |
எப்பெயர்க்கண்ணு மியல்புமேயு மிகரநீட்சியு முருபாமன்னே. | 71. |
"ஐயிறுபொதுப்பெயர்க் காயுமாவு முருபாமல்லவற் றாயுமாகும்." | 72. |
"ஒருசார்னவ்விற் னுயர்திணைப் பெயர்க்கண் ணளபீறழிவய னீட்சியதனோ டீறுபோதலவற் றோடோவுற லீறழிந்தோவர லிறுதியவ்வாத லதனோடயறிரிந் தேயுறலீறழிந் தயலேயாதலும் விளியுருபாகும்." | 73. |
"ளஃகானுயர்பெயர்க் களபீறழிவய னீட்சியிறுதி யவ்வொற்றாத லயலிலகரமே யாதலும்விளித்தனு." | 74. |
"ரவ்வீற்றுயர்பெயர்க் களபெழலீற்றய லகரம் இ ஈ யாதலாண்டை ஆ ஈ யாத லதனோடேயுற லீற்றேமிக்கயல் யாக்கெட்டதனய னீடலீருற விவையுமீண்டுருபே." | 75. |
"லகாரவீற்றுயர்பெயர்க் களபயனீட்சியும் யகாரவீற்றிற்கள புமாமுருபே." | 76. |
"னவ்வீற்றுயர்திணை யல்லிருபெயர்க்கண் ணிறுதியழிவத னோடயனீட்சி." | 77. |
"லளவீற்றஃறிணைப் பெயர்ப்பொதுப்பெயர்க்கண் ணீற்றயனீட்சியு முருபாகும்மே." | 78. |
"அண்மையினியல்புமீ றழிவுஞ்சேய்மையி னளபும்புலம்பி னோவுமாகும்." | 79. |
பலர்பால்ரவ்வுங் கள்ளுமீறுமே. | 80. |
ஒன்றுதுவ்வுறின் அ ன ஐயும் பலவின்பாலீறுங் கள்ளீறுமற்றவை யன்றியுமிருமைக் கஃறிணைப்பொதுவே. | 81. |
"ஒருமையிற் பன்மையும் பன்மையி னொருமையு மோரிடம் பிறவிடந் தழுவலு முளவே." | 82. |
"எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுணர்ந்தோர் செப்பின ரப்படி செப்புதன் மரபே." |
முதலாவது - வேற்றுமையியல் - முற்றிற்று
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 18 | 19 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம், Thonnool Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்