ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்
தொன்னூல் விளக்கம் என்பது ஒரு தமிழ் இலக்கண நூல். வீரமாமுனிவர் என அறியப்பட்டவரும், கான்சுடன்டைன் சோசப்பு பெசுக்கி (Costanzio Giuseppe Beschi) [1680-1746] என்னும் இயற்பெயர் கொண்டவருமான இத்தாலியப் பாதிரியார் இந்நூலை இயற்றினார். இது 1730 ஆம் ஆண்டில் எழுதப்பட்டு[1], 1838 ஆம் ஆண்டில் புதுவையில் முதல் தடவை பதிப்பிக்கப் பட்டது. ஐந்திலக்கணம் கூறும் இந்நூல் ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு.
கடவுள் துணை
இஃது
வீரமாமுனிவர் திருவாய்மலர்ந்தருளிய
ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம்
வீரமாமுனிவர் திருவாய்மலர்ந்தருளிய
ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம்
பொதுப்பாயிரம்
0 |
நீர்மலிகடறவழ் நிலன்முதன்மற்றருஞ் சீர்மலியுலகெலாஞ் செய்தளித்தழிப்ப வல்லவனாய்முதன் மட்டீறொப்பெதி ரில்லவனாயுய ரிறையோனொருவனைப் பன்மையொழியப் பணிந்தேயிராவிருட் டன்மையொழியத் தரணியிற்றோன்றிய வாதவனிகரிரு ளகத்தறவன்னா னோதியமறைநூ லோதினனாகி யம்மெய்ப்பொருளொன் றனைவருமுணரச் செம்மெய்ப்பொருளத் திருமறைவழங்க வமைத்துளத்தெழுந்த வாசையுட்டுண்டிச் சமைத்துளயாவருந் தாங்கத்தருகென வேவியதாகவிப் பணியேற்றிநூன் மேவியவைம்பொருள் விளக்கலுணர்ந்து விரிவிலாத்தொன்னூல் விளக்கமெனும்பெயர்த் தரியவாசிரிய ரருந்தமிழ்ச்சொல்லிற் பிறநூன்முடிந்தது பெயர்த்துடன்படுத்தியும் புறநூன்முடிந்தது பொருத்தியுந்தானொரு வழிநூன் முடித்தனன் வாய்ப்பருமெய்ம்மறை மொழிநூலத்தராய் முதிர்சிறப்பிணையி லிரோமைநாட்டினின் றெய்தியமுனிவருள் விரோதமொழி தயைமேவக நேரமாதவத்தின் வீரமாமுனியே. |
பொதுப்பாயிரம் முற்றிற்று
சிறப்புப்பாயிரம்
1. |
சொன்னூலடையாத் தொகைக்குணத்தொன்றா முன்னூறந்த முதல்வனைப்போற்றி நன்னூலாய்ந்தோர் நவின்றவைம்பொருட் டொன்னூல்விளக்கமுன் சொற்றுதுமெழுத்தே. |
முதலாவது - எழுத்ததிகாரம்
1.1 முதலாவதெழுத்தியல்
2. |
தோற்றமும்வகுப்புந் தோன்றும்விகாரமுஞ் சாற்றுளித்தோன்றுந் தானெழுத்தியல்பே. | 3. |
உயிரிடை யினமிடறுரம்வலியுச் சிமெலியியை முதலிட மாயிதழ் மூக்கணம்பன்னா வைந்துணையிடத்தா மக்கரப்பிறப்பே. |
முதலாவதெழுத்தின் றோற்றம் - முற்றிற்று
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம், Thonnool Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்