ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்
1.3 மூன்றாவதெழுத்தின் விகாரம்
21. |
திரிபழி வாக்கந் திரட்டுநால் விகாரம் | 22. |
அல்வழி வேற்றுமை யாமிரண்டவற்றுள் விரியினு முருபெடா வினைசார் பெயரே யல்வழிப் பொருட்பெய ராகுமென்ப வேற்றுரு பில்லது விரிக்குங் காலை வேற்றுமைக் கொளினது வேற்றுமைப் பொருளே. | 23. |
வலிவரின் மஃகான் வருக்கமாகு நவ்வரின் றனிக்குறின் மவ்வுநவ்வா மவ்வழியன்றி மகரங் கெடுமே. | 24. |
ண ன முன்தகரம் ட ற வாமுறையே ண ன வல்வழிக்கென்று மியல்பாம் வேற்றுமைப்பொருட்கவை வலிவரின் ட ற வாம் ண ன முன்குறில்வழி நகரம் ண ன வா மற்றது ண ன முன்மாய்ந்து கெடுமே. | 25. |
தேனெனுமொழிமெய் சேரிருவழியுந் தானியல்பாமெலிவரின் றன்னீற்றழிவும் வலிவரினீறுபோய் வலிமெலிமிகலுமா மின்பின்னுவ்வுறில் வன்மையுமிகுமே யென்றன்வலிவரி னியல்புந் திரிபுமா நின்னென்றுமியல்பாய் நிற்குமென்ப வூன்குயினியல்பா முற்றவேற்றுமைக்கு மெகின்மரமல்லதே விருவழியியல்பு மவ்வுறிவலிவரின் வலிமெலிமிகலுமாம். | 26. |
லளவேற்றுமையிற் றடவுமல்வழி யவற்றோடுறழ்வும் வலிவரிந்தவ்வரி னியல்புந்திரிந்தபின் கெடுதலுமாகும் லளத்தனிக்குறிற்கீ ழல்வழித்தவ்வரின் றிரிந்தொழிந்தாய்தஞ் சேருமென்ப லளமுன்மெலிவரி னிருவழினணவா மவற்றுணத்திரிந் தழிவாந்தனிக்குறி னண்ணியலளமுன் நவ்வுனணவாம். | 27. |
சஞயவரின் ஐஅ ச்சமமெனத்திரியும். | 28. |
அடைமொழிஉக்குறள் ஐயாதலுமாம். | 29. |
தெவ்வென்பதிருவழி உவ்வெய்திச்சேரும் வலிமிகுமவ்வரின் வவ்வுமவ்வாமென்ப. | 30. |
யரழமுன்வலிவரினல் வழிக்கியல்பு மடைமொழிக்காக்கமு மவைவேற்றுமைக்கண் மிகலுந்தன்னின மெலியெய்தலுமாம். | 31. |
சிலபலதம்மொடு சேர்புளியியல்பு முதன்மெய்க்கடைமெய் மிகலுமீறுபோய் லறவ்வாதலும் லாவாதலுமாம் பிறவரினகர நிற்றலுங் கெடலுமாம். | 32. |
ஆமாவல்வழி ஆவீறுமுற்று மியாவிவைமுன்வலி மிகாதியல்பாகும். | 33. |
தனிக்குறிலீற்றாத் தகும்பெயர்செய்யுட்கே ஆஅவ்வாத லுமதனோ டுவ்வணையலுமாம். | 34. |
தமிழ்வேற்றுமைக் கச்சாரவும்பெறுமே. | 35. |
தனிவழிஐயுந் தனிக்குறில்யவ்வுந் துவ்வுநொவ்வுந் தொடர்மெலிமிகுமே. | 36. |
தனிக்குறின்மெய்யுயிர் சார்புளிமிகும்ரழத் தனிக்குறிற்சாரா தாமுமிகாவென்ப. | 37. |
மெலிவுறிற்பாவிடை மென்மைவன்மை குறுமைநீட்சி குறுந்தொகைவிரிவே மற்றொருமொழிமூ வழிகுறைதலுமென வேண்டுளித்தனிமொழி விகாரமொன்பதே. | 38. |
இருமொழி யொருமொழி யெனச்சங்கீர்தமாய் நிலைமொழியீற்றுயிர் நீங்கலுமதனோ டணைமொழிமுதற்கண் அ ஆவாதலும் இ ஈ ஏ யாதலும் உ ஒ வாதலுமாம். | 39. |
ஈறுபோயிடை யாவேற்றிரட்டிய சொல்லேமிகுதி தோற்றுமென்ப விலக்கணமின்றி யியைந்துளபிறவே. | 40. |
உயிரேகுறினெடி லொற்றுமூவின முயிர்மெய்யாய்த மோரறுகுறுக்க மளபெடைமாத்திரைப் புணர்பெனவகுத்து ணநமனலளதவு நண்ணுந் திரிபல தேனைதிரியா தியல்பாமென்ன விவண்விளக்கிய வெழுத்தினியல்பே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 18 | 19 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம், Thonnool Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்