ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்
2. இரண்டாவது - சொல்லதிகாரம்
2.1 முதலோத்துச் சொற்பொதுவியல்
41. |
முச்சயத்தொழிற்கொடு முச்சகந்தனித்தா ளச்சயனடிபணிந் தறைகுசொல்விளக்கே. | 42. |
எச்சொல்லும் பெயர்வினை யிடையுரியெனநான் கிவற்றுட்பொதுவென வியற்சொற்றிரிசொ லொருமொழிதொடர்மொழி யொருவிலாப்பொதுமொழி பகாப்பதமென்றா பகுபதமென்றா வாகுபெய ரிருதிணையைம் பான்மூவிடஞ் சாரியையெனப்பொது தகுதியீராறே. | 43. |
இயற்சொல்லென்ப தியல்பிற்றிரிபிலா தானெளிதெவர்க்குந் தன்பொருள்விளக்கலே. | 44. |
திரிசொல்லொருபொருட் டெரிபலசொல்லும் பலபொருட்கொருசொல்லும் பயன்படற்குரியன. | 45. |
ஒருமொழியொன்றையும் பலவையுந்தொடர்மொழி பொதுவவ்விரண்டையும் புகலுந்தன்மைய தொகைதொகாவென விருதொடர்மொழியென்ப. | 46. |
பகாப்பதமென்ப பயனாற்குறியாற் பகாதொன்றாகிப் பகுப்பிற்பயனிலா நிகழ்ந்தியல்கின்ற நால்வகைச்சொல்லே. | 47. |
பகுபதமொன்றாய்ப் பலவொருங்குணர்த்திப் பொழுதுகொள்வினையும் பொருளிடங்காலஞ் சினைகுணந்தொழிலாறுஞ் சேர்ந்தபெயருமாம். | 48. |
"உயிர்மவிலாறுந் தபநவிலைந்துங் கவசவினாலும் யவ்விலொன்று மாகுநெடினொதுவாங் குறிலிரண்டோ டோரெழுத்தியல் பதமாறேழ்சிறப்பின பகாப்பதமேழும் பகுபதமொன்பது மெழுத்தீறாகத் தொடருமென்ப." | 49. |
ஆகுபெயரென்ப தவ்வவமுதற்சினை கருவிகாரியம் பண்பிவற் றொன்றன்பெயர் பிறிதொன்றற்குரைக்கும் பெற்றிதானே. | 50. |
திணையிரண்டென மக்கடேவர்நரக ராவருயர்திணை யஃறிணைபிறவே பாலைந்தாண்பெண் பலருயர்திணையே யன்றியுமொன்று பலவஃறிணையென்ப. | 51. |
மூவிடந்தன்மை முன்னிலைபடர்க்கை தன்மையாகு நான்யான்நாம்யா முன்னிலைநீநீயிர் நீவிர்நீரெல்லீ ரேனையபடர்க்கை யெல்லாம்பொதுவே யானானீதா னொருமையாநாநீர்நீவி ரெல்லீர்நீயீர்தர மெல்லாம்பன்மை. | 52. |
சாரியையென்ப சார்பத்மெழுத்தெனப் பதத்தொடுவிகுதியும் பதமுமுருபும் புணர்புளியிடையிற் புணர்வனவவற்றுள் அ எ உ ஐ குன் அன்னானின்ன லற்றிற்றத்தந் தம்நம்நும்மெனப் பதினேழன்றிப் பிறவுமாம்பொதுச் சாரியையவற்றோர் வழியன்றாகும்விகற்டடூ |
முதலோத்துச் சொற்பொதுவியல் - முற்றிற்று
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 18 | 19 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம், Thonnool Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்