ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்
4.3. மூன்றாமோத்துச் செய்யுண்மரபியல்
251. |
செய்யு டெரிவுற முத்தகங் குளகந் தொகைதொடர் நிலையெனத் தொகுதி நான்கவற்றுண் முத்தகந் தனித்தாய் முடியுஞ் செய்யுளே. | 252. |
குளக மொருவினை கொளும்பல பாட்டே. | 253. |
தொகைநிலைச் செய்யு டோன்றக் கூறி னொருவ னுரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும் பொருளிடங் காலந் தொழிலென நான்கினும் பாட்டினு மளவினும் கூட்டிய தாகும். | 254. |
தொடர்நிலைப் பொருளினுஞ் சொல்லினு மாகும் பொருட்டொடர் நிலைதற் பொருடரத் தானே பற்பல பாட்டாய்ப் பயனிற் றொடருஞ் சொற்றொடர் நிலையெனிற் றூக்கந் தாதியே. | 255. |
பொருட்டொடர் நிலையே புகலிற் காப்பியம் பெருங்கா பியமெனப் பிரிவிரண் டவற்றுட் காப்பிய மறமுத னான்கிற் குறைநவும் புராணம் பற்கதை புனைநவு மென்ப. | 256. |
பெருங்காப் பியநிலை பேசுங் காலை வாழ்த்து வணக்கம் வரும்பொரு ளிவற்றினொன் றேற்புடைத் தாக முன்வா வியன்று நாற்பொருட் பயக்கு நடைநெறித் தாகித் தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய் மலைகட னாடு வளர்நகர் பருவ மிருசுடர் தோற்றமென் றினையன புனைந்து நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல் பூம்பொழி னுகர்தல் புனல்விளை யாட றேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென் றின்னன புனைந்த நன்னடைத் தாகி மந்திரந் தூது செலவிகல் வென்றி சந்தியிற் றொடர்ந்து சுருக்க மிலம்பகம பரிச்சேத மென்னும் பான்மையின் விளங்கி நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் கற்றோர் புனையும் பெற்றிய வென்ப கூறிய வுறுப்பிற் சிலகுறைந் தியலினும் வேறுபா டின்றென விளம்பினர் புலவர். | 257. |
பிள்ளைக் கவியின் பெற்றியைக் கூறச சுற்ற வகுப்பொடு தெய்வங் கொலைகாப்ப வொற்றைப் படமூன் றாதி மூவே ழீறாய் மதியினு மைந்தே ழாண்டினுங் காப்புச் செங்கீரை தால்சப் பாணி முத்தம் வரானை யம்புலி சிறுபறை சிற்றில் சிறுதே ராடவர்க் கேகடை முன்றொழித் தரிவையர்க் காங்கழங் கம்மானை யூச லென்றிவை யவ்விரு பாற்குப் பத்துறுப் பாயொவ் வொன்று விருத்தம் பப்பத் தாகப் பாட லென்ப. | 258. |
கலம்பகத் துட்புயங் கைக்கிளைத் தவமே காலம்வண் டம்மானை காற்றுப் பாணன் குறஞ்சித் திரங்கல் குளிர்தழை சம்பிரத மறந்தூ தூசன் மதங்க மடக்கென விரவிமூ வாறும் வேண்டு முறுப்பா வொருபோகு வெண்பா வுடன்கலித் துறையிவை நிரையே முதற்கண் ணின்றுபிற் கலந்தவைம் பாத்துறை விருத்த மந்தாதி வருமே வந்தா லீசர்க்கு வருநூறு முனிமெய்யர்க் கைந்தஃகு மரசர்க் காந்தொண் ணூறு மமைச்சர்க் கெழுபது மைம்பதும் வணிகர்க் கமைந்த வேனையோர்க் காறைந் தளவே. | 259. |
பரணிக் காயிரம் பகடு கொன்ற தெரிவருந் தலைவனாய்த் தேவவாழ்த் தாதி கடைதிறப் புங்கனல் காய்நிலம் பாலையும் புடையிற் காளி பொலிந்த கோயிலும் பேயோடு காளி பேய்கள் காளியோ டோயில வுரைத்தலி லோர்ந்தவன் கீர்த்தி புகறலு மவன்வழி புறபொரு டோன்றவு மிகவெஞ் சமரும் விரும்பலு மென்றிவை யளவடி முதற்பல வடியா னீரடி யுளபஃ றாழிசை யுரைப்பது நெறியே. | 260. |
உலாவென மலைநதி யுயர்நா டூர்மாலை குலாவிய பரிகரி கொடிமுர சுயர்கோ லியைந்த தசாங்கமு மேழ்பருவத்தார் வியந்து தொழுதலும் வேண்டுறுப் பாயக் கலிவெண் பாவாற் குலமகற் புகழ்தலே. | 261. |
மடலென்ப துலாப்போல் வழங்கினுங் கண்ட மடவார் மயலும் வருந்தலை மகன்பெயர்ப் படமாறா வெதுகையும் பகர்த லுரித்தே. | 262. |
அங்க மாலையே யங்க வகுப்பெலாம் பாதாதி கேசமுங் கேசாதி பாதமுங் கலிவெண்பா வாதல் வெளிவிருத் தமாதல் வலிதெனப் புகழ்ந்து வகுத்த செய்யுளே. | 263. |
சின்னப்பூ வெனத்தெளி நேரிசை வெண்பா நூறுதொண்ணூ றெழுப தைம்பதாறைந்துமாய்ப் பாடித் தசாங்கம் பற்றிப் புகழ்வதே. | 264. |
ஒருபா வொருபதா முரைப்பரும் வெண்பா வகவல் கலித்துறை யவற்று ளொன்றாற் பத்தெனப் பாடிப் பகுத்த செய்யுளே. | 265. |
இருபா விருபதா மிணைந்த நாலைந்தாய் வெள்ளை யகவல் விரவிப் பாடலே. | 266. |
ஆற்றுப் படையென்ப வாற்றெதிர்ப் படுத்திய புலவர் பாணர் பொருநர் கூத்தர் பலபுக ழகவற் பாவொடு பாடலே. | 267. |
வருக்க மாலையாம் வருக்க வெழுத்தென வுயிரோடு க ச த ந ப ம வ வெனவெண் வரிமுதல் வந்து வருமெண் ணகவலே. | 268. |
மாலையே யகவலால் வழங்கு மவற்றுட் டானைபோர் வெற்றி தனித்தனி புகழ்வது தானை வஞ்சி வாகையென மூன்றாம். | 269. |
புகழ்ச்சி மாலையாம் பூங்குழ லாரை யிகழ்ச்சியில் குலமியை வஞ்சி பாட னாம மாலையா நம்பிகட் புகழ்தலே. | 270. |
செருக்கள வஞ்சியாஞ் செருமுகத் தாயவை சுருக்கிய வஞ்சி தொடுத்துப் பாடலே. | 271. |
வரலாற்று வஞ்சியாம் வல்லறமுத னான்கும் வருமா றுரைத்து வஞ்சி பாடலே. | 272. |
நான்மணி மாலையே நாற்பதந் தாதியாய்த் தான்மணிக் கொத்தன தந்தன்மன விருத்தமே. | 273. |
விருத்த விலக்கணம் விளம்புங் காலைக் குடையூர் நாடுகோல் பரிகரி வில்வடி வாள்வே லொன்பான் வகுப்புமன விருத்த மீரைந் தவ்வவற் றியற்பெயர் கொள்ளுமே. | 274. |
அட்ட மங்கல மெட்டுமன விருத்தங் கவிதொறுந் தெய்வங் காப்பவென் றுரைப்பது நவமணி மாலையந் நடைய வென்ப. | 275. |
பலசந்த மாலை பப்பத் தொருசந்தஞ சிலவந் தாதியாய்ச் செப்புமன விருத்தமே. | 276. |
ஊச லென்ப வூசலாய்க் கிளையள வாசிரிய விருத்த மாகப் பாடலுந் தன்னொலி வருங்கலித் தாழிசைப் பாடலும் வண்ணக முதற்கண் வரினு மியல்பே. | 277. |
கோவையே யகப்பொருட் கூறுபா டிசைப்பட நாவலர் கலித்துறை நானூறுரைத்தலே. | 278. |
இரட்டை மாலையா மிணைந்த பப்பத்தாய் வெண்பா கலித்துறை விரவிப் பாடலே. | 279. |
மணிமாலை வெண்பா வகைநா லைந்துட னிணையாய்க் கலித்துறை யிரட்டைப் பாடலே. | 280. |
பன்மணி மாலை பன்னிற் கலம்பகத் தொருபோ கம்மானை யூச லிவைநீத் தகவல் வெள்ளை யருங்கலித் துறையென் றவைசெறி நூறந் தாதியாய் வருமே. | 281. |
மும்மணிக் கோவையே முப்பதந் தாதியா யகவல் வெள்ளை கவித்துறை முறைவரு மும்மணி மாலையா முறைமாறி வெள்ளை கலித்துறை யகவல் கதிபெருஞ் செய்யுளே. | 282. |
இணைமணி மாலை யிணைவெண்பாக் கலித்துறை யகவன் மனவிருந்தந் தொடர்நூ றியம்பலே யலங்கார பஞ்சக மந்நால் வகைப்பாக் கலந்தவ் வைந்தாய்க் கதிபெறப் பாடலே. | 283. |
பாப்பொரு ளளவாதி பலபெய ருளபிற. | 284. |
முதன்மொழிப் பொருத்தந் தந்திடுங் காலை மங்கலஞ் சொல்லெழுத்துத் தானம் பாலுணாக கங்கில் வருணநாட் கதிகண மீரைந்தே. | 285. |
மங்கலப் பொருத்தமே கங்கை மலைநிலங் கார்புயல் பொன்மணி கடல்சொல் கரிபரி சீர்புக ழெழுத்தலர் திங்க டினகரன் றேர்வய லமுதந் திருவுல காரண நீர்பிறா வருமுத னிலைச்சொல் லியல்பே. | 286. |
சொல்லின் பொருத்தஞ் சொல்லுங் காலை யரிதுணர் சொல்லு மருந்திரி சொல்லுந் திரிபுடைச் சீருந் தீதா முதற்கே. | 287. |
எழுத்தின் பொருத்தமே யெழுவாய்ச் சீர்க்கண்முன் றைந்தே ழொன்பது வியநிலை நன்றா மிரண்டுநான் காறெட்டுச் சமநிலை வழுவாம். | 288. |
தானமே, குறினெடி றம்முனி னைந்துஇ உவ்வுடன் ஐ ஔவுஞ் சேர்புழி யைந்தா மவற்றுட் டலைமக னியற்பெயர் தான முதலாப் பாலன் குமர னிராசன் மூப்பு மரண முறையெண்ணி வருமுத லெழுத்தின் றானமீற் றிரண்டெனிற் றவிர்க வென்ப. | 289. |
பாலெனக, குறிலா ணெடில்பெண் மற்றுயி ராணுயிர் மெய்பெண் ணென்மரு முளரே யவைதம் பாவியல் கெடினுமா மற்றவை யலியே. | 290. |
உணவெண், அ இ உ எ க ச த ந ப ம வ வென் றமுதெழுத் தாகி யாதிச் சீர்க்குந் தசாங்கத் தயற்குந் தகுவன வென்ப யா யோ ரா ரோ லா லோ வவற்றொற்று மளபெடை மக்குற ளாய்தநஞ் செழுத்தே. | 291. |
வருணப் பொருத்தமே வருமுயி ரடங்கலும் கம்முத லாறுங் கைசிகர்க் காகுந் தமமுத லாறுந் தகுமன் னவர்க்கே ல வ ற ன வணிகர்க் காம்ழளச் சூத்திரர்க்கே யிம்முறை நஞ்செழுத் தியலினு மிழுக்கா. | 292. |
நாளின் பொருத்த நவிலுங் காலை நான்கு மைந்து மூன்றுமாய்ப் பிரியுயிர் கார்த்திகை பூராட முத்திரா டம்மே கவ்வரி நான்கிரண் டிருமுறை மூன்றிவை யோண மாதிரை முறையிரு பூசமே சவ்வரி நான்கைந்துந் தகுங்கடை மூன்றென வவ்வவை யிரேவதி யசுவதி பரணியே ஞவ்வரி ஞாஞே ஞொவ்வா மவிட்டமே தவ்வரி யிரண்டேழு தற்கடை மூன்று சோதி விசாகந் தூயோனிச் சதையமே நவ்வரி யாறு நண்ணு மிருமூன்றும் பொற்பனை கேட்டை பூரட் டாதியே பவ்வரி நான்கும் பிற்பக ரிரண்டா றெனவுத்திர மத்த மொளிசித் திரையே மவ்வரி யாறு மற்றிரு மூன்று மகமா யிலிய மகந்தொடர் பூரமே யயாவுத் திரட்டாதி யூயோ மூலமே வவ்வரி நந்நான்கு ரோகணி யிந்திர னவ்வவ் வெழித்திற் கவ்வவை குறித்தபின் னாண்மூ வொன்பதா நாயக னியற்பெயர் நாண்முதன் மங்கல நவில்சொல் லீறா வெண்ணி யிரண்டு நான்காறெட் டொன்பதா மன்றி யொன்றுமூன் றைந்தே ழாகா. | 293. |
கதியின் பொருத்த விதியைக் கூறில் ஒவ்வொழி குறிலே றவ்வொழி வலியே செவ்வி தாகுந் தேவர் கதியே னவ்வொழி மெலியே நெடின்முத னான்கும் வவ்வி லஃதாகு மக்கட் கதியே ஒஓய ர ல ழ ற வும் விலங்கின் கதியே ன வ ள ஐ ஔவு நரகர் கதியே. | 294. |
கணமியல் பொருத்தமே கணமெனுஞ் சீரினுண் முன்ன ரிந்திரன் முன்னிரை நிலனே நிரைநேர் நேர்மதி நேர்நிரை நிரைநீ ரிந்நாற் கணநன் றாமிவை முதற்சீர்க்கே யிருவிளங் காய்முறை யந்தரஞ் சூரிய னிருமாங் கனிமுறை வாயு தீயிவை வருமுதற் சீர்க்கு வழுக்கண மென்ப. | 295. |
சாதி நிலநிறந் தகுநா ளிராசிகோ ளோதின ராறு மொவ்வொரு பாவிற்கே வெண்பா முதற்குல முல்லை வெண்மை கார்த்திகை முதலேழுங் கடகம் விரிச்சிக மயிலை மதிகுரு வழங்கு மியல்பே. | 296. |
அகவற் கரச ரருங்குலங் குறிஞ்சி குருதிமக முதற் கொண்டெழு மேட மரிதனுச் செவ்வா யாதவ னியல்பே. | 297. |
கலிக்கே வணிகங் கழனி பொன்மை குலாம்பனை முதலாறுங் குடமொடு மிதுனந் துலாம்புதன் சனியெனத் தொக்கிவை யேற்கும். | 298. |
வஞ்சிக் கீறதியல் வருண நெய்த லஞ்சன மவிட்ட மாதி யேழும் விடைபெண் கலைபுகர் விடதர மியலுமே. | 299. |
ஆசு மதுரஞ் சித்திர வித்தார மேசில் கவிநான் கிவையென் பவற்று ளெடுத்த பொருளிற் றொடுத்த வின்பத்தி லடுத்த பொழுதிற் பாடுவ தாசே யுடைப்பொருட் பொலிவு முரிச்சொற் செல்வமுந் தொடைப்பொலி விகற்பமுந் தொடரணிச் சிறப்பு மிசைபெற வோசையு மியலப் பாடி வசையில் வருங்கவி மதுர மாமே கோமூத் திரிமுதற் கூறிய மிறைகவி சித்திர மென்பர் சிறுபான்மை யவையெனப் பத்திர முதனுண் பத்தியிற் பாடிச் சித்திரம் போல்வன சித்திரக் கவியே தொடர்நிலை தொகைநிலை தொடுத்த பல்பாவுந் தொடைபல வாகத் தொடுத்த வொருபாவும் வித்தாரக் கவியென விளம்பினர் புலவர். | 300. |
ஈரசை யைஞ்சீ ரெழுதளை யையடி யாறே ழொருதொடை யைம்பா மூவினஞ் செய்யு ணான்குஞ் செய்யுள் விகற்பமு மையிரு பொருத்தமு மாக மெய்யுரை யாப்பை விளக்கிய தொகையே. |
நான்காவது - யாப்பதிகாரம் - முற்றிற்று
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 18 | 19 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம், Thonnool Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்