ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்
4.2 இரண்டாமோத்துச்செய்யுளியல்
219. |
வெண்பா வகவல் விரிகலி வஞ்சி மருட்பா வெனவை வகைப்பா வன்றியுந் துறைதாழிசை விருத்தந் தூக்கின மூன்றே. |
வெண்பாவிலக்கணம் வருமாறு
220. |
வெள்ளைக் கியற்சீர் வெண்சீர் விரவி யேற்கு மளவடி யீற்றடி சிந்தடி யீற்றுச்சீ ரசைச்சீ ருக்குறண் மிகலுமாம். | 221. |
வெள்ளையுட் பிறதளை விரவா வெண்டளை யொன்றாய்ச் செப்ப லோசை யாமஃகே யேந்திசை வெண்சீ ரியற்சீர் தூங்கிசை யொழுகிசை யிரண்டு முளவெனி லாகும். | 222. |
குறள்சிந் தின்னிசை நேரிசை சவலை பஃறொடை யெனவெண் பாவா றவற்று ளீரடி குறளே யிருகுறள் சவலை யிருகுற ளிடைக்கூ னியைநே ரிசையே நாலடி விகற்ப நடையின் னிசையே நேரிசை யின்னிசை நேர்மூ வடிசிந்தே நாலடி மிக்கடி நண்ணிற் பஃறொடை யெனவறு வெண்பா வேற்கு நடையே. |
ஆசிரியப்பா விலக்கணம் வருமாறு
223. |
ஆசிரி யத்தொலி யகவலா யியற்சீர் தன்றளை பிறவுந் தழுவிய வளவடி நடையா னடந்து நால்வகைத் தாம்வை நேரிசை யிணைக்குற ணிலமண் டிலமே யடிமறி மண்டில மாகு மென்ப. | 224. |
நேரிசைச் சிறுமை நேருமூ வடியே வரையா பெருமையே மற்றடி யளவடி யீற்றயற் சிந்தடி யியைந்து வருமே. | 225. |
இணைக்குறண் முதலீற் றீரடி யளவடி யிடைக்குறள் சிந்தடி யிணையப் பெறுமே. | 226. |
நிலமண்டிலத் தெங்கு நீங்கா வளவடி யடிமறி மண்டில மந்நடைத் தாகி யடிமா றினுந்தா னழியா நிலைத்தே. | 227. |
கலியொலி துள்ளல் கலித்தளை பிறவும் வெண்சீர் பிறவும் விரவிய வளவடி தன்னா னடக்குந் தன்மைத் தாகி யொத்தாழிசை மூன்று மோரைங் கொச்சகம் வெண்கலி கலிவெண்பா விகற்பமீ ரைந்த்தே. | 228. |
கலிமுத லுறுப்பாந் தரவுதா ழிசையே துணையுறுப் பெனக்கூன் சுரிதகம் வண்ணக மம்போ தரங்க மாமிவை நான்கே. | 229. |
தரவு தாழிசை தன்றளை வெண்டளை யிரண்டுறழ்ந் தளவடி யிரண்டும் பலவுமாம். | 230. |
வண்ணக மளவடி வரைமுதற் பலவடி நான்காதி யெட்டீறாய் நடைமுடு கராகமாம். | 231. |
அம்போ தரங்க மம்பளாந் திரைபோ லளவடி யீரடி யிரண்டும் பேரெண் ணளவடி யோரடி நான்கு மளவெண் சிந்தடி யோரடி யெட்டு மிடையெண் குறளடி யோரடி நானான்குஞ் சிற்றெண் ணெட்டு நானான்கு நான்கு மெட்டுமாய்ச் சுருங்கவு மந்நாற் றுணையுறுப் புடைத்தே. | 232. |
சுரிதக மென்ப சுரிந்தெனக் கூனின் பின்னகவல் வெள்ளை யாக முடிவதே. | 233. |
நேரிசை யம்போ தரங்க வண்ணக மென்றொத் தாழிசை யிவைமூன் றிவற்றுட் டரவொன் றொருமுத் தாழிசை தனிநிலை சுரிதக மெனநாற் றுணைவரு நேரிசை தாழிசைக் கீழம்போ தரங்கஞ் சாரவு மம்போ தரங்கமே லராக மணையவு மம்போ தரங்கமே யாம்வண் ணகமாம். | 234. |
கொச்சகக் கலியைங் கூறு பாடெனத் தரவே தரவிணை தாழிசை சிலபல சிலபிறழ்ந் துறழ்ந்துஞ் சிலமயங் கியுமாம். | 235. |
வெண்கலிக் களவடி: பலதளை பலதொடை மண்டியீற் றசைச்சீர் வந்துசிந் தடியாங் கலிவெண் பாவெண் கலியென நடப்பினும் வலிவெண் டளைதவா வரவும் பலதொடை நேரிசை வெண்பா நேரவும் பெறுமே. | 236. |
கட்டளைக் கலிப்பாக் காட்டுங் காலை யொருமாக் கூவிள மொருமூன் றியைய நேர்பதி னொன்று நிரைபன்னீ ரெழுத்தாய் நடந்தடிப் பாதியாய் நான்கடி யொத்தவாய் வருவ தின்று வழங்கு நெறியே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 18 | 19 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம், Thonnool Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்