சிந்துப்பாவியல்
7.
உயிர் உயிர்மெய்களில் குறிலும் நெடிலும் தனித்தும்ஒற் றடுத்தும் ஓரசை யாகும்.
கருத்து : குறிலாகவும், நெடிலாகவும் உள்ள உயிரெழுத்துகளும், உயிர்மெய்க் குற்றெழுத்துகளும், உயிர்மெய் நெட்டெழுத்துகளும் தனித்து வரின் ஓரசையாகும், ஒற்றடுத்து வரினும் ஓரசையாகும்.
காட்டு: | அ | ஆ |
அல் | ஆல் | |
க | கா | |
கல் | கால் |
அசை பிரியும் போது ஒற்றெழுத்துகள் முன் அசையின் இறுதியில் சேர்க்கப்படும். அசையானது ஒற்றெழுத்தால் தொடங்காது. ஒற்றெழுத்து, சொற்களுக்கு முதலாக வருதல் தமிழ் மரபன்று. அதனால் அசைகளும் சீர்களுக்கும், வரிகளுக்கும் முதலாக வைப்பதில்லை.
க என்னும் குறிலும், கல் என்ற குறிலொற்றும், ஆ என்ற நெடிலும், ஆல் என்ற நெடிலொற்றும் எப்படிச் சமமாக ஒலிக்கின்றன என்ற ஐயம் எழலாம். எழுத்திலக்கணத்தில் அவை முறையே ஒன்று, ஒன்றரை, இரண்டு, இரண்டரை மாத்திரைகளைப் பெறும். ஆனால் சந்தப்பாவிலக்கணத்தில் அவை முறையே ஒன்று, இரண்டு, இரண்டு, இரண்டு மாத்திரைகளைப் பெறும். (சந்தப்பா இலக்கணப்படிக் குறில் ஒரு மாத்திரை, குறிலொற்று, நெடில், நெடிலொற்றுகள் இரண்டு மாத்திரை) அது போல் சிந்துப்பாவின் அசைகள் தனியான வேறு இயல்பைப் பெறுகின்றன. அவையனைத்துமே சமமான ஓசையுடையவை. (சிந்துப்பாவின் அசைகள் நீளத்தில் சமமானவை என்று கூறலாமேயன்றி அவற்றை அளவிட்டு இத்தனை மாத்திரை என்று கூறுதல் இயலாது)
8. குறிலசையும் நெடிலசையும்
- குறிலே குறிலசை ஆகும்; நெடிலும்,
குறிலொற் றடுத்ததும், நெடிலொற் றடுத்ததும்
நெடிலசை யாக நிகழு மென்க.
விளக்கம் : இயற்பாவில் நேரசை, நிரையசை என்ற பாகுபாடுகள் உள்ளன. ஆனால் அந்தப் பாகுபாடுகள் சிந்துப்பாவில் இல்லை. சிந்துப்பாவில் குறிலசை, நெடிலசை என்ற இரண்டே பாகுபாடுகள் உள்ளன.
காட்டு : | குறிலசை என்பது : | தனி உயிர்க் குறில் (அ) |
உயிர்மெய்க் குறில் (க) | ||
நெடிலசை என்பது : | உயிர்நெடில் (ஆ) | |
உயிர்மெய் நெடில் (கா) | ||
உயிர்க் குறிலொற்று (அல்) | ||
உயிர்மெய்க் குறிலொற்று (கல்) | ||
உயிர் நெடிலொற்று (ஆல்) | ||
உயிர்மெய் நெடிலொற்று (கால்) |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்