சிந்துப்பாவியல்
41. இரட்டைக் கும்மி
-
எண்சீர் அடிகள் இரட்டி வருவதால்
இரட்டைக் கும்மியென் றியம்பப் பெறுமே
விளக்கம் : கும்மியில் எண்சீரடிகள் இரண்டு ஒரு தொடையாய் வருமென்று மேலே கூறப்பட்டது) (நூ.38) இங்கு அதன் இரு மடங்காக வரும் கும்மி என்று கூறப்படுகின்றது.
காட்டு : இரட்டைக் கும்மி
-
தில்லைச்சி தம்பரம் தன்னிலொ ருநாள்
திருநட்ட மாடும்சி வனுடனே
தேவிசி வகாமி நாயகி அந்தத்
திருநீல பத்தன்நெ றிஉரைக்கச்
சொல்லச்செ விதனில் கேட்டாள் நாளும்
சோதித்த வன்தன்னை ச் சூதாக்கிச்
சொன்னமொ ழிநிலை யாமலெந் நாளும்
சுகந்தனில் வாழநி னைத்திடென் றான் (திருநீ.பள்ளு.தொடை284)
42.
-
எடுப்பு முடிப்புடன் இயலும் கும்மியும்
ஓரடிக் கும்மியும் உளவா கும்மே.
விளக்கம் : இதுவரை கண்டவை வெறும் கண்ணிகளாகவே இயங்கும் கும்மிகள். கும்மிகளில் எடுப்பு, முடிப்புகளுடன் அமைந்தவையும் உண்டு.
காட்டு :
-
எடுப்பு
கொம்மியடி பெண்கள் கொம்மியடி - இரு
கொங்கை குலுங்கவே கொம்மியடி
நம்மையாளும் பொன்னம்பல வாணனை
நாடிக் கொம்மிய டியுங்கடி - பதம்
பாடிக் கொம்மிய டியுங்கடி (கொம்மி)
முடிப்பு
காம மகற்றிய தூயனடி - சிவ
காம சவுந்தரி நேயனடி
மாமறை யோது செவ் வாயனடி - மணி
மன்றெனு ஞானவா காயனடி (கொம்மி)
(திருவருட்பா.2964-2966)
காட்டு : ஒரடிக் கும்மி வக்காவும் கொக்கும்வ ருகுது பார் - நல்ல வங்கார சாமிகு ளந்தேடி. (தொடை.ப.292.மேற்)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்