முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 280. வழிநினைந்து இருத்தல் அரிதே!
புறநானூறு - 280. வழிநினைந்து இருத்தல் அரிதே!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்
திணை: பொதுவியல்
துறை: ஆந்தப் பையுள்
என்னை மார்பிற் புண்ணும் வெய்ய நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்; நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா; துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்; அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்; |
5 |
நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா; துடிய! பாண ! பாடுவல் விறலி! என்ஆ குவிர்கொல் ? அளியிர்; நுமக்கும் இவண் உறை வாழ்க்கையோ, அரிதே ! யானும் |
10 |
மண்ணுறு மழித்தலைத் , தெண்ணீர் வாரத், தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல் சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும் கழிகல மகளிர் போல, வழிநினைந்து இருத்தல், அதனினும் அரிதே! |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 278 | 279 | 280 | 281 | 282 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 280. வழிநினைந்து இருத்தல் அரிதே!, அரிதே, வழிநினைந்து, இருத்தல், இலக்கியங்கள், புறநானூறு, உண்ணும், அதனினும், ஒழுக, ஆம்பல், ஏற்ற, விளக்கும், எட்டுத்தொகை, சங்க, விரிச்சி, செம்முது