முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 1. இறைவனின் திருவுள்ளம்!
புறநானூறு - 1. இறைவனின் திருவுள்ளம்!
பாடியவர்:பெருந்தேவனார்.
பாடப்பட்டோன்: இறைவன்
கண்ணி கார்நறுங் கொன்றை; காமர் வண்ண மார்பின் தாருங் கொன்றை; ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப; கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை |
5 |
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே; பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்; பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே; |
10 |
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய, நீரறவு அறியாக் கரகத்துத், தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 1. இறைவனின் திருவுள்ளம்!, இலக்கியங்கள், கொன்றை, இறைவனின், புறநானூறு, திருவுள்ளம், பிறை, எல்லா, ஆகின்று, நீர், அவன், காளைமாடு, கொடியும், எட்டுத்தொகை, சங்க, ஊர்தி, அந்தணர், படுமே