முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 278. பெரிது உவந்தனளே!
புறநானூறு - 278. பெரிது உவந்தனளே!
பாடியவர்: காக்கைபாடினியார் நச்செள்ளையார்
திணை: தும்பை
துறை: உவகைக் கலுழ்ச்சி
நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள் முளரி மருங்கின், முதியோள் சிறுவன் படைஅழிந்து மாறினன் என்று பலர் கூற, மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன் முலைஅறுத் திடுவென், யான் எனச் சினைஇக், |
5 |
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச், செங்களம் துழவுவோள், சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ, ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 276 | 277 | 278 | 279 | 280 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 278. பெரிது உவந்தனளே!, இலக்கியங்கள், உவந்தனளே, கண்டு, புறநானூறு, பெரிது, வாளால், மகிழ்ந்தாள், மகன், பலர், எட்டுத்தொகை, சங்க, ஆயின்