புறநானூறு - 279. செல்கென விடுமே!
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார்
திணை: வாகை
துறை: மூதின் முல்லை
கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே; மூதின் மகளிர் ஆதல் தகுமே; மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை, யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே; நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன், |
5 |
பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே; இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி, வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப், பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி, ஒருமகன் அல்லது இல்லோள், |
10 |
செருமுக நோக்கிச் செல்க என விடுமே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 277 | 278 | 279 | 280 | 281 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 279. செல்கென விடுமே!, இலக்கியங்கள், விடுமே, இவளது, செல்கென, இவள், கெட்டொழியட்டும், போரில், புறநானூறு, எண்ணம், மாண்டான், பகைவரின், மூதில், நடந்த, கொடுத்து, மூதின், சங்க, எட்டுத்தொகை, மகளிர், உற்ற, எண்ணெய், இன்றும், செருவிற்கு, நோக்கிச்