முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 3.திருவண்டப் பகுதி
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 3.திருவண்டப் பகுதி

3.திருவண்டப் பகுதி
(தில்லையில் அருளயது)
இணைக் குறள் ஆசிரியப்பா
(தில்லையில் அருளயது)
இணைக் குறள் ஆசிரியப்பா
மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி அருச்சனை வயல் உள் அன்புவித்து இட்டுத் தொண்ட உழவர் ஆரத் தந்த அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க | 95 |
கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க அரும்தவர்ககு அருளும் ஆதி வாழ்க அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க சூழ்இருள் துன்பம் துடைப்போன் வாழ்க | 100 |
எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன் வாழ்க கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க பேர்அமைத் தோளி காதலன் வாழ்க ஏதிலார்ககு ஏதில்எம் இறைவன் வாழ்க காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க | 105 |
நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய் நிற்பன நிறீஇச் | 110 |
சொல்பதம் கடந்த தொல்லோன் உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன் கண்முதல் புலனாற் காட்சியும் இல்லோன் விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன் பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் | 115 |
ஒழிவற நிறைந்து மேவிய பெருமை இன்று எனக்கு எளிவந்து அருளி அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள் இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி | 120 |
ஊற்றிருந்த துள்ளங் களிப்போன் போற்றி ஆற்றா இன்பம் அலர்ந்தலை போற்றி போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன் மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம் மின்ஒளி கொண்ட பொன்னொளி திகழத் | 125 |
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும் முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும் மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் | 130 |
இத்தந் திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு அத்தந் திரத்தில் அவ்வயின் ஒளித்தும் முனிவு அற நோக்கி நனிவரக் கௌவி ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து வாள்நுதல் பெண்என ஒளித்தும் சேண்வயின் | 135 |
ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போய்த் துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் ஒன்று உண்டில்லை யென்றறி வொளித்தும் பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் | 140 |
ஒளிfக்கும் சோரனைக் கண்டனம் ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில் தாள்தனை இடுமின் சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின் பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் | 145 |
தன்நேர் இல்லோன் தானே ஆன தன்மை என் நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி அறைகூவி ஆட்கொண்டருளி மறையோர் கோலம் காட்டி அருளலும் உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு | 150 |
அலைகடல் திரையில் ஆர்த்து ஆர்த்து ஓங்கித் தலை தடுமாறா வீழ்ந்துபுரண் டலறிப் பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும் கடைக்களிறு ஏற்றாத் தடம்பெரு மதத்தின் | 155 |
ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தனன் ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின் வீழ்வித்து ஆங்கு அன்று அருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில் | 160 |
ஒருத்தரும் வழாமை யொடுக்கினன் தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன் சொல்லுவது அறியேன் வாழி முறையோ தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு | 165 |
அருளியது அறியேன் பருகியும் ஆரேன் விழுங்கியும் ஒல்ல கில்லேன் செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து உவர்க்கடல் நள்ளும்நீர் உள்அகம் ததும்ப வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் | 170 |
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய அற்புதம் ஆன அமுத தாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது | 175 |
உள்ளம் கொண்டோ ர் உருச்செய் தாங்கு எனக்கு அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில் கருணை வான்தேன் கலக்க | 180 |
அருளொடு பரா அமுது ஆக்கினன் பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே |
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
3.திருவண்டப் பகுதி - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ஒளித்தும், போற்றி, நோக்கி, செய்தனன், அறியேன், ஆக்கினன், ஆர்த்து, கொண்டு, இல்லோன், எனக்கு, திரத்தில், ஆர்மின்