ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்
2.2.4 நான்காவது - சுட்டுவினா
100. |
அ இ உம்முதல வைம்பாற் சுட்டே யொன்றன் பாலவை யாய்த மிடையெனவும் பலவின் பாலவை வவ்வீற் றனவுமா மிவைகீழ் மூவின மியைபுளி முறையே யாய்த மெலியியல் பாகுமென்ப. | 101. |
தொடர் அ இ உச் சுட்டெழுத் தென்ப வவைவந் தணைய வனைத்துமெய் யிரட்டு முயிர்வரி னிருவவ் விடைவரலு ரித்தா மெகர வினாவு மிந்நடை யுடைத்தே. | 102. |
"எயா முதலும் ஆ ஓ வீற்றும் ஏயிரு வழியும் வினாவா கும்மே யெவனென் வினாவினைக் குறிப்பிழி யிருபால்." |
நான்காவது - சுட்டுவினா - முற்றிற்று
இரண்டாமோத்துப் பெயர் - முற்றிற்று.
2.3 மூன்றாமோத்துவினைச் சொல்லியல்
103. |
வினைமுற் றொருமூன் றெச்ச மிரண்டு வினைகுறிப் பெனவிவை வினையின் வகுப்பே. | 104. |
பெயரே யேற்றிமற் றொன்றனை வேண்டா தேற்பது வினைவினைக் குறிப்பு முற்றே. |
2.3.1 முதலாவது - முக்காலமுற்றுவினை
105. |
பொழுது கொள்வினை வினைப்பகு பதமே பகுதி யேவ லெனும்பகாப் பதமாகும் என்ஏன் எம்ஏம் ஒம்அம் ஆம்தன்மை ஐஆய்இ இர்ஈர் முன்னிலை அன்ஆன் அள்ஆள் அர்ஆர் உஅ படர்க்கை வினையின் விகுதி மீண்டுள பிறவுங் கள்ளெனப் பலவொழி பன்மையின் மிகலுமாம். | 106. |
"அம்ஆம் என்பன முன்னிலை யாரையும் எம்ஏம் ஓம்இவை படர்க்கை யாரையும் உம்மூர் கடதற விருபா லாரையுந் தன்னொடு படுக்குந் தன்மைப் பன்மை." | 107. |
செய்யுமென் முற்றே சேரும் பலரொழி மற்றைப் படர்க்கையு மற்றத னீற்றய லுயிரு முயிர்மெய்யு மொழிந்தே யஃகலும் பலவின்பாற் கள்ளெனப் பற்றி மிகலுமாம். | 108. |
இறந்த காலத் திடைநிலை தடறவொற் றின்னே மூவிடத் தைம்பாற் கேற்பன. | 109. |
நிகழ்பொழு தாநின்று கின்று கிறுவென வைம்பான் மூவிடத் தாமிடை நிலையே. | 110. |
எதிர்வருங் காலத் திடைநிலை பவ்வ வைம்பான் மூவிடத் தாமிவை சிலவில. | 111. |
எதிர்கால விகுதியு ளொருமைத் தன்மை குடுதுறு வென்னுங் குற்றிய லுகரமோ டல்லன் னென்னே னாமெண் ணீறே பலர்பாற் காகும் பமார் மருமனார். | 112. |
எதிர்மறைக் கிடைநிலை யின்றிஎன் எம்ஓம் ஆய்ஈர் ஆன்ஆள் ஆர்ஆ ஆது அ வைம்பான் மூவிடத் தாகு மென்ப. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 18 | 19 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம், Thonnool Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்