ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்
5.2. இரண்டாமோத்துப் பொருளணியியல்
326. |
பொருளணி யாறைம் புணர்ப்பெனத் தன்மை யுரியபல விகற்ப வுவமை யுருவகம் வேற்றுப் பொருள்வைப்பே வேற்றுமை தானே யொட்டணி யவநுதி யூகாஞ் சிதமே நுட்பம் புகழ்மாற்றே தன்மேம்பாட் டுரையே பின்வரு நிலையே முன்ன விலக்கே சொல்விலக் கிலேசஞ் சுவையே யுதரத்த மொப்புமைக் கூட்ட மொப்புமை யேற்றம் விபாவனை விசேடம் விரோதப் பிறிதுரை விடையில் வினாவே வினவில் விடையே சித்திர மொழிபமைவு சிலேடை சங்கீரண மித்திறத் தனையவு மியம்பினர் கற்றோர். | 327. |
தன்மை யணியே தன்பொருட் குரிய வன்மை பலவும் வழுவா துரைத்தலே. | 328. |
உவமை யென்ப துரிக்குணத் தொழிற்பய னிவற்றொன்றும் பலவு மிணைந்து தம்மு ளொப்புமை தோன்றச் செப்பிய வணியே. | 329. |
உவமை விகற்பித் துரைக்குங் காலை விரிவே தொகையித ரேதரம் விபரித மறுபொரு ணியம மைய மின்சொல் கூடா வுவமை கோத்த மாலை யுண்மை யெனவிவை யுவமை வகையே. | 330. |
விரிவென விருபொருள் விதித்திற முருபிவை தெரிவுற விரித்துச் செப்புதன் மற்றுந் தொகையொப் பாங்குணந் தொழில்பயன் றொகலே. | 331. |
இதரேதர மென்ப விருபொருண் மாறலே. | 332. |
விபரீத பொருளா விளம்பிய வுவமையே. | 333. |
மறுபொரு ளாம்பொருள் வந்தொப் புரைத்தலே. | 334. |
நியமமாம் பிரிநிலை யேகா ரம்வந் தியனிக ரொன்றுரைத் தேனைய நீக்கலே. | 335. |
ஐயங் கொண்டன விருபொரு ளறைத லைய வுவமை யாகு மென்ப. | 336. |
இன்சொல் லுரிமையா மிணையிவை யென்ற பின்சொல் லியபொருட் பெற்றிமி யுரைத்தலே. | 337. |
கூடா வுவமையே கூறின நிகர்க்கண ணூடா தவைபொருட் குரியன வெனலே. | 338. |
மாலை யுவமையா மருவிய பலநிகர் மாலையாக் கோத்தபின் வனைபொரு ளியம்பலே. | 339. |
உண்மை யுவமையா முவமை மறுத்தென நுண்மையிற் பொருடிற நுவன்று விளக்கலே. | 340. |
உவமை வழுவென்ப வுரியபான் மாற றவன்மிக லுயர்த றாழ்தலென் றைந்தே. | 341. |
உருவக மென்ப வுவமை வேறு பொருள்வே றின்றிப் புணரத் தொடுத்தலே. | 342. |
வேற்றுப்பொருள் வைப்பே விளங்கினது தொடங்கி யீற்றி னுதலிய வேற்றி யுரைத்தலே. | 343. |
வேற்றுமை யென்ப முன்னாற்றிய விருபொருள் சாற்றிய வுவமையில் வேற்றுமைப் படுத்தலே. | 344. |
ஒட்டெனத் தன்பொரு ளுரையா துவமை சுட்டலி லப்பொரு டோன்ற வியம்பலே. | 345. |
அவநுதி யென்ப வாய்மெய் மறுத்துமற் றிவறிய வொன்றனை யேற்றி யியம்பலே யுருவகங் கூட்டி னெண்சிறப் பாகும். | 346. |
ஊகாஞ் சிதமென்ப வுரிமை யொழித்துமற் றாகோர் குறிப்பொரு ளறைந்து பொருத்தலே. | 347. |
நுட்பமாந் தெளிவுற நுவலாத வற்றையு முட்படுத் திடுங்குறிப் புரையரி துணர்த்தலே. | 348. |
புகழ்மாற் றென்ப புகழ்வது போலிகழ்ந் திகழ்வது போற்புகழ்ந் தியம்பிய நிலையே. | 349. |
தன்மேம் பாட்டுரை தான்றற் புகழ்தலே. | 350. |
பின்வரு நிலையே பிறழ்ந்தெனப் பலவயின் முன்வருஞ் சொல்பொருள் பின்னும் வருவதே. | 351. |
முன்ன விலக்கென்ப முன்னத்தின் மறுத்தலே. | 352. |
சொல்விலக் கொன்றனைச் சொல்லிய பின்னஃக தல்லென மறுத்தல்போ லதுமிக விளக்கலே. | 353. |
இலேசமே கருத்தொளித் திடவதைக் காட்டுஞ் சத்துவம் பிறிதிற் சாற்றி மறைத்தலே. | 354. |
சுவையணி யென்ப சுடுஞ்சினங் காமம் வியப்ப வலமிழிவச் சம்வீர நகையென வெண்மெய்ப் பாட்டி னியைவன கூறி யுண்மெய்ப் பாட்டை யுணர்த்தித் தோற்றலே. | 355. |
355.உதாத்தம் பொருளிற் பதார்த்த மிகலே. | 356. |
ஒப்புமைக் கூட்ட மொத்த குணத்தவை செப்பித் தன்பொரு டெளிவுறக் கூறலே. | 357. |
ஒப்புமை யேற்ற மொன்றற்கொன் றுமிகச் செப்பிய பலவின்மேற் செய்பொரு ளேற்றலே. | 358. |
விபாவனை யென்ப விளங்கிய வுலக சுபாவனை யலத்திறந் தோற்றி யியம்பலே. | 359. |
விசேட மெனக்குறை விளம்பி யவற்றான் மேன்மை படப்பொருள் விளக்கிய நெறியே. | 360. |
விரோத மென்ப விகற்ப முரண்படு மன்னிய சொற்பொரு ளுன்னிய மாக்கலே. | 361. |
பிறிதுரை யணியே பெருந்துயர் முதற்காட்ட முன்னிலை யாரொடு மொழித லொழித்துப் பன்னிலை யாரொடு பகர்த லென்ப. | 362. |
விடையில் வினாவே விடைவேண் டாமையு மடைய லாரையு மஃறிணை யவற்றையு மனவியப் பாதி வழங்கப் பலகுணம் வினவினாற் போல விளம்பிய நிலையே. | 363. |
வினவில் விடையே வினவினா லெனப்பிறர் மனவுணர் வுரைத்து மறுவுரை கூறலே. | 364. |
சித்திர வணியே தீட்டிய படவடி வத்திறத் தனைத்தையு மையென வகுத்தலே. | 365. |
ஒழிபணி பலவற்றை யொழித்தன வுரைத்தலே. | 366. |
அமைவணி யலலவு மாமென் றதுபோற் சமைந்து மற்றொன்றன் றகவெழ வியம்பலே. | 367. |
சிலேடை யென்ப திரிசொல் பலவிணைந் திருபய னாக வொருதொடர் புரைத்தலே. | 368. |
சங்கீரண மென்ப தகும்பல வணிவகை கொங்கீரத் தொடையெனக் கூட்டிக் கூறலே. | 369. |
சொல்லணி யாறைந்தும் பொருளணி யையாறும் புல்லணி யிருவகை புணர்ந்த தொகையென முத்தமிழ்க் கிவையெலா முகமறை சிகைபொறை யத்தகைத் தாகர வணிகல னாகக்கொண் டெந்நூற்கு முதலாம் யுத்தி யஃதில்லா லந்நூல் பித்த னகங்கை வாளென்ப. | 370. |
எந்நூ னிலையினு மியைபெலா முணர்த்துது மந்நூ லரியதென வஃ கினு மொறுநூல் காட்டிய பலநடைக் கடைப்பிடித் தவற்றொடு கூட்டிய மற்றவை கொள்ப நல்லோரென வெழுத்துச் சொற்பொருள் யாப்பணி யென்றிவண் வழுத்திய வைம்பொருள் வழக்கஞ் சுருக்கித் தொன்னூ னடையொடு சிறந்த புறநிலைப் பன்னூ னடையிற் பழையன கழிதலும் புதியன புகுதலும் புலமையின் மிக்கோர் விதியென விம்முறை விரும்பி வழுவில முந்நூல் விளக்கிய முத்தமிழ்த் தொன்னூல் விளக்கந் துலங்கிய வாறே. |
இரண்டாமோத்துப் பொருளணியியல் - முற்றிற்று
ஐந்தாவது - அணியதிகாரம் - முற்றிற்று
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம், Thonnool Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்