முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 338. ஓரெயின் மன்னன் மகள்!
புறநானூறு - 338. ஓரெயின் மன்னன் மகள்!
பாடியவர்: குன்றூர் கிழார் மகனார்
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
சிறப்பு: நெடுவேள் ஆதனுக்கு உரிய போந்தைப்பட்டினத்தைப் பற்றிய குறிப்பு.
ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின், நெல் மலிந்த மனைப், பொன் மலிந்த மறுகின், படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின், நெடுவேள் ஆதன் போந்தை அன்ன, பெருஞ்சீர் அருங்கொண் டியளே ; கருஞ்சினை |
5 |
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் மலைந்த சென்னியர், அணிந்த வில்லர், கொற்ற வேந்தர் தரினும், தன்தக வணங்கார்க்கு ஈகுவன் அல்லன்- வண் தோட்டுப் பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று |
10 |
உணங்குகலன் ஆழியின் தோன்றும் ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 336 | 337 | 338 | 339 | 340 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 338. ஓரெயின் மன்னன் மகள்!, மன்னன், இலக்கியங்கள், போந்தை, மகள், வயல், ஓரெயின், ஆதன், அவன், நெடுவேள், புறநானூறு, கைப்பற்ற, கிடக்கும், போலவும், முடியாது, மிதக்கும், என்னும், கோட்டை, ஓரெயில், மலிந்த, காஞ்சி, சங்க, எட்டுத்தொகை, பரந்த, நீர், தோன்றும், பொன், நெல், தந்தை