முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 337. இவர் மறனும் இற்று!
புறநானூறு - 337. இவர் மறனும் இற்று!
பாடியவர்: கபிலர்
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்; கவிகை மண்ணாள் செல்வ ராயினும், வாள்வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர். வரலதோறு அகம் மலர . .. .. .. .. ஈதல் ஆனா இலங்குதொடித் தடக்கைப் |
5 |
பாரி பறம்பின் பனிச்சுனை போலக், காண்டற்கு அரியளாகி, மாண்ட பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய துகில்விரி கடுப்ப நுடங்கித், தண்ணென அகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கிய |
10 |
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு, மனைச்செறிந் தனளே, வாணுதல்; இனியே. அற்றன் றாகலின், தெற்றெனப் போற்றிக், காய்நெல் கவளம் தீற்றிக், காவுதொறும் கடுங்கண் யானை காப்பனர் அன்றி, |
15 |
வருத லானார் வேந்தர்; தன்னையர் பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல் குருதி பற்றிய வெருவரு தலையர் மற்றுஇவர் மறனும் இற்றால்; தெற்றென யாரா குவர்கொல் தாமே - நேரிழை |
20 |
உருத்த பல்சுணங்கு அணிந்த மருப்புஇள வனமுலை ஞெமுக்கு வோரே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 335 | 336 | 337 | 338 | 339 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 337. இவர் மறனும் இற்று!, அவள், இலக்கியங்கள், மறனும், இவர், புறநானூறு, இற்று, வேந்தர், நேரிழை, மிக்கவன், அணிந்த, அகில், யாரோ, திகழும், முடியாது, வாரி, கபில, காஞ்சி, சங்க, எட்டுத்தொகை, பாரி, போலக், வாணுதல், நிறைந்த, பெண்மை, கவளம்