முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 339. வளரவேண்டும் அவளே!
புறநானூறு - 339. வளரவேண்டும் அவளே!
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு மடலை மாண்நிழல் அசைவிடக், கோவலர் வீததை முல்லைப் பூப்பறிக் குந்து; குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் நெடுநீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து; |
5 |
தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர் கடல் ஆடிக் கயம் பாய்ந்து, கழி நெய்தற் பூக் குறூஉந்து; பைந்தழை துயல்வருஞ் செறுவிறற் .. .. .. .. .. . . ..லத்தி |
10 |
வளர வேண்டும், அவளே, என்றும்- ஆரமர் உழப்பதும் அமரிய ளாகி, முறஞ்செவி யானை வேந்தர் மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 337 | 338 | 339 | 340 | 341 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 339. வளரவேண்டும் அவளே!, வளரவேண்டும், அவளே, இலக்கியங்கள், வேந்தர், அவள், மகளிர், புறநானூறு, பாய்ந்து, முயல், யானை, கோவலர், எட்டுத்தொகை, சங்க, காஞ்சி, முல்லைப், தொடலை