புறநானூறு - 336. பண்பில் தாயே!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி
துறை: பாற் பாற் காஞ்சி
வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே; கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்; ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின் களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே; |
5 |
இயவரும் அறியாப் பல்லியம் கறங்க, அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்; அறன்இலன் மன்ற தானே-விறன்மலை வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத் |
10 |
தகைவளர்த்து எடுத்த நகையொடு, பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 334 | 335 | 336 | 337 | 338 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 336. பண்பில் தாயே!, இலக்கியங்கள், தாயே, பண்பில், புறநானூறு, வேங்கை, செய்வதறியாமல், ஏந்திய, செய்யவில்லை, காஞ்சி, எட்டுத்தொகை, சங்க, பாற், தந்தையும்