முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 233. முல்லை - தலைவன் கூற்று
குறுந்தொகை - 233. முல்லை - தலைவன் கூற்று
(தலைவியை மணந்து கொள்ளாமல் வினைமேல் பிரிந்து சென்றதலைவன் மீண்டு வருகையில் பாகனுக்குத் தலைவியினது ஊரைக்காட்டியது.)
கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி கொன்றை யொள்வீ தாஅய்ச் செல்வர் பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன காரெதிர் புறவி னதுவே உயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் |
5 |
வரைகோ ளறியாச் சொன்றி நிரைகோற் குறுந்தொடி தந்தை யூரே! |
|
- பேயனார். |
முடிபு: குறுந்தொடியின் தந்தையூர், புறவினது.
கருத்து: முல்லை நிலத்தின் இடையே தோன்றும், அதுவே தலைவியின்ஊராகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 231 | 232 | 233 | 234 | 235 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 233. முல்லை - தலைவன் கூற்று, முல்லை, இலக்கியங்கள், குறுந்தொகை, தலைவன், கூற்று, உடைய, நிலத்தின், எட்டுத்தொகை, சங்க, நீரொடு