முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 400. முல்லை - தலைவன் கூற்று
குறுந்தொகை - 400. முல்லை - தலைவன் கூற்று
(தான் மேற்கொண்ட வினை நிறைவேறப் பெற்று மீண்டு வந்து தலைவியைக் கண்ட தலைவன் தேர்ப்பாகனை நோக்கி, “இன்று விரைவில் தேர்விட்டு இவனை இல்லின்கண் சேரச் செய்யோமாயின் தலைவியின் காமநோயைக் களையா நிலையினே மாவேமென எண்ணி நன்று செய்தாய்! நீ தேரோடு தலைவியின் உயிரையும் தந்தாய்” என்று பாராட்டிக் கூறியது.)
சேயாறு செல்வா மாயின் இடரின்று களைகலம் காமம் பெருந்தோட் கென்று நன்றுபுரிந் தெண்ணிய மனத்தை யாகி முரம்புகண் உடைய வேகிக் கரம்பைப் புதுவழிப் படுத்த மதியுடை வல்லோய் |
5 |
இன்று தந்தனை தேரோ நோயுழந் துறைவியை நல்க லானே. |
|
- பேயனார். |
முடிபு: வலவோய், உறைவியை நல்கலான், இன்று தேரோ தந்தனை?
கருத்து: உரிய காலத்தே விரைவில் தேரைச் செலுத்திய நின் திறமை பாராட்டற்குரியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 395 | 396 | 397 | 398 | 399 | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 400. முல்லை - தலைவன் கூற்று, தந்தனை, இலக்கியங்கள், தலைவன், குறுந்தொகை, கூற்று, முல்லை, இன்று, காமநோயைக், தேரோ, விரைவில், எட்டுத்தொகை, சங்க, தலைவியின்