முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 134. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 134. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் வரைபொருட்குப் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவிப்ப அத்தோழியை நோக்கி, “தலைவன் பிரியாமல் இருப்பின் அவனது நட்பு நன்று; பிரிவுண்மையின் வருத்தம் உண்டாகின்றது” என்று தலைவி கூறியது.)
அம்ம வாழி தோழி நம்மொடு பிரிவின் றாயின் நன்றுமற் றில்ல குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப் பூவுடை அலங்குசினை புலம்பத் தாக்கிக் கல்பொரு திரங்கும் கதழ்வீழ் அருவி |
5 |
நிலங்கொள் பாம்பின் இழிதரும் விலங்குமலை நாடனொடு கலந்த நட்பே. |
|
- கோவேங்கைப் பெருங்கதவனார். |
முடிபு: தோழி, நாடனொடு கலந்த நட்பு, பிரிவின்றாயின் நன்று.
கருத்து: தலைவன் பிரிவை நான் ஆற்றேனாயினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 132 | 133 | 134 | 135 | 136 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 134. குறிஞ்சி - தலைவி கூற்று, தோழி, இலக்கியங்கள், தலைவி, கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, நாடனொடு, கலந்த, நன்று, தலைவன், எட்டுத்தொகை, சங்க, நட்பு