முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 132. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 132. குறிஞ்சி - தலைவன் கூற்று
(பேரறிவுடைய நீ ஒரு மகள் திறத்து உள்ளமுடைதல் அழகோவென இடித்துரைத்த பாங்கனை நோக்கித் தலைவியின் இயல்பும் வனப்பும் கூறி, “ இத்தகைய தன்மையுடையாளை யான் எங்ஙனம் மறந்தமைவேன்!” என்று தலைவன் சொல்லியது.)
கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள் குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே யாங்குமறந் தமைகோ யானே ஞாங்கர்க் கடுஞ்சுரை நல்லா னடுங்குதலைக் குழவி தாய்காண் விருப்பி னன்ன |
5 |
சாஅய்நோக் கினளே மாஅ யோளே. | |
- சிறைக்குடியாந்தையார். |
முடிபு: மாஅயோள், கவவுக்கடுங்குரையள்; வனப்பினள்; முலையள்; கூந்தலள்; நோக்கினள்; யான் யாங்கு மறந்தமைகு!
கருத்து: தலைவி மறத்தற்கரிய இயல்புடையவள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 130 | 131 | 132 | 133 | 134 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 132. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, யான், குறுந்தொகை, கூற்று, முலையள், தலைவி, சங்க, எட்டுத்தொகை, வனப்பினள்