முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 136. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 136. குறிஞ்சி - தலைவன் கூற்று
(“நீ காம நோயுறல் தகாது” என்று பாங்கனை நோக்கித் தலைவன், “காமம் யாவரிடத்தும் இயல்பாக உள்ளதே; ஆயினும் அது வெளிப்படற் குரியதொரு காலத்தை யுடையது” என்று கூறியது.)
காமங் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் கடுத்தலுந் தணிதலும் இன்றே யானை குளகுமென் றாள்மதம் போலப் பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே. |
5 |
- மிளைப்பெருங் கந்தனார். |
முடிபு: காமம் காமம் என்ப; காமம் அணங்கும் பிணியும் அன்று; கடுத்தலும் தணிதலும் இன்று; அது காணுநர்ப் பெறின் பாணியும் உடைத்து.
கருத்து: காமம் இயல்பாகவே ஒருவரிடம் இருந்து உரிய காலத்தில் வெளிப்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 134 | 135 | 136 | 137 | 138 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 136. குறிஞ்சி - தலைவன் கூற்று, காமம், தலைவன், இலக்கியங்கள், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, யானை, பாணியும், காணுநர்ப், அன்று, தணிதலும், என்ப, எட்டுத்தொகை, சங்க, அணங்கும், பிணியும்