அகநானூறு - 339. பாலை
வீங்கு விசை, பிணித்த விரை பரி, நெடுந் தேர் நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில், பாம்பு என முடுகுநீர் ஓட, கூம்பிப் பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப, அற்சிரம் நின்றன்றால், பொழுதே; முற்பட |
5 |
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து ஆண்மை வாங்க, காமம் தட்ப, கவை படு நெஞ்சம்! கண்கண் அகைய, இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி, ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்; |
10 |
நோம்கொல்? அளியள் தானே யாக்கைக்கு உயிர் இயைந்தன்ன நட்பின், அவ் உயிர் வாழ்தல் அன்ன காதல், சாதல் அன்ன பிரிவு அரியோளே! |
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - நரை முடி நெட்டையார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 337 | 338 | 339 | 340 | 341 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அன்ன, உயிர்