அகநானூறு - 340. நெய்தல்
பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து, புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி, மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து, வலவன் வண் தேர் இயக்க, நீயும் செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம |
5 |
'செல்லா நல் இசை, பொலம் பூண், திரையன் பல் பூங் கானற் பவத்திரி அன்ன இவள் நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லென, கழியே ஓதம் மல்கின்று; வழியே வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்; |
10 |
சென்றோர் மன்ற; மான்றன்று பொழுது' என, நின் திறத்து அவலம் வீட, இன்று இவண் சேப்பின் எவனோ பூக் கேழ் புலம்ப! பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத் தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே; |
15 |
வடவர் தந்த வான் கேழ் வட்டம் குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் திண் திமில் எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர் கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன், |
20 |
கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை தண் கடல் அசைவளி எறிதொறும், வினை விட்டு, முன்றில் தாழைத் தூங்கும் தெண் கடற் பரப்பின், எம் உறைவு இன், ஊர்க்கே? |
பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 338 | 339 | 340 | 341 | 342 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கேழ், மீன்