அகநானூறு - 400. நெய்தல்
நகை நன்று அம்ம தானே 'அவனொடு, மனை இறந்து அல்கினும் அலர், என நயந்து, கானல் அல்கிய நம் களவு அகல, பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை, நூல் அமை பிறப்பின், நீல உத்தி, |
5 |
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் படப் பெருகி, நெய்ம்மிதி முனைஇய கொழுஞ் சோற்று ஆர்கை நிரல் இயைந்து ஒன்றிய செலவின், செந் தினைக் குரல் வார்ந்தன்ன குவவுத் தலை, நல் நான்கு வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇ, |
10 |
பூம் பொறிப் பல் படை ஒலிப்பப் பூட்டி, மதியுடை வலவன் ஏவலின், இகு துறைப் புனல் பாய்ந்தன்ன வாம் மான் திண் தேர்க் கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரி, பால் கண்டன்ன ஊதை வெண் மணல், |
15 |
கால் கண்டன்ன வழி படப் போகி, அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண், இருள் நீர் இட்டுச் சுரம் நீந்தி, துறை கெழு மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை, பூ மலி இருங் கழித் துயல்வரும் அடையொடு, |
20 |
நேமி தந்த நெடுநீர் நெய்தல் விளையா இளங் கள் நாற, பலவுடன் பொதி அவிழ் தண் மலர் கண்டும், நன்றும் புதுவது ஆகின்று அம்ம பழ விறல், பாடு எழுந்து இரங்கு முந்நீர், |
25 |
நீடு இரும் பெண்ணை, நம் அழுங்கல் ஊரே! |
தலைமகன் வரைந்து எய்திய பின்றை, தோழி தலைமகட்குச் சொல்லியது. -உலோச்சனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கண்டன்ன, கால், படப், அம்ம, நெய்தல்