அகநானூறு - 399. பாலை
சிமையக் குரல சாந்து அருந்தி, இருளி, இமையக் கானம் நாறும் கூந்தல், நல் நுதல், அரிவை! இன் உறல் ஆகம் பருகுவன்ன காதல் உள்ளமொடு, திருகுபு முயங்கல் இன்றி, அவண் நீடார் |
5 |
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த உடைக்கண் நீடு அமை ஊறல் உண்ட, பாடு இன் தெண் மணி, பயம் கெழு பெரு நிரை வாடு புலம் புக்கென, கோடு துவைத்து அகற்றி, ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ, |
10 |
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தௌ விளி, மை இல் பளிங்கின் அன்ன தோற்றப் பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி, மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம், |
15 |
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல், வேய் கண் உடைந்த சிமைய, வாய் படு மருங்கின் மலை இறந்தோரே. |
தலைமகன் பிரிவின்கண் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 394 | 395 | 396 | 397 | 398 | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - காய், மருங்கின், அருந்தி