அகநானூறு - 337. பாலை
'சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனி, பேர் அமர் மழைக் கண், புலம்பு கொண்டு ஒழிய, ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது அன்று; ஆகலின் அவணது ஆக, பொருள்' என்று, உமணர் |
5 |
கண நிரை அன்ன, பல் கால், குறும்பொறை, தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப் படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி, 'உண்ணா மருங்குல் இன்னோன் கையது பொன் ஆகுதலும் உண்டு' என, கொன்னே |
10 |
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர், திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி, செங் கோல் அம்பினர் கைந் நொடியாப் பெயர, கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ, வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை, |
15 |
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை, கள்ளி நீழல் கதறுபு வதிய, மழை கண்மாறிய வெங் காட்டு ஆர் இடை, எமியம் கழிதந்தோயே பனி இருள் பெருங் கலி வானம் தலைஇய |
20 |
இருங் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே! |
முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 335 | 336 | 337 | 338 | 339 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நோக்கி, பிரிந்து, அன்ன, பாலை