திருவருட்பயன் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
திருவருட்பயன் - ஒன்பதாம் பத்து
9. ஐந்தெழுத்து அருள் நிலை
அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின் பொருள்நூல் தெரியப் புகின். |
81 |
இறைசத்தி பாசம் எழில்மாயை ஆவி உறநிற்கும் ஓங்காரத்து உள். |
82 |
ஊன நடனம் ஒருபால் ஒருபாலாம் ஞானநடம் தான்நடுவே நாடு. |
83 |
விரியமந மேவியவ்வை மீளவிடா சித்தம் பெரியவினை தீரில் பெறும். |
84 |
மால்ஆர் திரோதம் மலம்முதலாய் மாறுமோ மேலாகி மீளா விடின். |
85 |
ஆராதி ஆதாரம் அந்தோ அதுமீண்டு பாராதுமேல் ஓதும் பற்று. |
86 |
சிவமுதலே ஆம்ஆறு சேருமேல் தீரும் பவம் இதுநீ ஓதும் படி. |
87 |
வாசி அருளியவை வாழ்விக்கும் மற்று அதுவே ஆசுஇல் உருவமும் ஆம் அங்கு. |
88 |
ஆசில்நவா நாப்பண் அடையாது அருளினால் வாசி இடை நிற்கை வழக்கு. |
89 |
எல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று நில்லா வகையை நினைந்து. |
90 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவருட்பயன் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், திருவருட்பயன், நூல்கள், சாத்திரங்கள், சித்தாந்த, வாசி, இலக்கியங்கள், ஓதும்