திருவருட்பயன் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
திருவருட்பயன் -இரண்டாம் பத்து
2.உயிரவை நிலை
பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாள் போலும் துறந்தோர் துறப்போர் தொகை. |
11. |
திரிமலத்தார் ஒன்றுஅதனில் சென்றார்கள் அன்றி ஒருமலத்தார் ஆயும் உளர். |
12 |
மூன்றுதிறத்து உள்ளாரும் மூலமலத்து உள்ளார்கள் தோன்றலர்தொத்து உள்ளார் துணை. |
13 |
கண்டவற்றை நாளும் கனவில் கலங்கியிடும் திண்திறலுக்கு என்னோ செயல் . |
14 |
பொறிஇன்றி ஒன்றும் புணராதே புந்திக்கு அறிவுஎன்ற பேர்நன்று அற. |
15 |
ஒளியும் இருளும் உலகும் அலர்கண் தெளிவு இல்எனில் என்செய. |
16 |
சத்துஅசத்தைச் சாராது அசத்துஅறியாது அங்கண்இவை உய்த்தல் சத்சத்தாம் உயிர். |
17 |
இருளில் இருளாகி எல்இடத்தில் எல்லாம் பொருள்கள் இலதோ புவி. |
18 |
ஊமக்கண் போல ஒளியும் மிக இருளே யாம்மன்கண் காணா தவை. |
19 |
அன்றுஅளவும் ஆற்றும் உயிர் அந்தோ அருள்தெரிவது என்றுஅளவு ஒன்றுஇல்லா இடர். |
20 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவருட்பயன் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், திருவருட்பயன், நூல்கள், சாத்திரங்கள், சித்தாந்த, உயிர், இலக்கியங்கள், ஒளியும்