முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » சைவ சித்தாந்த சாத்திரங்கள் » திருக்களிற்றுப்படியார்
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
*ஈறாகி யங்கே முதலொன்றா யீங்கிரண்டாய் மாறாத வெண்வகையாய் மற்றிவற்றின் - வேறாய் உடனா யிருக்கு முருவுடைமை யென்றுங் கடனா யிருக்கின்றான் காண். |
86 |
*திருஞான சம்பந்தர் தேவாரம்: திருவீழிமிழலை |
உன்னுதரத் தேகிடந்த கீட முறுவதெல்லாம் உன்னுடைய தென்னாநீ யுற்றனையோ - மன்னுயிர்கள் அவ்வகையே காணிங் கழிவதுவு மாவதுவுஞ் செவ்வகையே நின்றசிவன் பால். |
87 |
அவனே *யவனி முதலாயி னானும் அவனே யறிவாய்நின் றானும் - அவனேகாண் ஆணாகிப் பெண்ணா யலிகாகி நின்றானுங் காணாமை நின்றானுங் கண்டு. |
88 |
*அவனிமுத லாகிநின்றானும் |
இன்றுதா னீயென்னைக் 1*கண்டிருந்துங் கண்டாயோ 2*அன்றித்தா னானுன்னைக் கண்டேனோ - என்றால் அருமாயை யீன்றவள் தன் பங்கனையார் காண்பார் பெருமாயைச் சூழல் பிழைத்து. |
89 |
1*கண்டிருந்தே; 2*அன்றுதான் |
கடலலைத்தே யாடுதற்குக் கைவந்து நின்றுங் கடலளக்க வாராதாற் போலப் - படியில் அருத்திசெய்த வன்பரைவந் தாண்டதுவு மெல்லாங் கருத்துக்குச் சேயனாய்க் காண். |
90 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தாந்த, திருக்களிற்றுப்படியார், சாத்திரங்கள், நின்றானுங், அவனே, இலக்கியங்கள், காண்