முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » சைவ சித்தாந்த சாத்திரங்கள் » திருக்களிற்றுப்படியார்
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
உடம்புடைய யோகிகள்தா முற்றசிற் றின்பம் அடங்கத்தம் பேரின்பத் *தாக்கத் - தொடங்கி முளைப்பதுமொன் றில்லை முடிவதுமொன் றில்லை இளைப்பதுமொன் றில்லை யிவர். |
76 |
*தாக்கில் |
பேரின்ப மான பிரமக் கிழத்தியுடன் ஓரின்பத் துள்ளானை யுள்ளபடி - பேரின்பங் கண்டவரே கண்டார் கடலுயிர்த்த வின்னமுதம் உண்டவரே யுண்டார் சுவை. |
77 |
நங்கையினான் நாமனைத்துஞ் செய்தார்போல் நாடனைத்து நங்கையினாற் செய்தளிக்கு நாயகனும் - நங்கையினும் நம்பியாய்த் தானடுவே நாட்டப் பெறுமிதுகாண் எம்பெருமா னார்த மியல்பு. |
78 |
பொன்னிறங் கட்டியினும் பூணினு நின்றார்போல் அந்நிற மண்ணலு மம்பிகையுஞ் - செந்நிறத்தள் எந்நிறத்த ளாயிருப்ப ளெங்கள் சிவபதியும் அந்நிறத்தனா யிருப்ப னாங்கு. |
79 |
தாரத்தோ டொன்றாவர் தாரத்தோர் கூறாவர் தாரத்தோ டெங்குந் தலைநிற்பர் - தாரத்தின் நாதாந்தத் தேயிருப்பர் *நற்றானத் தேயிருப்பர் வேதாந்தத் தேயிருப்பர் வேறு. |
80 |
*நாற்றானத்தே யிருப்பர் |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், றில்லை, சித்தாந்த, திருக்களிற்றுப்படியார், சாத்திரங்கள், தேயிருப்பர், இலக்கியங்கள், தாரத்தோ