போற்றிப் பஃறொடை - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
காதிகுண மாதலினா லாடுந் திருத்தொழிலுஞ் சோதி மணிமிடற்றுச் சுந்தரமும் - பாதியாம் பச்சை யிடமும் பவளத் திருச்சடைமேல் வைச்ச நதியு மதிக் கொழுந்து - மச்சமற வாடு மரவு மழகார் திருநுதன்மேல் நீடுருவ வன்னி நெடுங்கண்ணும் - கேடிலயங் கூட்டுந் தமருகமுங் கோல வெரியகலும் பூட்டரவக் கச்சும் புலியதளும் - வீட்டின்ப வெள்ளத் தழுத்தி விடுந்தா ளினுமடியார் உள்ளத் தினும்பிரியா வொண்சிலம்புங் - கள்ளவினை |
வென்று பிறப்பறுக்கச் சாத்திவீ ரக்கழலும் ஒன்றுமுருத் தோன்றாம லுள்ளடக்கி - யென்றும் இறவாத வின்பத் தெமையிருத்த வேண்டிப் பிறவா முதல்வன் பிறந்து - நறவாருந் தாருலா வும்புயத்துச் சம்பந்த நாதனென்று பேரிலா நாதனொரு பேர்புனைந்து - பாரோர்தம் |
உண்டி யுறக்கம் பயமின்ப மொத்தொழுகிக் கொண்டு மகிழ்ந்த குணம் போற்றி - மிண்டாய வாறு சமயப் பொருளுமறி வித்தவற்றிற் பேறின்மை யெங்களுக்கே பேறாக்கித் - தேறாத சித்தந் தெளியத் திருமேனி கொண்டுவரும் அத்தகைமை தானே யமையாமல் - வித்தகமாஞ் சைவ நெறியிற் சமய முதலாக வெய்து மபிடேக மெய்துவித்துச் - செய்யதிருக் கண்ணருளா நோக்கிக் கடியபிறப் பாற்பட்ட புண்ணு மிருவினையும் போயகல - வண்ணமலர்க் கைத்தலத்தை வைத்தருளிக் கல்லாய நெஞ்சுருக்கி மெய்த்தகைமை யெல்லாம் விரித்தோதி - யொத்தொழுகுஞ் சேணா ரிருள்வடிவுஞ் செங்கதிரோன் பானிற்பக் காணா தொழியுங் கணக்கேபோ - லாணவத்தின் ஆதி குறையாம லென்பா லணுகாமல் நீதி நிறுத்து நிலைபோற்றி - மேதக்கோர் செய்யுஞ் சரியை திகழ்கிரியா யோகத்தால் எய்துஞ்சீர் முத்திபத மெய்துவித்து - மெய்யன்பாற் காணத் தகுவார்கள் கண்டாற் றமிப்பின்பு நாணத் தகுஞான நன்னெறியை - வீணே |
யெனக்குத் தரவேண்டி யெல்லாப் பொருட்கு மனக்கு மலரயன்மால் வானோர் - நினைப்பினுக்குந் தூரம்போ லேயணிய சுந்தரத்தா ளென்றலைமேல் ஆரும் படிதந் தருள்செய்த - பேராளன் தந்தபொரு ளேதென்னிற் றான்வேறு நான்வேறாய் வந்து புணரா வழக்காக்கி - முந்தியென்றன் உள்ளமென்று நீங்கா தொளித்திருந்து தோன்றி நிற்குங் கள்ளமின்று காட்டுங் கழல்போற்றி - வள்ளன்மையால் தன்னைத் தெரிவித்துத் தன்றாளி நுட்கிடந்த வென்னைத் தெரிவித்த வெல்லையின்கண் -மின்னாரும் |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
போற்றிப் பஃறொடை - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சாத்திரங்கள், சித்தாந்த, போற்றிப், பஃறொடை, இலக்கியங்கள்