போற்றிப் பஃறொடை - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
இல்லையோ பாவி பிறவாமை யென்றெடுத்து நல்லதோ ரின்சொ னடுவாகச் - சொல்லியிவர் செய்திக்குத் தக்க செயலுறுத்து வீரென்று வெய்துற் றுரைக்க விடைகொண்டு - மையறருஞ் செக்கி னிடைத்திரித்துந் தீவாயி லிட்டெரித்துந் தக்கநெருப் புத்தூண் தழுவுவித்து - மிக்கோங்கு நாராசங் காய்ச்சிச் செவிமடுத்து நாவரிந்து மீராவுன் னூனைத்தின் நென்றடித்தும் - பேராமல் அங்காழ் நரகத் தழுத்துவித்தும் பின்னுந்தம் வெங்கோப மாறாத வேட்கையரா - யிங்கொருநாள் எண்ணிமுதற் காணாத வின்னற் கடுநரகம் பன்னொடுநாட் செல்லும் பணிகொண்டு - முன்னாடிக் கண்டு கடன்கழித்தல் காரியமா மென்றண்ணிக் கொண்டுவரு நோயின் குறிப்பறிவார் - மண்டெரியிற் காச்சிச் சுடவறுக்கக் கண்ணுரிக்க நன்னிதிய மீய்த்துத்தாய் தந்தைதம ரின்புறுதல் - வாய்த்த நெறி |
யோடியதே ரின்கீ ழுயிர்போன கன்றாலே நீடுபெரும் பாவமின்றே நீங்குமென - நாடித்தன் மைந்தனையு மூர்ந்தோன் வழக்கே வழக்காக நஞ்சனைய சிந்தை நமன்றூதர் - வெஞ்சினத்தால் அல்ல லுறுத்து மருநரகங் கண்டுநிற்க வல்ல கருணை மறம்போற்றி - பல்லுயிர்க்கும் இன்ன வகையா லிருவினைக்க ணின்றருத்தி முன்னைமுத லென்ன முதலில்லோ - நல்வினைக்கண் எல்லா வுலகு மெடுப்புண் டெடுப்புண்டு செல்காலம் பின்னரகஞ் சேராமே - நல்லநெறி யெய்துவதோர் காலந்தன் னன்பரைக்கண் டின்புறுதல் |
உய்யு நெறிசிறிதே யுண்டாக்கிப் - பையவே மட்டாய் மலராய் வருநாளின் முன்னைநாண் மொட்டா யுருவா முறைபோலக் - கிட்டியதோர் நல்ல பிறப்பிற் பிறப்பித்து நாடும்வினை யெல்லை யிரண்டு மிடையொப்பிற் - பல் பிறவி யத்தமதிலன்றோ வளவென்று பார்த்திருந்து சத்தி பதிக்குந் தரம் போற்றி - முத்திதரு நன்னெறிவிஞ் ஞானகலர் நாடுமல மொன்றினையு மந்நிலையே யுண்ணின் றறுத்தருளிப் - பின்னன்பு |
மேவா விளங்கும் பிரளயா கலருக்குத் தேவாய் மலகன்மந் தீர்த்தருளிப் -பூவலயந் தன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல முன்னின்று மும்மலந்தீர்த் தாட்கொள்கை - யன்னவனுக் |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
போற்றிப் பஃறொடை - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சாத்திரங்கள், சித்தாந்த, போற்றிப், பஃறொடை, இலக்கியங்கள்