கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - மொக்குகள்
- வசந்த் எத்தனையோமுறை என்னறைக்கு வந்துபோயிருக்கிறாய் நீ. கடைசியாக வந்தபோது (அப்படித்தான் ஆகிவிட்டதே) உன் இதழ்களில் எப்போதுமிருக்கும் பூவொன்றைக் காணவில்லை. என் கண்கள் உயிர் வேட்கையில் தவிக்கிற புறா மாதிரி. பறந்தலைந்து கொண்டிருந்ததைக் கவனிக்காத மாதிரி வேறு இருந்தாய். வார்த்தைகள் ஏதாவது சொன்னால் அர்த்தங்களைத் தேடுவேனென்று நினைத்தாயோ என்னவோ? (என்னைப் பற்றித்தான் தெரியுமே உனக்கு) ஓரமாக என்னுடைய மேசையில் சாய்ந்தபடி சடையை முன்புறம் போட்டுக் கொண்டு சூட்டியிருந்த மல்லிகைச் சரத்தை ஒவ்வொன்றாய் பிய்த்தெறிந்து கொண்டே குழப்பங்களை விட்டுச்சென்றாய். எல்லாவற்றையும் சேகரித்து வைத்திருக்கிறேன் எனது மேசையின் மேல் எல்லாமே மொக்குகள். பார்க்கிறபோதெல்லாம், அவை பூக்காமலேயே போய்விட்ட சோகத்தைத் தாங்கமுடியவில்லை எனக்கு. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - மொக்குகள் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -