கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - தாமதம்
- வசந்த் தவிர்க்க முடியாத கனவொன்றில் திடுக்கிட்டித் திறக்குமென் மூடிய விழிகள். சுற்றிலும் பார்த்து சுயத்துக்கு வந்து அமைதி தேடும் மனம். நினைத்த போதெல்லாம் நிமிடத்தில் எகிறும் இரத்த அழுத்தம். இதுவரை நினைக்காத கடவுளை வேண்டி கண்களை மூடி தூக்கம் சென்ற திசை தொடர்ந்து நடக்க ஆரம்பிக்கும் என் பருத்த உடல் தாமதத்தைத் தாங்கவென்று தனிமனசொன்று வேணும். |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - தாமதம் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -